என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய தேர்தல் ஆணையம்"

    • மகாராஷ்டிராவில் குறிப்பட்ட கால இடைவெளிக்குள் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
    • மேற்கு வங்க மாநில வாக்காளர் அடையில் உள்ள எபிக் எண், வேறு மாநிலத்தில் உள்ள வாக்காளர் அட்டையிலும் இடம் பெற்றுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.

    வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றுள்ளது. தேர்தலின்போது போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என பாஜக மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பிட கால இடைவெளிக்குள் அதிக அளவு வாக்களார்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

    மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதன்மூலம் வாக்காளர்கள் பட்டியலில் மோசடி நடைபெற்றுள்ளது நிரூபணமாகி உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த தவறு கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து உள்ளது. இன்னும் 3 மாதங்களில் இது சரிசெய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில்தான் இதுபோன்ற குறைபாட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது தொடர்பாக மத்திய உயர் அதிகாரிளுடன் ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முடிவு செய்துள்ளார்.

    இது தெடர்பான கூட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர், சட்டமன் செயலாளர் மற்றும் UIDAI சிஇஓ ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நடைமுறை சாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

    ஏற்கனவே, தானாகவே முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்க சட்டம் அனுமதிக்கிறது. காலப்போக்கில் இது இணைக்கப்படும். இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • தேர்தலில் நேர்மையை உறுதி செய்வது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
    • 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. டெல்லியில் நாளை தொடங்கும் இந்த மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் நிறைவு அமர்வுக்கு தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்குகிறார். 

    உலகெங்கிலும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள், யுஎன்டிபி போன்ற அமைப்புகளுக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்மீனியா, மொரிஷியஸ், நேபாளம், சிலி, கிரீஸ், பிலிப்பைன்ஸ் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 50 பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் டெல்லியில் உள்ள பல நாடுகளின் தூதரகங்களை சேர்ந்த பிரநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் முதல் இரண்டு அமர்வுகள் தேர்தல் நேர்மையை உறுதி செய்வது மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

    • இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • தேர்தல் ஆணையத்தன் செயல்பாட்டிற்கு ஜெர்மனி மந்திரி பாராட்டு.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரை சந்தித்த அன்னாலெனா தலைமையிலான ஜெர்மன் பிரதிநிதிகள் குழு, இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் எளிதில் வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்படும் விரிவான பயிற்சி முறை உள்ளிட்டவை குறித்து ராஜீவ் குமார் அப்போது விளக்கம் அளித்தார். தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பங்கேற்பையும் இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    போலியான சமூக ஊடக தாக்கம், பெரும்பாலான தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு ஒரு சவாலாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக செயல்பாட்டை ஜெர்மனி வெளியுறவு மந்திரி பாராட்டினார். டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • வருகிற 27-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.
    • கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற விடமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் ஒருங்கிணைப்பாளர் என்கிற பெயருடன் ஆதரவாளர்களை திரட்டி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது அணியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளையும் நியமித்துள்ள ஓ.பி.எஸ். நேற்று அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பி.எஸ். உள்பட முன்னணி நிர்வாகிகள் அனைவருமே எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் உள்ளதா? என்று ஓ.பி.எஸ். சவால் விடுத்தார். தாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், அதற்கு கடும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகாரம் செய்யும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.

    அ.தி.மு.க.வின் 2021-2022ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கை கடந்த அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் தங்களது இணையதளத்திலும் வெளியிட்டு உள்ளது. இதனை மிகப்பெரிய அங்கீகாரமாக எடப்பாடி அதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் வக்கீலுமான ஐ.எஸ்.இன்பதுரை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இனியெல்லாம் ஜெயமே" என்று குறிப்பிட்டு இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் எடப்பாடியார் கையெழுத்திட்ட 2021-2022ம் ஆண்டுக்கான கட்சியின் தணிக்கை அறிக்கையை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று சுப்ரீம் கோர்ட்டிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றே அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே 4 முறை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்க வாய்ப்புள்ளதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும், பொங்கலுக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

    இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அ.தி.மு.க.வில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

    • தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தே.மு.தி.க. பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.
    • பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்க அனைத்து கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருந்தால் தலா 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலையும், தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருந்தால் தலா 20 பேர் கொண்ட பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் முடியும் தேதிக்குள் இந்த பட்டியலை அளித்திருக்கவேண்டும்.

    அதன்படி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளித்துள்ளன. தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    தே.மு.தி.க. பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.ம.மு.க., புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 4-ந்தேதி மாலை நிலவரப்படி, அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளர்கள் பட்டியலை இன்றுவரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேலும் பல கட்சிகள் அதற்கான பட்டியலை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

    நட்சத்திர பேச்சாளர் பட்டியலை பல்வேறு கட்சிகள் வழங்கி உள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல்களில் யாருக்கு அனுமதி அளிப்பது என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டது.

    அந்த 2 பட்டியல்களையும் தங்களது பார்வைக்கு அனுப்பும்படி தேர்தல் ஆணையம் கேட்டது. எனவே அவற்றை அங்கு அனுப்பி வைத்துள்ளோம். அ.தி.மு.க. கட்சி சார்பில் எந்தப் பட்டியலுக்கு அனுமதி தர வேண்டும்? என்ற முடிவை இந்திய தேர்தல் ஆணையம் தான் எடுக்கும்.

    எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கொடுத்த பேச்சாளர் பட்டியல் ஏற்கப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது.
    • கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலைஅடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து தேர்தல் நடத்தப்பட்டு முறைப்படி பொதுச்செயலாளராகவும் அவர் தேர்வு ஆனார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் முறைப்படி மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இருப்பினும் தேர்தல் ஆணையம் உடனடியாக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும் விவகாரத்தில் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டது. இதற்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளை முடிவடைகிறது.

    இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டுள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அ.தி.மு.க.வில் திருத்தப்பட்ட விதிகளை ஏற்றுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமிக்கு முறைப்படி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் 2 முக்கியமான விஷயங்களை அ.தி.மு.க. சார்பில் முறையிட்டு கேட்டு இருந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.

    இதன்படி இன்று எடப்பாடி பழனிசாமி அ.தி. மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கர்நாடக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று பிற்பகல் தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில்தான் அ.தி.மு.க. விவகாரத்தில் பரபரப்பு திருப்பமாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

    தற்போது எடுக்கப்பட்டு உள்ள முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    • கோவா, குஜராத், மேற்கு வங்காளம் உள்பட 10 ராஜ்யசபை இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
    • ஜூலை 24-ம் தேதி தேர்தலும், அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர்.

    இதையடுத்து, காலியாக உள்ள அந்த 10 ராஜ்யசபை இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில் கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் 10 ராஜ்யசபை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூலை 24-ம் தேதி நடத்தப்படும்.

    காலியாக உள்ள இந்த இடங்களுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஜூலை 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்றுவரை இணையதளத்தில் உள்ளது.
    • அதிமுக தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மிக நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதில் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்றுவரை இணையதளத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது தீர்ப்பு இறுதியாகவில்லை. அதிமுக தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மிக நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என புகழேந்தி மனுவில் கூறியுள்ளார்.

    • இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
    • நாளை மறுநாள் தொடங்கி 17ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 17ம் தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் 18ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெற விரும்புவோர் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் திரும்ப பெறவேண்டும். செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. செப்டம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    • அ.தி.மு.க. மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர் பொதுக்குழு மூலமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற மாற்றங்களுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே அ.தி.மு.க. கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை அங்கீகரிக்க முடிவு செய்தோம். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எந்த மாதிரியான தீர்ப்பு வருகிறதோ? அதனையும் பின்பற்றுவோம்.

    சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்குகளின் போது தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படும் வகையில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டால் அதற்கேற்ப எங்களின் முடிவு இருக்கும்.

    இவ்வாறு டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது.
    • லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

    தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது.

    கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. முன்னதாக, 2019 லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை அன்று டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது. மூன்று வருட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, டெண்டுல்கர் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவார் என்று கூறப்படுகிறது.

    ×