என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில் விற்பனை"

    • புதுவையில் 400-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.
    • கோடைகாலம் தொடங்கினாலே பீருக்கு கிராக்கி ஏற்படும்.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி விளங்குகிறது. விலை குறைவு, விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை புதுச்சேரியை நோக்கி மதுப்பிரியர்களை இழுக்கச் செய்கிறது.

    புதுவையில் 400-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன. புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது.

    புதுவையில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    இதேபோல் புதுவையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.

    டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுவையில் பீருக்கு என தனியான எக்ஸ்குளூசீவ் பார்கள் உள்ளது.

    கோடை காலம் வந்து விட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். புதுவையில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதித்குள்ளாகி உள்ளனர்.

    கோடைகாலம் தொடங்கினாலே பீருக்கு கிராக்கி ஏற்படும். இதனால் மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.

    வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.

    இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.

    சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    • பகண்டைகூட்டுரோடு அருகே மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தலா 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஏந்தல் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மனைவி வீரம்மாள் (65), முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (47) ஆகியோர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை கைது செய்து, தலா 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரிடம் இருந்து ஐந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே பெருமுளை சாலையோரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்துகொண்டு இருப்பதாக திட்டக்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு அரசு டாஸ்மாக் கடை எதிரில் கோழியூரை சேர்ந்த மணிகண்டன் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து ஐந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வீட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    • மொத்தம் 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி கம்மார் தெரு, அத்திக்குளம் மேடு ஆகிய பகுதிகளில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எனவே, இன்று காலை போலீசார் அந்தப் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஆரணி கம்மார் தெருவில் மது விற்பனை செய்த காஞ்சனா(வயது32) என்ற பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களையும், அத்திக்குளம் மேடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் மது விற்பனை செய்த பத்மாவதி(வயது65) என்ற மூதாட்டியையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    எனவே, மொத்தம் 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு பெண்களையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற அண்ணா நகரை சேர்ந்த குகனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பகண்டைக் கூட்டு ரோடு அருகே மதுபாட்டில் விற்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ஏந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி கோவிந்தம்மாள் (வயது 45), சுப்பராயன் மனைவி வீரம்மாள் (65) ஆகியோர் தனித்தனியாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    இதையடுத்து இருவரையும் காவலர்கள் கைது, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இளையனார்குப்பத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி மஞ்சுளா(42) என்பவரையும் போலீசார் கைதுெ செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து மொத்தம் 22 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.52.87 கோடிக்கு மது விற்று மதுரை மண்டலம் முதலிடம் பிடித்தது.
    • 3 நாளில் ரூ.152 கோடியை தாண்டியது.

    மதுரை

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அசைவ பிரியர்களும், மது பிரியர்களும் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர். இதனால் இறைச்சி கடைகள் மற்றும் மது கடைகளில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக வியாபாரம் அதிக அளவில் இருந்தது.

    இறைச்சி கடைகளில் நேற்று முன்தினம் தொடங்கி விடிய, விடிய இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மதுரை பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்டது. இது தவிர மீன், கோழி கடைகளிலும் மக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

    மது விற்பனையில் மதுரை முதலிடம்

    வழக்கம்போல இந்த ஆண்டும் தீபாவளி தினத்திலும் அதிக அளவில் மதுவை விற்று மதுரை மண்டலம் சாதனை படைத்துள்ளது. தீபாவளி தினமான நேற்று மட்டும் மதுரை மண்டலத்தில் ரூ.52.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

    • அம்மாவாசை இன்று அதிகாலையில் புதுவை மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மாவாசையை கைது செய்தனர்

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை (வயது 55). இவர் இன்று அதிகாலையில் புதுவை மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து அதே பகுதியில் உள்ள இவரது வீட்டின் பின்புறம் வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

    இதில் அம்மாவாசை கையும் காலமாக பிடிபட்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து அம்மாவாசை கைது செய்தனர் அவரிடம் இருந்து புதுவை 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தி வந்த மது பாட்டில்களை எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×