search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூன கார்கே"

    • கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது.
    • எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மல்லிகார்ஜூனா கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்துள்ளது. இருந்தபோதும் பாஜகவின் கொள்ளை தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகள், 100 நாட்களில் எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியின் மூலம் மக்களிடம் இருந்து மோடி அரசு ரூ.35 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளது.

    தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் பாஜகவை வீழ்த்தி, மோடியால் தூண்டப்பட்ட இந்த விலை உயர்வை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • இந்த முறை அவர்கள் 240 உடன் நிறுத்தப்பட்டார்கள்.
    • இன்னும் 20 இடங்கள் அதிகமாக பெற்றிருந்தால், அவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு போய் இருப்பார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    400 பார், 400 பார் என்று சொல்வதை அவர்கள் (பாஜக) பயன்படுத்தினார்கள். அவர்களுடைய 400 இடங்கள் எங்கே போனது?. இந்த முறை அவர்கள் 240 உடன் நிறுத்தப்பட்டார்கள். நாம் இன்னும் 20 இடங்கள் (மக்களவை தேர்தல்) அதிகமாக பெற்றிருந்தால், அவர்களுடைய அனைவரும் ஜெயிலுக்கு போய் இருப்பார்கள். ஜெயிலில் இருக்க அவர்கள் தகுதியானவர்கள்.

    யாரும் கோபப்படக் கூடாது. அதற்குப் பதிலாக போராட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய கேப்டன் வலிமையானவர். பயப்படாதவர். இங்குள்ள எல்லோரும் பயப்படாதவர்கள். ஜம்மு-காஷ்மீர் உள்ள எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க தலைவர்கள் இங்கே உள்ளனர். நாம் வெற்றி பெற வேண்டியது அவசியம். நாம் இணைந்து போராட வேண்டும். போராடும்போது, ஒருவருக்கொருவரும் பரஸப்பர குற்றம்சாட்டக்கூடாது.

    இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக பாஜக-வின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில் "இது காங்கிரஸ் கட்சியின் எமர்ஜென்சி மனநிலையை நினைவூட்டுகிறது. கார்கே எதிர்க்கட்சி தலைவர்களை ஜெயிலில் அடைக்க விரும்புகிறார். இந்திரா காந்தி ஜெயிலில் அடைத்தார். காங்கிரஸ் அதே மரபை பின்பற்ற விரும்புகிறது. மற்ற கட்சிகளை எதேச்சதிகாரம் எனக் கூறும்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகார செயல்களை பற்றி ஏதும் சொல்வதில்லை" என பதிலடி கொடுத்தார்.

    • குற்றசாட்டுகளுக்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது.
    • பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) இட ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் விசாரணை நடத்த கவர்னர் உத்திரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசாரும், முதலமைச்சர் பதவியிலிருநது சித்தராமையா பதவி விலக கோரி பா.ஜனதாவினரும் போட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிலமோசடி புகார் எழுந்துள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ராகுல் கார்கே. இவர் சித்தார்த் விகார் என்ற பெயரில் ஒரு கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைக்கு எஸ்.சி. இட ஒதுக்கீட்டின் கீழ் பெங்களூரு விமானவியல் பூங்காவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.பி. லஹர் சிங் சிரேயோ கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியத்தால் ராகுல் தலைமையிலான அறக்கட்டளைக்கு அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி நிலம் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றசாட்டுகளுக்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது.

    இது குறித்து கர்நாடக தொழில்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் கூறியதாவது:-

    சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. ராகுல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை அமைப்பதாக கூறியுள்ளார்.

    அவர் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதனால் அவருக்கு நிலம் ஒதுக்கியுள்ளோம். கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரிய தொழிற்பேட்டையில் பல்வேறு நோக்கங்களுக்கு நிலம் ஒதுக்கப்படுகிறது. அதாவது ஆஸ்பத்திரி, பெட்ரோல் விற்பனை நிலையம், வங்கி, உணவகம், வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்கு அனுமதி அளிக்கிறோம். நாங்கள் ராகுல் கார்கேவுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை.

    முந்தைய பா.ஜனதா ஆட்சியில் சாணக்கியா பல்கலைக்கழகத்திற்கு 116 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதனால் அரசின் கருவூலத்திற்கு ரூ.137 கோடி இழப்பு ஏற்பட்டது. லஹர் சிங் எம்.பி. இதுகுறித்து பேச வேண்டும். முன்பு தொழில் மேம்பாட்டு வாரியமே நிலத்தை ஒதுக்கும். ஆனால் இப்போது நாங்கள் நிலம் ஒதுக்க மாநில தொழில் துறை ஒப்புதல் அளித்து ஒற்றைச்சாளர குழுவுக்கு வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகும்- கார்கே.
    • வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள்- ரவி சங்கர் பிரசாத்.

    கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டமானது, மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மால்லிகார்ஜூன கார்கே விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகவும், இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் கார்கே-வின் விமர்சனத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் விமர்சனத்திற்கு ரவி சங்கர் பிரசாத் அளித்தள்ள பதில் வருமாறு:-

    இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தற்போது யு-டர்ன் அடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என பிரியங்கா தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்திருந்தார்.

    இந்த காங்கிரஸ் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுமா அல்லது அதையும் செயல்படுத்துமா? பொதுவாக காங்கிரசும், குறிப்பாக ராகுல் காந்தியும், இமாச்சலப் பிரதேசத்தில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களி ஏமாற்றி வருகின்றனர்.

    (மத்திய அரசு) ஊழியர்களின் கவலைகளைக் கேட்டு புரிந்துகொண்டு, அதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, அர்த்தமுள்ள முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்காக பெருமைப்படுகிறோம். இதற்காக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ராகுல் காந்தி என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவுதான் பொய்யை உண்மை என மக்களை நம்பவைப்பீர்கள். எப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள். மேலும் நீங்கள் ஏதாவது சொன்னால், அதைச் செய்ய வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லக்கூடாது.

    கவனமாக பரிசீலித்த பிறகு முடிவுகளை எடுக்க வேண்டும். அடிமைத்தனம் இங்கு வேலை செய்யாது.

    இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    • ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை.
    • அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை.

    முடா முறைகேட்டில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் அனுமதி வழங்கியுள்ளார்.

    இதற்கு கர்நாடக மாநில மந்திரிகள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தவறு ஏதும் செய்யவில்லை. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் காங்கிஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக நியமித்துள்ள பாஜக அரசு அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    ஆளுநர் அனுப்பிய நோட்டீசில் என்ன உள்ளது? என்பதை பார்க்கவில்லை. அதுபோல் என்ன காரணத்திற்காக அனுமதி அளித்தார் என்பது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை. என்னால் தற்போது நோட்டீஸ் சரியா அல்லது தவறா? எனக் கூற முடியாது.

    ஆனால் ஒருவிசயம் என்னவென்றால், மேற்குவங்கம், கர்நாடகா, தமிழ்நாடு அல்லது வேறு எங்கெல்லாம் பாஜக அல்லாத அரசு ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்துள்ளதோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகப்பட்டியான இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கின் முழு விவரம், வழக்கறிஞர் ஆலோசனைக்குப் பிறகு இது தொடர்பாக பதில் அளிப்பேன்.

    இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

    • அற்புதமான விளையாட்டிற்கு பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள்.
    • நீரஜ் சோப்ரா, உங்களின் அபார சாதனைக்கு மனதார வாழ்த்துகள்.

    ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவிற்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 முழுவதும் அற்புதமான விளையாட்டிற்கு பிறகு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள்.

    இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ர்ஜூன கார்கே நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில், " ஒருமுறை சாம்பியன்.. எப்போதும் சாம்பியன்!

    நீரஜ் சோப்ரா, உங்களின் அபார சாதனைக்கு மனதார வாழ்த்துகள்.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது உங்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத ஆர்வத்திற்குச் சான்றாகும்.

    உங்கள் குறிப்பிடத்தக்க 89.45 மீ எறிதல் உங்களுக்கு ஒரு மேடைப் பூச்சுக்கு உதவியது மட்டுமல்லாமல் ஒரு தேசத்திற்கு உத்வேகம் அளித்துள்ளது.

    பிரகாசித்து புதிய உயரங்களை எட்டிக்கொண்டே இருங்கள். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும் தாக்கம் செலுத்தும் பங்களிப்புகளுடனும் திகழட்டும்!
    • தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது.

    சமூகநீதியின் மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கான தங்களது முயற்சிகளும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும் தாக்கம் செலுத்தும் பங்களிப்புகளுடனும் திகழட்டும்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ரெயில் விபத்தில் 4 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.
    • உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இரங்கல்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது.

    இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மோடி அரசில் ரெயில் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதற்கு சண்டிகர்-திப்ரூகர் ரெயில் விபத்து மற்றுமொரு உதாரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ரெயில் விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விபத்து குறித்து மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உ.பி.யில் சண்டிகர்- திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. மோடி அரசு எப்படி முறையாக ரெயில் பாதுகாப்பை சீர்குலைத்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம்.

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் இருக்கும்.

    ஒரு மாதத்திற்கு முன்பு, சீல்டா-அகர்தலா கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். விபத்து நடக்கக் காத்திருந்ததாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

    தானியங்கி சமிக்ஞையின் தோல்வி, செயல்பாடுகளை நிர்வகிப்பதில் பல நிலைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் லோகோ பைலட் மற்றும் ரெயில் மேலாளருடன் வாக்கி-டாக்கி போன்ற முக்கியமான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காதது ஆகியவை ஆய்வு அறிக்கையில் மோதலுக்கு சில காரணங்களாகும்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது ரயில்வே அமைச்சர், சுய-விளம்பரத்திற்கான எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல், இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டும்.

    எங்களின் ஒரே கோரிக்கை:

    மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கும் விபத்துகளைத் தடுப்பதற்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் கவாச் எதிர்ப்பு மோதல் அமைப்பு விரைவாக நிறுவப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வேலையில்லா திண்டாட்ட விகிதம் 9.2 சதவீதமாக உயர்ந்திருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
    • குடும்பங்களின் சேமிப்புகள் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் வருகிற 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கேமராக்களுக்கு முன்பு இத்தகைய கூட்டம் நடத்தும்போது நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சனைகளிலும் கவனம் செலுத்துமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    மோடி ஜி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமத்துவமின்மை போன்றவற்றால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை உங்கள் அரசு குழியில் தள்ளிவிட்டது.

    வேலையில்லா திண்டாட்ட விகிதம் 9.2 சதவீதமாக உயர்ந்திருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

    20 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இளைஞர்களிடையே வேலை சந்தையில் கடுமையான நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது.

    விவசாயிகள் வருவாய் இரட்டிப்பு, 50 சதவீதத்துக்கு மேற்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை வாக்குறுதிகள் பொய்யாகிவிட்டன.

    7 பொதுத்துறை நிறுவனங்களில் 3.84 லட்சம் வேலை இழப்பு நடந்துள்ளது. இந்த நிறுவனங்களில் அரசின் பெரும்பான்மை பங்குகள் விற்கப்பட்டு விட்டன. இதுவும் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வேலையிழப்புக்கு காரணம் ஆகும்.

    2016-ம் ஆண்டில் இருந்து 20 பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கை குறைந்த அளவுக்கு மோடி அரசு விற்றதன் மூலம் 1.25 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.

    விலைவாசி உயர்வு உச்சம் தொட்டிருக்கிறது. பருப்பு, மாவு, அரிசி, பால், சர்க்கரை, தக்காளி, உருளைக்கிழக்கு, வெங்காயம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளன.

    இதனால் குடும்பங்களின் சேமிப்புகள் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன.

    100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்து இருக்கிறது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு கணிசமாக சரிந்திருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் சராசரி வேலை நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளது.

    மோடி ஜி கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் உங்கள் அரசை விளம்பரப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறீர்கள். மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கிறீர்கள்.

    ஆனால் 2024 ஜூன் மாதத்துக்கு பிறகு இனியும் அது வேலைக்கு ஆகாது. மக்கள் உங்களிடம் கணக்கு கேட்க தொடங்கி உள்ளனர்.

    நாட்டின் பொருளாதாரத்தை தன்னிச்சையாக சீர்குலைப்பதை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு மல்லிகர்ரஜுன கார்கே கூறியுள்ளார்.

    • மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது.
    • மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிவு அவருக்கு எதிரானது. '400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்' என்று அவர் கூறியும், மக்கள் பா.ஜனதாவுக்கு 272 தொகுதிகளை கூட அளிக்கவில்லை.

    மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார். கைதட்டல் வாங்குவதற்காக ஜனாதிபதியை பொய்களை படிக்க வைத்துள்ளார்.

    விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள், பா ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய 5 முக்கிய பிரச்சனைகள், ஜனாதிபதி உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
    • நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்வானவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்பது நேற்று தொடங்கியது.

    பாராளுமன்றம் நேற்று தொடங்குவதற்கு முன்பு புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த மகதாப்பை தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.

    முதலில் பாராளுமன்ற ஆளும்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி அழைக்கப்பட்டு எம்.பி.யாக பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதன் பிறகு மாநிலம் வாரியாக ஆங்கில அகர வரிசைபடி எம்.பி.க்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு புதிய எம்.பி.க்கள் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டனர். நேற்று மொத்தம் 262 பேர் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அனைத்து எம்.பி.க்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இன்று மொத்தம் 271 எம்.பி.க்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இன்று மாலையுடன் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நிறைவுக்கு வருகிறது. நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

    இதனிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பா.ஜ.க. மறுத்துவிட்டதால் தேசிய ஜனநாயக கூட்டணி சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிக்காமல் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.

    எனினும், மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட கேரள காங்கிரஸ் எம்.பி.கொடிக்குன்னிஸ் சுரேஷ் மனுத்தால் செய்துள்ளார்.

    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் பதவியை பெறுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று இரவு 8 மணிக்கு பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம்.
    • பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்

    மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றுள்ள ராகுல் காந்தி வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுத்துள்ளார். இதற்கிடையில் ராகுல் காந்தியை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர வைக்க காங்கிரஸ் தொடக்கம் முதலே படாத பாடுபட்டு வருகிறது.

     

    ஆனால் ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மறுத்து இதுவரை காங்கிரஸ் காமிட்டியினருக்கு பிடி கொடுக்கமாலேயே இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் கூட ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கும்படி தலைவர் கார்கே உட்பட கமிட்டியினர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

     

    குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கே ராகுலின் மனதை மாற்றுவதற்கு பல தந்திரங்களை கையாண்டுள்ளாராம். அதாவது, ராகுல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்றால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று செல்லமாக மிரட்டியுள்ளாராம்.

     

    இதுகுறித்து செய்தியாளர்கள் ராகுலிடன் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு அவர், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முடிவெடுத்த பின்னர் அவர் [கார்கே] அறிவிப்பார், அவர் [கார்கே] என்னை மிரட்டியது உண்மைதான் என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

     

    நடந்த முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமயிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைபற்றி பாராளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிரான மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. முன்னதாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தியை தான் பிராமராக தேர்ந்தெடுப்பேன் என்று கார்கே கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×