search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் உயிரிழப்பு"

    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷனிபா பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஷனிபா பாபுவின் கணவர் சனுஜ் பஷீர் கோயாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷனிபா பாபு(வயது37). இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சனுஜ் பஷீர் கோயா ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் அவர் அங்குள்ள புஜைரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ஷனிபா பாபு, அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷனிபா பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசாருக்கு அதில் சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் ஷனிபா பாபுவின் கணவர் சனுஜ் பஷீர் கோயாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

    விசாரணை முடிவில் தான், ஷனிபா பாபு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜ்மான் பகுதியில் ஒரு கட்டிடத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் குந்தாறை பகுதியை சேர்ந்த ரூபன் பவுலஸ்(17) என்ற பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

    • சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.
    • ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42), லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை பறித்ததாக கவிதா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று வந்த பின்னர் அவருக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சிவக்குமார் கண்டித்தும், கவிதா கேட்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார். இதனால் கவிதா மீது சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கவிதா வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 23-ந்தேதி கோவை கோர்ட்டுக்கு ஆஜராக வந்தார். இதனை அறிந்த சிவக்குமாரும் அங்கு வந்தார். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் கவிதாவை பார்த்த, சிவக்குமார் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார். இதில் பலத்த காயமடைந்த கவிதா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    திராவகம் வீச்சில் 85 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கவிதாவுக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சுமார் ஒரு மாதமாக கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

    திராவகம் வீச்சில் காயமடைந்த கவிதா இறந்துவிட்டதால், கொலை முயற்சி வழக்கை, ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை.
    • இறந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கேரளா:

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பிரியாணி சாப்பிட்டவர் மரணம் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. மேலும் கெட்டுப்போன இறைச்சி விற்பனையும் நடைபெறுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அச்சம்பவம் மறைவதற்குள் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

    ஆன்லைனில் குழிமந்தி என்ற பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட அஞ்சு ஸ்ரீபார்வதி(20) என்ற இளம்பெண் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

    பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தரமற்ற உணவால் உயிரிழந்தது தெரியவந்தால், உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    • வேலைக்கு சென்ற இடத்தில் ராயா்பாளையம் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • காதலனால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையம் பகுதியில் பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து உடலில் தீக்காயங்களுடன் நேற்று மாலை இளம்பெண் அலறியபடி பிரதான சாலைக்கு ஓடி வந்தாா். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    இதனிடையே பெண்ணின் மீது தீ வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற வாலிபர் தவறி விழுந்து காயமடைந்தாா். அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண்ணுக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தீ வைக்கப்பட்ட பெண் வடமாநிலத்தை சோ்ந்த பூஜா (வயது 19) என்பதும், பல்லடம் ராயா்பாளையம் பகுதியில் உள்ள உறவினா் இப்ராகிம் என்பவா் வீட்டில் தங்கி அருகே உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

    வேலைக்கு சென்ற இடத்தில் ராயா்பாளையம் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் லோகேஷ் (22) என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லோகேஷை பூஜா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

    நேற்று மாலை பல்லடம் பனப்பாளையம் பெத்தாம்பாளையம் சாலையில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த லோகேஷ் கல்லால் பூஜாவை தாக்கியதுடன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, பூஜா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில் பூஜா அலறியபடி சாலைக்கு ஓடி வந்துள்ளாா்.

    இதனைக் கண்ட லோகேஷ் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றபோது தவறி விழுந்து காயமடைந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் லோகேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பூஜாவின் சொந்த ஊர் மும்பை. தாய்-தந்தையை இழந்த அவர் தனது உறவினரான ராயர்பாளையத்தில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் அவர் காதலனால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மருந்தக உரிமையாளர், அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து, பெண் சிசு இருப்பதாக கூறினார்.
    • 3-வதும் பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா, கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அமுதா (வயது 27). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் அமுதா மீண்டும் கர்ப்பமானார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா தெரிந்து கொள்ள அமுதா விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்துக்கு சென்றார். அங்கிருந்த மருந்தக உரிமையாளர், அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து, பெண் சிசு இருப்பதாக கூறினார்.

    3-வதும் பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா, கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த மருந்தகத்திலேயே கருவை கலைப்பதற்கான மாத்திரைகள் அமுதாவிற்கு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி சாப்பிட்ட அவர், வேப்பூர் அருகே நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 நாள் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அமுதாவை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அமுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு ராமநத்தத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்தபோது இளம்பெண் இறந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது வேப்பூர் இளம்பெண்ணும் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுபத்ரா முதல் கணவனை பிரிந்து பார்த்திபனை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
    • போலீசார் சுபத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேளச்சேரி:

    பெரும்பாக்கம், எழில் நகர் அடுக்குமாடி குடியிருப்பு 6-வது பிளாக்கை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி சுபத்ரா (வயது32).

    இவர் முதல் கணவனை பிரிந்து பார்த்திபனை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சுபத்ராவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. நேற்று மாலை சுபத்ரா அதிக மதுபோதையில் வீட்டில் மயங்கி கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உடனடியாக அவரை மீட்டு செம்மஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, வரும் வழியிலேயே சுபத்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சுபத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுபத்ரா அதிக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×