என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரிகள் நிரம்பின"

    • கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    • மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் இங்குள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக பரமத்தி வேலூர், மங்களபுரம், ராசிபுரம், புதுச்சத்திரம், மோகனூர் உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழை–யால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் இங்குள்ள ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன.

    மாவட்டத்திலுள்ள 79 ஏரிகளில் 32 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 2 ஏரிகள் 75 சதவீதமும், 5 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 6 ஏரிகள் 25 முதல் 50 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பிள்ளன. மேலும் 27 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையிலே காட்சி அளிக்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்ச–மாக பரமத்தி வேலூரில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மங்களபுரத்தில் 18.40 மில்லி மீட்டர், எருமப்பட்டி-5, மோகனூர்-13, நாமக்கல்-2, புதுச்சத்திரம்-11, ராசி புரம்-14.3, சேந்தமங்கலம்-9, திருச்செங்கோடு-1, கலெக்டர் அலுவலக பகுதி-6, கொல்லி மலை-18 என மாவட்டம் முழுவதும் 117.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன.
    • 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந்தன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நீர்வள துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலம் நிலவிய ஆகஸ்ட் மாதத்தில் 88 ஏரிகளில் கன்னங்குறிச்சி மூக்கனேரி, பைரோஜி ஏரி, கமலாபுரம் பெரிய ஏரி, கமலாபுரம் சின்ன ஏரி,கொண்டலாம்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, முட்டல் ஏரி, மணிவிழுந்தான் ஏரி,

    தேவியாக்குறிச்சி ஏரி, செந்தாரப்பட்டி ஏரி உள்பட

    29 ஏரிகள் முழுமையாக நிரம்பின. அபினவம் ஏரி, சின்ன சமுத்திரம் ஏரி உள்பட 8 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியிருந்தன. 15 ஏரிகள் வறண்ட நிலையில் இருந்தன.

    தற்போது வடகிழக்கு பருவமழை காலம் காரண

    மாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 நாட்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகளில் வரத்து, கால்வாய்களில் நீரோட்டம் அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து 88 ஏரிக ளில், 55 ஏரிகள் முழுமையாக நிரம்பி அவற்றிலிருந்து உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. 75 முதல் 99 சதவீதம் வரை நீர் நிரம்பிய நிலையில் 4 ஏரிகள் உள்ளன.

    50 முதல் 74 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பிய நிலையில் 8 ஏரிகள் உள்ளன. ஆறு ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் மேல் 49 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. 25% குறைவாக 4 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது. 11 ஏரிகள் இன்னும் வறண்ட நிலையில் தான் காட்சியளிக்கின்றன. வடகி ழக்கு பருவமழை காலம் இன்னும் நீடிப்பதால் 50% வரை நீர்மட்டம் எட்டி உள்ள ஏரிகள் விரைவில் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறைந்த அளவு நீர் இருப்பு உள்ள ஏரிகளும், வறண்ட நிலையில் உள்ள ஏரிகளும், வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் நிரம்ப வேண்டும் என்றும், அதற்கான ஆக்கிர மிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் உருவானதை அடுத்து, நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக, சென்னையில் உள்ள முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, பூண்டி ஏரியில் நீர்வரத்து 680 கன அடியாக உள்ளது. அதனால், பூண்டி ஏரியில் தற்போதைய நீர்மட்டம் 22.84 அடியாக உள்ளது.

    புழல் ஏரியில் 2928 மில்லியன் கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 17.10 அடியாக உள்ளது.

    சோழவரம் ஏரியில், 140 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 2.75 அடியாக உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில், நீர் இருப்பு 2368 மில்லியன் கன அடி உள்ள நிலையில், நீர் வரத்து 4764 கன அடியாக உள்ளது. இதனால் தற்போதைய நீர் மட்டம் 19.02 அடியாக உயர்ந்துள்ளது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் நீர்வரத்து 30 கன அடி உள்ள நிலையில், தற்போதைய நீர்மட்டம் 30.34 அடியாக உயர்ந்துள்ளது.

    • 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
    • நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    நேற்று ஒரே நாளில் 52 ஏரிகள் நிரம்பி உள்ளன. 241 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும் , 284 ஏரிகள் 50 சதவீதமும், 200 ஏரிகள் 25 சதவீதமும, 70 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    உத்திரமேரூர் - 20.5 செ.மீ

    காஞ்சிபுரம் - 15.3 செ.மீ

    செம்பரம்பாக்கம் - 13.2 செ.மீ

    வாலாஜாபாத் - 12.7செ.மீ

    ஸ்ரீபெரும்புதூர்- 13.1 செ.மீ

    குன்றத்தூர் - 10.7செ.மீ

    மஞ்சள் நீர் கால்வாய்

    பலத்த மழை காரணமாக திருகாலிமேடு அருந்ததி பாளையம் பகுதியில் உள்ள மஞ்சள் நீர் கால்வாயில் இருந்து வெளியேறிய தண் ணீர் அருகில் உள்ள குடி யிருப்புகளுக்குள் புகுந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மாநகராட்சி நிர்வாகம் சரியான திட்ட மிடாமல் மஞ்சள் கால்வாயில் மேற்கொண்டு வரும் பணியினால் கால்வாயில் போதிய மழை நீர் செல்ல முடியாமல் தண்ணீர் வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ×