search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலி நடமாட்டம்"

    • மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர்
    • டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர்.

    கூடலூர்:

    கேரள-தமிழக எல்லையான குமுளி அருகே மூங்கிலாற்று பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடித்து திரும்பிய தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். இதுகுறித்து வண்டிபெரியாறு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் 5-ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகே மீண்டும் புலி நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட வனத்துறையினர் அங்கு காமிரா பொருத்தியுள்ளனர். இதன்மூலம் புலி நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே டைமுக் பகுதியில் புலி நடமாடியதால் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்தனர். அந்த புலியை வனத்துறையினர்கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். எனவே தற்போது குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை விரைவில் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த இரண்டு வாரங்களாக புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததையடுத்து எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் பணியை கைவிட்டனர்.
    • பழங்குடியினர் வசித்துவரும் பகுதியில் புலிஅட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றார் சிலோன் காலனி பகுதியில் குடியிருப்புகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புலி கடித்து கொன்றது.

    இதனால் பழங்குடி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் அடுத்தடுத்து அந்த பகுதிகளில் ஆடு, மாடுகளை புலி கடித்து குதறியது. வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    சிற்றார் சிலோன் காலனி உட்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். சிலோன் காலனி குடியிருப்பு பகுதியில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு இருந்தது. எலைட் படையினரும் மருத்துவ குழுவினரும் அங்கேயே முகாமிட்டு தேடும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.

    கடந்த இரண்டு வாரங்களாக புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததையடுத்து எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் பணியை கைவிட்டனர். இருப்பினும் குமரி மாவட்ட வனத்துறையினர் சிலோன் காலனி பகுதியில் கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஆறுகாணி அருகே ஒரு நூறாம் வயல் கீழ்மலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகளை புலி கடித்து கொன்றது பழங்குடி மக்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளை புலி கடித்துக் கொன்றது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இரண்டு குடியிருப்புகளில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகளை புலி கடித்துக் கொன்றிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டை யின் காரணமாக புலி ஒரு நூறான் வயல் கீழ் மழை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. பழங்குடியினர் வசித்துவரும் பகுதியில் புலிஅட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக புலி தென்படவில்லை. ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. புலி நடமாட்டம் தென்படாததால் தேடுதல் பணியில் ஈடுபட்ட படையினர் திரும்பி சென்றனர். தற்போது ஒரு நூறான் வயல் கீழ்மலை பகுதியில் குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்துள்ளது.

    அந்த பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன் கூண்டு அமைத்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்கள் வீடுகளில் ஆடுகளை கட்டும்போது அந்த பகுதியில் தீ வைத்திருந்தால் புலி அந்த பகுதிக்கு வராமல் தடுக்க முடியும். புலியை பிடிக்க பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.
    • தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள்.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை-சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் கூறியதையெடுத்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் புலி இரவில் வந்து ஆடு மற்றும் பசு மாட்டை கடித்து குதறியது.

    இதனால் மேலும் அச்சம் அடைந்த வனப்பகுதி மக்கள் தோட்ட தொழிலாளர்கள் ஆகியோர் இடையே மீண்டும் அதிகாலை வேலைக்கு செல்வதற்கு மக்கள் மத்தியில் புலியின் நடமாட்டத்தை அறிந்து பெரும் அச்சம் அடைத்தனர். வனத்துறை ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி சுமார் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தை தீவிரமாக இரவு பகலாக கண்காணித்து வந்தனர். புலியின் உருவம் கேமராவில் பதியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து புலியை தேடினார்கள். ஆனால் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அரசு ரப்பர் கழகத்தில் வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் புலியை பிடித்தால் தான், அதிகாலையில் ரப்பர் பால் வடிப்பு தொழிலுக்கு செல்ல முடியும், இல்லை என்றால் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று ஆண்களும், பெண்களும் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

    இதனால் அரசுக்கு தினமும் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தார்கள். தோட்ட தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு விழிப்புணர்வை தோட்ட தொழிலாளர்களிடம் ஏற்படுத்தினார்கள்.

    அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்களிடம் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிகாலையில் பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் செல்வதற்கு முன், வனத்துறை ஊழியர்கள் புலியின் நடமாட்டத்தை பார்த்து சென்ற பிறகு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்வது என்றும், அதிகாலை வேலைக்கு செல்வதை தவிர்த்து சற்று தாமதமாக பணிக்கு செல்வது என்றும், தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அருகில் அதிக மின் விளக்குகள் மாட்டுவது என்றும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் ஆனது. அதன் பிறகு இன்று பால் வடிப்பு தொழிலுக்கு தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு சென்றார்கள். அதேவேளையில் புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் இரவு பகலாக தீவிர கண்காணித்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் அபாயம்
    • கேமராவில் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்துடன் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் குடியிருப்பு பகுதிக்கு வந்த புலி, அங்கிருந்த ஆடு-பசுமாட்டை கடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வனப்பகுதியினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வனப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பல்வேறு இடங்களில் மாட்டி இரவு- பகலாக கண்காணித்தனர். ஆனால் கேமராவில் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

    இருப்பினும் புலி நடமாட்டம் குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களிடம் உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்து வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதிகாலையில் வேலைக்கு செல்லும் போது புலி வந்தால் எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர். புலியை பிடித்தால் மட்டும் தான், தாங்கள் வேலைக்கு செல்ல முடியும், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரியிடம் அவர்கள் மனு கொடுத் துள்ளனர்.

    இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதற்கிடையில் பள்ளி-கல்லூரிக்கு செல்ல மாணவ-மாணவிகளும் அச்சப்படுகிறார்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே வனத்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்தி புலியின் நடமாட்டத்தை கண்டறிந்து அதை பிடித்து வனத்தில் விட்டால் மட்டும் தான் அந்த பகுதி மக்களிடையே நிம்மதி ஏற்படும்.

    • 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.
    • புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியை ஒட்டிய வனப்பகுதி தமிழ்நாடு கர்நாடகாவை இணைக்கும் ஒரு முக்கிய வனப்பகுதியாக உள்ளது.

    இந்த வனப்பகுதியில் அதிகப்படியான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.

    காட்டு எருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் அடிக்கடி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது வாடிக்கையான ஒன்று.

    ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டும் வாழக்கூடிய புலியின் நடமாட்டம் கோத்தகிரி கோடநாடு வனப்பகுதியில் தற்போது தென்பட்டுள்ளது.

    நேற்று மாலை அப்பகுதியில் நிலஅளவை பணிசெய்து கொண்டிருந்த ஊழியர்கள் பணிமுடிந்து வரும் போது சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாக புலி ஒன்று அப்பகுதியில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது.

    இதனை ஊழியர் ஒருவர் தனது செல்போன் காமிராவில் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ அந்த பகுதியில் பரவி வருகிறது. புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டி அடுத்த மார்லிமந்து பகுதியில் புலி ஒன்று சுற்றித்திரிந்தது.
    • புலி சோலூர் பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மார்லிமந்து பகுதிக்கு வந்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகிவிட்டது.

    இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டி அடுத்த மார்லிமந்து பகுதியில் புலி ஒன்று சுற்றித்திரிந்தது.

    இதையடுத்து அந்த புலி மார்லிமந்து அணை பகுதியில் ஒரு மாட்டை தாக்கியது. இதன் பின்னர் எச்.பி.எப். சர்ச் பகுதியிலும் ஒரு எருமையை தாக்கியது.

    இதையடுத்து அந்த புலி சோலூர் பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மார்லிமந்து பகுதிக்கு வந்துள்ளது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை மார்லிமந்தில் இருந்து தாவணெ செல்லும் சாலையோரம் அந்த புலி சுற்றி திரிந்தது.

    இதை அந்த வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

    இதற்கிடையே மார்லிமந்து பகுதியில் வனப்பகுதியில் விறகு சேகரிக்க செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளாவின் வயநாடு பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது.
    • கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கேரளாவின் வயநாடு பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானந்தவாடி பகுதியில் தொழிலாளி ஒருவரை அடித்து கொன்றது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் 2 மாடுகளையும் புலி கொன்றது.

    இது பற்றி கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    • இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தொடா்ந்து புலி நடமாடுகிறது.
    • புலி சுவரில் ஏறி உள்ளே குதித்து வளாகத்துக்குள் செல்வது கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

    ஊட்டி

    தமிழக எல்லையான பாட்டவயலை அடுத்து கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட சீரால் குடுக்கி கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தொடா்ந்து புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

    இதை உறுதி செய்யும் வகையில், வனபகுதியில் இருந்து இரவு வந்த புலி சாலையை கடந்து அங்குள்ள வணிக நிறுவனத்தின் மதில் சுவரில் ஏறி உள்ளே குதித்து வளாகத்துக்குள் செல்வது அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

    இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புலியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்றும், தங்களுக்கு வன விலங்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினா்.

    ×