search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி அமைச்சர்"

    • ஆந்திர மாநில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை.
    • ஆந்திராவிக்ரு ரூ.60,000 - 70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டது.

    ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலை அமைப்பது தொடர்பாக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.

    அதன்படி, ஆந்திராவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

    இந்த தொழிற்சாலையின் மூலம் ஆந்திராவிற்கு ரூ.60,000 - 70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீகாகுளம், மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமயப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த ஆலை அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

    நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
    • 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், நடப்பு பட்ஜெட்டில் பீகார் மாநில திட்டங்களுக்காக ரூ.30,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கேட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
    • பாராளுமன்ற பட்ஜெ் கூட்டத்தொடர்ப நடைபெற உள்ளது.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெ் கூட்டத்தொடர்ப நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெகட் ஆகும்.

    • எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
    • பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

    பதிவானவற்றில் 42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்தக் காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள்  சுகாதார அமைச்சர் [2001-2005] மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். 38.6 சதவீத வாக்குகளை பெற்று தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி இரண்டாம் இடத்தில் இருந்தார்.

     

    ஆனால் ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும். எனவே முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று [ ஜூலை 5] இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் பதிவான கிட்டத்தட்ட 30 மில்லியன் வாக்குகளில் [49.8 சதவீதம்], பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை[ சுமார் 56 சதவீதம்] வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

     

    சயீது ஜலிலி 13 மில்லியன் வாக்குகளுடன் பின்தங்கினார். எனவே ஈரான் அரசின் புதிய அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவி ஏற்க உள்ளார். மசூத் பெசெஸ்கியன் தொழிமுறையாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்துள்ளார். இவர் ஈரானில் தற்போது கடுமையாக பின்பற்றப்பட்டும் வரும் பெண்கள் பர்தா அணியும் விதிகள் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • விமான நிலையத்தில், திருடன் என குரல் எழுப்பிய போராட்டக்காரர்கள்.
    • வெளிநாடுகளில் பாகிஸ்தான் அமைச்சர்கள் தொடர்ந்து அவமதிப்பு

    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள 72 வயதான இஷாக் தார்,  உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.வாஷிங்டன் விமான நிலையத்திற்கு வந்த இறங்கிய அவர், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் கான் மற்றும் பிற அதிகாரிகளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் சிலர், கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


    அமைச்சர் தார் ஒரு பொய்யர் என்றும், திருடன் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களிலும் போது, பொது இடங்களில் சிலர் அவர்களை முற்றுகையிட்டு கோஷமிடுவது தொடர்கதையாகி வருகிறது.

    கடந்த மாதம், லண்டனில் உள்ள ஒரு காபி ஷாப்பில் பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை சிலர் முற்றுகையிட்டு எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதேபோல் பாகிஸ்தான் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், ஒரு உணவகத்திற்கு சென்ற போது, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டது குறிப்பிட்டதக்கது.

    ×