search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சைகள்"

    • சரியாக சுத்தம் செய்யாவிட்டால் கெட்ட நாற்றத்தை உண்டாக்கிவிடும்.
    • வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

    ஹேலிடோஸிஸ்' என்று மருத்துவ மொழியில் சொல்லப்படும் வாய் துர்நாற்றம், வாய் ஆரோக்கியம், பராமரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையினால் தான் ஏற்படுகிறது. வாய் துர்நாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பது தான், இந்த பிரச்சினைக்கான சிகிச்சையின் ஆரம்பமாகும்.

     காரணங்கள்:

    1) வெங்காயம், பூண்டு போன்ற சில குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டவுடன், அவை ஜீரணமாகி ரத்தத்தில் கலக்கின்றன. இந்த உணவுப் பொருட்கள் வயிற்றில் இருக்கின்ற காலம் வரை, இந்த உணவுகளின் நாற்றம் சுவாசம் வழியாக வந்து கொண்டேதான் இருக்கும்.

    2) வாய் மற்றும் பற்கள் பராமரிப்பு இல்லாமை, சாப்பிட்ட பின்னர் பல் துலக்காமல், வாயை கொப்பளிக்காமல் இருப்பது, அவ்வப்பொழுது பல் டாக்டரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவைகளும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.

    3) செயற்கை பல் செட் மாட்டி இருப்பவர்கள் சரியாக சுத்தம் செய்யாவிட்டால் அதில் கிருமிகள் சேர்ந்து கெட்ட நாற்றத்தை உண்டாக்கிவிடும்.

    4) வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கெட்ட கிருமி, நாக்கில் சேருவது, ஈறுகளில் சீழ்பிடித்து, வீங்கி நோய் ஏற்பட்டால், வாய் நாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

    5) வாய் உலர்ந்து போதல், இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும். மூக்கின் வழியாக சுவாசிக்காமல், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு வாய் வழியாக சுவாசிப்பது இவைகளினால் ஏற்படலாம்.

    6) சிகரெட், சுருட்டு, பீடி, மூக்குப்பொடி முதலியவைகளை உபயோகிப்பவர்களுக்கு பற்களில் கறை படிந்து நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். நெஞ்சில், மூக்கில், சுவாசக்குழாயில் நாள்பட்ட சளி, சைனஸ் நோய் இருப்பவர்களுக்கும், ஜீரண மண்டல பிரச்சினை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

    சிகிச்சை என்ன?

    பற்கள், வாய், ஈறு, பற்காறை, பல்லில் கறை முதலிய பிரச்சினைகளினால் வாய் நாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வந்தால், பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

    சாப்பிட்ட பிறகு பற்களை துலக்குவது மற்றும் வாய் கொப்பளிப்பது, நாக்கை சுத்தம் செய்வது நல்லது. தினமும் இருமுறை பல் துலக்கினால் கெட்ட பாக்டீரியாக்கள் சேர வாய்ப்பு இருக்காது. பல்செட் போட்டிருப்பவர்கள், அதை கழற்றி நன்றாகக் கழுவிய பின்னர் மறுபடியும் உபயோகியுங்கள்.

    சிகரெட் பழக்கத்தை நிறுத்துங்கள். வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்கிறமாதிரி உள்ள புளிப்பு உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கேரட், ஆப்பிள் போன்றவைகளை கடித்து, மென்று சாப்பிடுங்கள்.

    தினமும் சிறிதளவு பச்சை புதினாக் கீரை, பச்சை கொத்தமல்லி தழை, மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குறையும்.

    நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் இரைப்பையில் அமிலச் சுரப்பு அதிகமாகி வாய் துர்நாற்றத்தை உண்டுபண்ணலாம்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிதளவு கிராம்பு, சீரகம், ஏலக்காய் இவைகளில் ஏதாவது ஒன்றினை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கலாம்.

    மேலும் வாய் துர்நாற்றம் உடலில் வேறு ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

    • தெற்கு ஆத்தூர் முஹியத்தீன் ஜீம்ஆ பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சுமார் 500 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே உள்ள தெற்கு ஆத்தூர் முஹியத்தீன் ஜீம்ஆ பள்ளிவாசலில் கே.எம்.டி. மருத்துவமனை மற்றும் தெற்கு ஆத்தூர் ஐ.ஒய்.ஏ. சமூக சேவை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் கே.எம்.டி. மருத்துவமனை பொது மருத்துவர், குழந்தைகள், மகப்பேறு, மயக்கவியல்,காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள், அகர்வால் கண் மருத்துவ மனை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்

    இதில் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து. மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்பவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டது

    ×