search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "15 பவுன்"

    • சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினர்.
    • அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பாலப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 17-ந் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விஜயலட்சுமி உடனடியாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
    • இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அம்மாண்டிவிளை சாந்தான் விளை பகுதியை சேர்ந்தவர் கவியரசு (வயது 34). தேங்காய்வியாபாரி. இவர் தற்பொழுது நாகர்கோவில் செட்டிகுளம் கணபதி நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி கவியரசு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கவியரசு வீட்டிற்குள் சென்று பார்த்தார்.அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. படுக்கை அறையில் உள்ள சிலாப்பில் துணிப்பையில் கட்டி போடப்பட்டிருந்த 15 பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது. திருட்டு போன நகையின் மதிப்பு ரூ 7 லட்சம் ஆகும். இதுகுறித்து கவியரசு கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.கவியரசு வீட்டிலிருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.

    ஏற்கனவே நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது .இந்த நிலையில் வீட்டை உடைத்தும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் .அடுத்தடுத்து நடந்து வரும் இந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டத்தை அடுத்த முளங்குழி, முள்ளஞ்சேரியை சேர்ந்தவர் வினு (வயது 35). நகை கடை நடத்தி வருகிறார்.

    வினுவின் மனைவி அனுஷா (30). சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றார். அப்போது அங்கே மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென அனுஷா அருகே வந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் அனுஷா கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலி செயினை பறித்தார்.

    அனுஷா திருடன்...திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி யோடி தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுஷாவிடம் நகைபறித்த வாலிபரை தேடி வருகிறார்கள்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×