என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்கை"

    • நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்?
    • அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது.

    மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார் ? மக்களின் ஒற்றுமை, சுதரந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.

    நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

    ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு |ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்ட பிளவுவாத | சக்திகள் யார் என நமக்கு தெரியும்.

    அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.
    • தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் விஜய் அமர்ந்திருக்க கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அதன்படி மேடையில் உரையாற்றிவரும் கட்சி  பிரமுகர்கள் தவெகவின் கொள்கைகளை எடுத்துரைத்து வருகிறார்.

    அதன்படி, வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே கட்சியின் முதல் கொள்கை .

    மதம் சாதி இனம் மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக்கூடாது.

    மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும்.

    மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து மக்காளுக்கான ஜனநாயகத்தை மீட்போம்.

    எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் சமம்.

    மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை.

    தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

    தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

    போதையில்லா தமிழகம் என்பதே நமது கொள்கை. மக்களுக்கான ஜனநாயக நிலைநாட்டுவோம்.

    நிர்வாகத்தில் அரசியல் தலையீடு எந்த விதத்திலும் இருக்கக்கூடாது. லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கிறோம்.

    கட்சியின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களுக்கு வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும்.

    மதுரையில் தலைமை செயலக கிளை உருவாக்கப்படும்

    வர்ணாசிர கோட்பாடுகள் எந்த வகையிலும் முழுமையாக எதிர்க்கப்படும்.

    தமிழ் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழநாட்டுக்கு எப்போதும். ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க உறுதி வழங்கப்படும்.

    கல்வியை மாநில பட்டியலில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.

    பெண்களுக்கு சட்டமன்றம் கல்விப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

    மாநிலம் முழுவதும் காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்

    தகவல் தொழிலநுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

    மாவட்டந்தோறும் பன்னோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

    ஆக்கிரமிப்பில் உள்ள சதுப்பு, விவசாய நிலங்கள் மீட்கப்படும்

    பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்

    அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி உடைகள் அணிய உத்தரவிடப்படும்

    மணல் கொள்ளை கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும்

    மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது செயலிழந்து கிடப்பதால் அது சீரமைக்கப்படும்

    அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பு அதிகரிக்கப்படும்

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

    போதைபொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்

    தமிழகம் முழுவதும் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும் 

    • நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.
    • ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள்

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் முதலில் கட்சிப் பிரமுகர்கள் கொள்கைகளை விளக்கியதைத் தொடர்ந்து விஜய் உரையாற்றிவருகிறார்.

    நான் மற்றும் நன்றாக இருப்பது சுயநலம். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.

    கேள்விகளின் விளைவாக எழுந்ததே எனது அரசியல் முடிவு. அரசியலில் நமது நிலைப்பாடு என்ன என்பது உறுதியானால் எதிரிகள் தெரிவார்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற போதே எதிரிகள் உறுதியாகிவிட்டனர். பிளவுவாத சித்தாந்தம் மட்டுமல்ல ஊழல் அரசியலும் நமது எதிரிதான்.

     

    பிளவுவாத எதிரிகள் நமது கண்ணுக்குத் தெரிவார்கள். அவர்களை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள். எதிரிகளைத் தீர்மானித்து விட்டால் மட்டும் போதாது.

    மகத்தான அரசியல் என்றால் மக்களுக்கான அரசியல் தான். திட்டங்கள் அறிவித்து செயல்படுத்துவது என்பதை தேர்தல் முடிவுகள் போல் செயல்படுத்த வேண்டும். 

    இது பணத்திற்காகக் கூடிய கூட்டமல்ல. ஏ டீம், பீ டீம் என்று கூறுவதைக் கண்டு பயப்பட போவதில்லை. எங்களுக்கு யாரும் எந்த சாயமும் பூச முடியாது. நல்லது நடக்காதா என்று மக்கள் காத்திருக்கின்றனர் 2026 இல் போரை அறிவித்ததும் தவெக சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள். 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு மக்கள் வாக்களிக்பார்கள் என்று பேசியிருக்கிறார்.

    கலாச்சாரம் ஆகியவற்றை அரசியலில் பாஜக முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிலையில் விஜய் பேச்சு பாஜகவை மறைமுகமாக விமர்சித்ததாக பார்ப்படுகிறது. மேலும் பெரியாரை நமது கொள்கைத் தலைவராக முன்னிருத்தும்போது பெயிண்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு சிலர் வருவார்கள் என்று தனது பேச்சின் தொடக்கத்தில் விஜய்  குறிப்பிட்டார் 

    சமீப காலமாக  திருவள்ளுவர்  ஆகிய தமிழர் அடையாளங்களின் மீது காவி சாயம் பூசப்படுவதை விஜய் மறைமுகமாக விமர்சித்ததாகவும் இதை பார்க்க வேண்டி உள்ளது.  ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்பது தவெக அரசியல் கொள்கைகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இன்று காலை தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ -மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன், மாவட்ட துணை செயலாளர் பிரேம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்பாட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×