என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொள்கை"
- நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்?
- அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது.
மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார் ? மக்களின் ஒற்றுமை, சுதரந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.
நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு |ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்ட பிளவுவாத | சக்திகள் யார் என நமக்கு தெரியும்.
அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
- ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இன்று காலை தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ -மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன், மாவட்ட துணை செயலாளர் பிரேம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்பாட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்