search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமங்கலி"

    • அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.
    • குங்குமத்தை நெற்றியில் இடும் போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

    வீட்டில் தினமும் சாமி கும்பிட்டு முடித்ததும் குங்குமத்தை பெண்கள் நெற்றியிலும், தலை வகிட்டிலும் அணிந்து கொள்ள வேண்டும்.

    நெற்றியில் புருவ மத்தியில் பொட்டு வைப்பதில் குறிப்பாக குங்குமம் இடுவதால் மங்கள பண்பு நிறைகிறது என்பது நம்பிக்கை.

    நெற்றியில் குங்குமம் இடுவதால் மங்களம் நிறைகிறது.

    நெற்றியின் புருவ மத்திக்கு நேர் பின்னால் நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது.

    இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்புள்ள புருவமத்தி ஒரு சக்தி குவியும் இடமாகும்.

    யோகப் பயிற்சியில் கழுமுனை எனப்படுவதும் இப்பகுதியாகும்.

    தெய்வத்துடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.

    யோகாசனப் பயிற்சியின் போது மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) செய்யும் போது நெற்றிக்கண் மீது கவனம் குவியும்.

    ஞானக்கண் என்றும் அழைக்கப்படும்.

    அதாவது மனிதனின் ஆறு அறிவுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை எட்ட இப்பகுதி உதவுகிறது.

    குங்குமத்தை நெற்றியில் இடும் போது அதன் நேர் பின்னே மூளையில் உள்ள சுரப்பியோடு தொடர்பு ஏற்படுகிறது.

    இதனால் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ளும் வழி எளிதில் கிடைக்கிறது.

    நெற்றியில் பொட்டு வைப்பதால் கண்படுதல் அல்லது திருஷ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைத் தாக்குதல்களையும் தவிர்க்க முடியும்.

    ஹிப்னாட்டிசம் முதலிய மனோவசியங்கள் புருவ மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

    சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டில் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்.

    அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

    சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

    குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.

    பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.

    தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

    திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

    ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

    கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

    குரு விரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

    சனிவிரலால் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும்.

    குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுப்பாட்டிற்கு நல்லது.

    • வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.
    • சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

    மகாலட்சுமியின் அம்சமாகவும் அவளது மனத்திற்கு விருப்பமானதாகவும் உள்ள பொருட்களில் முக்கியமானது மஞ்சள்.

    மகாலட்சுமியின் இருப்பிடமாக மஞ்சளை சொல்வார்கள்.

    மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்யும் போது அட்சதை தூவுவதற்கு முனைமுறியாத பச்சரிசியில் மஞ்சளை தோய்த்து தூவுவார்கள்.

    எந்த பூஜை செய்தாலும் மஞ்சளை அரைத்து பிள்ளையார் போல ஒரு உருவத்தை செய்துவிட்டு,

    அதற்கு குங்குமம் இட்டு பூஜை செய்வார்கள்.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமத்துடன், மஞ்சள் கொடுக்க வேண்டும்.

    சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பதால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து பாக்கியங்கள் பெருகும்.

    நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் பெறலாம்.

    • ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்
    • ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூர் அருகில் உள்ள சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் தேவி முத்தாரம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் திருமணமான பெண்கள் கலந்துகொண்டு சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திருமணமான சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைப்பதற்கும், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கும் பாடல்பாடி பூஜையில் ஈடுபட்டனர். பின்னர் கொலு பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அந்த ஊர் தலைவர் சிவபெருமான் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திருச்செங்கோடு காந்தி நகரில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது.
    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி நகரில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.

    அதன்படி அர்த்தநா–ரீஸ்வரர் கோவில் சிவாச்சா–ரியார்கள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது.

    குஞ்சு மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன் போன்ற மங்கல திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் சாற்றி வழிபட்டனர். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த சுமங்கலிப் பெண்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு பாத பூஜை நடந்தது. பினனர் அவர்களிடம் திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.

    துர்க்கை வழிபாட்டு குழு அமைப்பாளர் யசோதா கோபாலன் அனைவரையும் வரவேற்றார். விஜயகுமாரி, மலர்ச்செல்வி, சாந்தி, மல்லிகேஸ்வரி ஆகியோர் அனைவருக்கும் துணிகள் வழங்கினர். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்.

    விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புஷ்பாஞ்சலி கமிட்டி பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலை–மையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
    • சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைதுறை நவசக்தி விநாயகர் ஆலயத்தில் வரலட்சுமி நோம்பு நடைபெற்றது. வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

    சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள்.

    இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். அதுசமயம் திருப்பலைதுறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமியை பூஜை செய்து வழிபட்டனர்.

    48 நாட்கள் பெண்கள் விரதமிருந்து வரலட்சுமி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    ×