search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டங்கள்"

    • பாரம்பரிய கட்டிடங்களில் ஒளி அலங்காரம் அமைக்கவும் முடிவு.
    • சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த நிலையில் மெரினா கடற்கரை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது.

    இதற்காக சென்னை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு மெரினா கடற்கரை புதுப்பொலிவு பெறுகிறது.

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தற்போது மெரினா கடற்கரையையும் அதன் மேற்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிட ங்களையும் இணைக்கும் வகையில் காமராஜர் சாலை நடைபாதையை மேம்படுத்தும் திட்டத்தை ரூ.10 கோடி செலவில் தொடங்கியுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகம், சாந்தோம் பேராலயம், பொது பணித்துறை அலுவலக கட்டிடம், விவேகானந்தர் இல்லம், மாநில கல்லூரி உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பராமரிக்கப்பட உள்ளன.

    மேலும் மெரினா கடற்கரையில் புதுப்பொலிவான தோட்டங்கள், நீரூற்றுகள், சிற்ப தோட்டங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன.

    மேலும் அகலமான நடைபாதைகள், சுற்றுலாப் பயணிகள் அமரும் பகுதிகள், தகவல் பலகைகள் அமைக்கப்பட உள்ளன.

    மேலும் மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு புதுப்பொலிவுடன் மாற்றப்பட உள்ளது. மெரினா கடற்கரை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டிடங்களையும் பராமரித்து பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய கட்டிடங்களில் ஒளி அலங்காரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவடைந்து மெரினா கடற்கரை புதுப்பொலிவுடன் மாற்றப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நிழல்வலை குடில் தொழில் நுட்ப சாகுபடி குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
    • பயனாளி பயிர் செய்த குடைமிளகாய், மரவள்ளி, சீரகம், சோம்பு, பல ரக வாழைகள் ஆகிய பயிர்களை பார்வையிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட செயலாக்கத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அம்மாபேட்டை வட்டா ரத்தில் 2021-22 ஆண்டில் அருந்தவபுரம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறையால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்தார்.

    இந்த திட்டத்தால் பயனடைந்த விவசாயி கணபதியின் தோட்டத்தை பார்வையிட்டார்.

    அப்போது தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தில் 1000 ச.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்ட நிழல் வலை குடிலை ஆய்வு செய்தார். நிழல்வலை குடில் தொழில் நுட்ப சாகுபடி குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.

    நிரந்தர பந்தல் அமைப்பு சாகுபடி செய்யப்பட்ட பாகல், புடல் ஆகிய பயிர்கள் விவரங்களை கேட்டு அறிந்தார். பயனாளி பயிர் செய்த குடைமிளகாய், மரவள்ளி, சீரகம், சோம்பு, பல ரக வாழைகள் ஆகிய பயிர்களை பார்வையிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அவர் பயிர் விவரங்கள் மகசூல் சந்தைப்படுத்துதல், விலை நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தோட்டக்கலை துறை இயக்குனர் (வேளாண் நேர்முக உதவியாளர்) கோமதி தங்கம், மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) சாருமதி, வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பரிமேலழகன், ஊராட்சி தலைவர் சரிதா ஆசைதம்பி, தஞ்சாவூர் துணை வேளாண் அலுவலர் மனோகரன், உதவி வேளாண் அலுவலர் ராமு ஆகியோர் இருந்தனர்.

    • மக்காச்சோள தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • பயிர்களை பாதுகாப்பது குறித்த தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள வானரமுட்டியில் தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் வராமல் தடுப்பதற்கு, விதைப்பதற்கு முன் கோடை உழவு செய்தல், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுதல் ,தையோமீத்தாக்கம் 4 மில்லி மருந்தை ஒரு கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்தல், சரியான இடைவெளியில் விதைத்தல், வரப்பு பயிராக நாற்றுச் சோளம் பயிரிடுதல் மூலமாகவும் விதைத்தவுடன் இனக்கவர்ச்சிப் பொறி வைத்தல், 15 முதல் 20 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு புழு பெண்டியாமைட் 5 மில்லி, 35 முதல் 40 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெட்டாரைசியம், அனிசோப்பிலே 80கிராம், 40 முதல் 60 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு மெக்டின்பென்சோயட் 4 கிராம்,60 நாட்களுக்கு மேல் வயது உடைய பயிர்களுக்கு நவலூரான் 10 மில்லி அல்லது ஸ்பிலோ டோராம் 5 மில்லி மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிர்களை பாதுகாப்பது உள்ளிட்ட தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

    ×