என் மலர்
நீங்கள் தேடியது "பட்டாம்பூச்சிகள்"
- குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைத்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் மலர்கள் நடவு செய்யப்பட்டது.
ஊட்டி,
குன்னூரில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பூங்காவிற்கு பட்டாம்பூச்சிகள் வருகை புரிய தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளிலுள்ள 30 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள், நகராட்சிக்கு உட்பட்ட ஓட்டுப்பட்டரை வசம்பள்ளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு துர்நாற்றம் வீசுவதால் இந்த இடத்தின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்திய குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பட்டாம் பூச்சிகள் பூங்கா அமைத்தனர்.
அந்தப் பூங்கா பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ணங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலர்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது புதிய பூங்காவாக மாற்றப்பட்டு குப்பை மேலாண்மை பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் தொடர் மழை பெய்து வருவதாலும் பூங்காவில் மலர்கள் அதிக அளவில் மலர்ந்து உள்ளதால் பூங்காவிற்கு பட்டாம் பூச்சிகள் வருகை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த பட்டாம்பூச்சி வருகையை காண உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் இப்பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.
- கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1600 மீட்டர்கள் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் 13,987 ஹெக்டேர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது.
- தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் முதன்முறையாக லைகெனிடே இனத்தைச் சேர்ந்த ப்ளேன் பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மண்டலத்தின் தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ் ஆலோசனையின்படி பட்டாம்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டி.என்.பி.எஸ்) கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் திண்டுக்கல் வனக்கோட்டம் ஒருங்கிணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1600 மீட்டர்கள் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் 13,987 ஹெக்டேர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் புதர்க்காடுகள் தொடங்கி சோலைக்காடுகள் வரை பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் பரந்த புல்வெளிகள் உள்ளன.
சிறுமலை அதன் சுவையான வாழைப்பழத்திற்காக மட்டுமே பிரபலமாக அறியப்பட்டாலும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் இதமான வானிலையுடன் கொண்டுள்ளது.
சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன், ஐ.டி.பி-2 வனச்சரக அலுவலர் சிவா மற்றும் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்புடன் இணைந்து கணக்கெடுப்பை நடத்தினர்.
கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி, 129 இன பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டன. இந்த எண்ணிக்கை இப்பகுதியின் ஆரோக்கிய தன்மையைக் காட்டுகிறது.
இங்கு கண்டறியப்பட்ட இனங்கள் 5 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்தவை, ஸ்வாலோடெயில்ஸ் (10), வெள்ளை மற்றும் மஞ்சள் (22), தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் (36), ப்ளூஸ் (39) மற்றும் ஸ்கிப்பர்ஸ் (22).
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பழனி மலைகளுக்குச் சொந்தமானதாக அறியப்படும் நிம்ஃபாலிடே இனத்தைச் சேர்ந்த பழனி புஸ் ப்ரவுன் இனத்தைப் பார்ப்பது இந்த ஆய்வின் சிறப்பம்சங்களில் அடங்கும். இந்த இனம் சிறுமலையின் உயரமான பகுதிகளில் நன்கு காணப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் முதன்முறையாக லைகெனிடே இனத்தைச் சேர்ந்த ப்ளேன் பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. எதிர்கால ஆய்வுகளானது பறவைகள், அந்துப்பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்கினங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு தெரிவித்துள்ளார்.