என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைலாசா"

    • ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக நித்யானந்தா தகவல்
    • Youtube Live கமென்ட் ஒன்றை நித்யானந்தா படித்து காட்டினார்

    பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார்.

    அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார். ஆனால் இல்லாத நாட்டுக்கு அவர் பெயர் சூட்டுவதாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேசஸ்வரன் நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் பிரசங்கம் செய்தார். அப்போது இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் சமாதி அடைந்து விட்டதாக அறிவித்தார். இது நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நித்யானந்தா நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார், நித்யானந்தா இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, இன்று அதிகாலை யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    யூடியூப் நேரலையில் பேசிய நித்யானந்தா பேசியவை:-

    இன்று, ஏப்ரல் 3, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுதான் உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்

    பலபேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும் அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன்"

    மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன்"

    என்று தெரிவித்தார்.

    மேலும், இது தான் நேரலையில் தான் பேசுகிறேன் என காட்டுவதற்கு Youtube Live கமென்ட் ஒன்றை நித்யானந்தா படித்து காட்டினார்

    • நித்யானந்தா உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது
    • நித்யானந்தா மீது இந்துவிரோத சக்திகளால் 70க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

    பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பி ஓடினார்.

    அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற விண்ணப்பிக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி அவர் அந்த தீவுக்கு கைலாசா நாடு என பெயரிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்தார். ஆனால் இல்லாத நாட்டுக்கு அவர் பெயர் சூட்டுவதாக பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேசஸ்வரன் நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் பிரசங்கம் செய்தார். அப்போது இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் சமாதி அடைந்து விட்டதாக அறிவித்தார். இது நித்யானந்தாவின் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நித்யானந்தா நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார், நித்யானந்தா இறந்துவிட்டதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த பதிவில், "பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான, இந்துவிரோத ஊடகங்களின் சட்டவிரோதமான பொய் தகவல் பிரச்சாரத்திற்கு கைலாஸா கண்டனம் தெரிவிக்கிறது.

    பல இந்துவிரோத ஊடக நிறுவனங்கள் வேண்டுமென்றே, தீய நோக்கத்துடன், சட்டவிரோதமான முறையில், ஜகத்குரு மஹா சன்னிதானம் (SPH) பகவான் நித்யானந்த பரமசிவம் தனது உடலை விட்டு பிரிந்துவிட்டதாக பொய் தகவல் வெளியிட்டுள்ளனர்.

    பகவான் நித்யானந்த பரமசிவம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது.

    மார்ச் 30, 2025 அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் உகாதி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து பக்தர்கள், சீடர்கள் மற்றும் 2 பில்லியன் இந்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் அளித்தார்.

    பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை இழிவுபடுத்தவும் அவதூறு செய்யவும் தொடுக்கப்பட்ட இந்த தீய அவதூறு பிரச்சாரத்தை கைலாஸா திட்டவட்டமாக கண்டனம் செய்கிறது.

    ஒருங்கிணைந்த அவதூறு பிரச்சாரத்தின் ஒரு பகுதியான இந்த தீய, சட்டவிரோதமான வெளியீடுகள் உலகளவில் 2 பில்லியன் இந்து பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளன.

    இந்த தவறான தகவல் பிரச்சாரம், சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட மத சிறுபான்மையினரை முறையாக தாக்குவதை நோக்கமாக கொண்ட பரந்த குற்றவியல் சதியின் ஒரு பகுதி மட்டுமே.

    இந்த பிரச்சாரம் ஊடக அவதூறு, வெறுப்பு பேச்சு, மற்றும் ஒருங்கிணைந்த சட்டபோர் மூலம் தொடுக்கப்படும் இனப்படுகொலை நோக்கத்தின் தெளிவான அடையாளங்களை கொண்டுள்ளது.

    இந்த அவதூறு பிரச்சாரத்தின் நேரம், மற்றும் பல ஊடக சேனல்கள் மூலமாக ஒருங்கிணைந்த வெளியீடு, தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை அதிகரிக்க வேண்டுமென்றே செய்யப்பட்ட உத்தியை குறிக்கிறது.

    பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் மீது இந்துவிரோத சக்திகளால் 70க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

    நேரடி வழிகளில் தோல்வியடைந்ததால், இந்துவிரோத சக்திகள் இப்போது சட்டவிரோத போரை நாடுகின்றனர், இந்துவிரோத ஊடகங்களைப் பயன்படுத்தி பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தனது உடலை விட்டு சென்றுவிட்டதாக தீய வதந்திகளை பரப்புகின்றனர். இந்துவிரோத கூட்டணியின் ஊடக பிரிவு இந்த பொய்யை விரைவாக கொண்டாடுவது, அவர்களின் ஆழமான வியூகத்தை வெளிப்படுத்துகிறது: பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களை கொலை செய்வதற்கான ஒரு சூழ்ச்சியான திட்டத்திற்கு அடித்தளம் அமைப்பது.

    இந்த ஒருங்கிணைந்த, சட்டவிரோத, அவதூறு தகவல் பிரச்சாரம் ஒரு "சட்டபோர்" - ஒரு மத சமூகத்தை துன்புறுத்த சட்ட செயல்முறைகளை ஆயுதமாக்குதல். இது பின்வருவனவற்றால் நிரூபிக்கப்படுகிறது:

    பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு எதிரான சட்டபோருடன் அவதூறு வெளியீடுகள் உடனமைந்த நேரம். தொடர் தாக்குதலுக்கும் சட்டபோருக்கும் அடிப்படையாக பயன்படுத்தப்படும் அவதூறு தகவல்களை வெளியிடும் முறை.

    நம்பகத்தன்மையை உருவாக்க பல தளங்களில் தவறான கருத்துக்களை ஒருங்கிணைந்து வெளியிடுதல்.

    கைலாஸா அனைத்து ஊடக நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை - இந்துவிரோத, சட்டவிரோதமான, தகவல் பிரச்சாரம் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலை வேண்டுமென்றே பரப்பும் - இந்த தீய சக்திகளை கண்காணிக்க அழைக்கிறது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    • முதலில் பிடதி ஆசிரமத்தில் தகுதிக்கேற்ப வேலை அளிக்கப்படும்.
    • திறமையை பொறுத்து கைலாசாவிற்கே வரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்.

    சென்னை:

    பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்கில் கடந்த 2010-ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா கர்நாடகா மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தாவுக்கு தலைமறைவானார்.

    இந்த வழக்கின் விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து ராம்நநகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவான நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றினார்.


    கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.77-வது பொதுச்சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நாவுக்கான தூதராக நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

    கைலாசா எ​ங்கே இருக்கிறது என்ற கேள்விக்கே இதுவரை விடை கிடைக்காத நிலையில் இப்போது அங்கே வேலை வாய்ப்பு உள்ளதாக வெளி வந்துள்ள ஒரு விளம்பரம்  இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கைலாசாவில் பிளம்பிங் வேலை முதல் கணினி தொழில்நுட்ப பணிவரை தகுதிக்கேற்ப வேலை உள்ளது என்றும், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி என அத்தனையும் இலவசம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே ஆன்மிக பயிற்சியும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து இணையத்தில் நித்தியானந்தா சீடர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. வேலை வேண்டுவோருக்கு முதலில் கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில் தகுதிக்கேற்ப வேலை அளிக்கப்படும் என்றும் அவர்களது திறமையை பொறுத்து கைலாசாவிற்கே வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த நபர் தெரிவிக்கிறார். இந்த நிலையில் கைலாசா வேலை வாய்ப்பு விளம்பரம் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நித்யானந்தா கைலாசா எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டார்.
    • நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து உள்ளது.

    வாஷிங்டன்:

    பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

    இந்நிலையில், நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம். இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்குத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்தாகிறது.

    நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நிவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.

    • கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டனர்.
    • புகைப்படங்களில் கைலாசா பிரதநிதிகள் சிலர் அமெரிக்காவின் சில நகரங்களில் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது போன்று காட்சிகள் இருந்தன.

    ஜெனிவா:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    அதே நேரம் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் டிரினிடாட் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அவர் கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டனர்.

    அந்த புகைப்படங்களில் கைலாசா பிரதநிதிகள் சிலர் அமெரிக்காவின் சில நகரங்களில் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது போன்று காட்சிகள் இருந்தன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைலாசாவில் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியான சில புகைப்படங்கள் கைலாசா பற்றிய பரபரப்பை அதிகரித்து உள்ளது. அதில் ஜெனிவாவில் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பொருளாதார, சமூக பண்பாட்டு உரிமைகள் என்ற தலைப்பிலான கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜய பிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன.

    இந்த மாநாட்டில் விஜய பிரியா பேசும் போது, எங்களது பரமகுருவான நித்யானந்தா மற்றும் கைலாசாவில் வசிக்கும் 20 லட்சம் இந்து மக்கள் மீதான அடக்குமுறையை தடுக்க சர்வதேச நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று பேசி உள்ளார்.

    விஜய பிரியாவுடன் கைலாசா லாஸ் ஏஞ்சல்ஸ் தலைவர் முக்திகா ஆனந்த், செயின்ட் லூயிஸ் தலைவர் சோனா காமத், இங்கிலாந்தின் கைலாசா சபை தலைவர் நித்யா ஆத்ம தாயி, பிரான்சின் தலைவர் நித்யா வெங்கடேசனந்தா ஆகிய 5 பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே மாநாட்டில் பங்கேற்று பேசிய கைலாசா பிரதிநிதி விஜய பிரியா பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டனில் அவருக்கு வீடு இருப்பதாக கைலாசாவில் இணைய தள பக்கங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும் விஜய பிரியா ஐ.நா.வுக்கான கைலாசா நாட்டின் நிரந்தர தூததராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிரதிநிதிகளுடன் சில ஒப்பந்தங்களில் விஜய பிரியா கையெழுத்திடும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

    கைலாசா நாட்டில் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பல நாடுகளில் திறந்துள்ளதாக விஜய பிரியா கூறியுள்ளார்.

    • கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.
    • ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன.

    ஜெனீவா:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.

    அதில் ஜெனீவாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன. அவர் சில கருத்துகளையும் பதிவு செய்திருந்தார்.

    இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து உள்ளார்.

    அதில் அவர், 'கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர்.

    அவர்கள் கூறியதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

    • நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
    • கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் சமீபத்தில் நேவார்க் நகரம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

    நியூயார்க்:

    கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா, இது இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார். அத்துடன் தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார். சர்வதேச அளவில் இது பேசுபொருளாக ஆனபோதிலும், நித்தியானந்தா உருவாக்கியதாக சொல்லப்படும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.

    இந்த சூழ்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நேவார்க் நகரம் கைலாசா நாட்டுடன் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இது கைலாசாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் என்றே நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். ஆனால் கைலாசா தொடர்பான சர்ச்சைகளை அறிந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நித்தியானந்தாவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா, 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார பிணைப்பை ஏற்படுத்தும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போலி தேசமான கைலாசாவுடன் ரிச்மண்ட், விர்ஜீனியா முதல் டேடன், ஓஹியோ, பியுனா பார்க், புளோரிடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்கள் கலாச்சார கூட்டாண்மை ஒப்பந்தம் செய்திருப்பதாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போலி சாமியாரான நித்தியானந்தா ஏமாற்றிய நகரங்களை கண்டுபிடித்து வருகிறோம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கைலாசாவால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறிய நேவார்க் நகர மேயர் ரஸ் பராக்கா நேர்வார்க் நகரம் மோசடிக்கு பலியாகிவிட்டது என்றும் கூறி இருந்தார்.
    • நித்யானந்தாவின் பெண் தூதர்கள் மேலும் பல நகரங்களை அணுகி ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தியதும் அம்பலமாகி உள்ளது.

    புதுடெல்லி:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தா இந்தியாவில் உள்ள வழக்குகளில் தேடப்படும் நிலையில் வெளிநாடு தப்பி ஓடினார்.

    அவர் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பெயர் சூட்டியதோடு அந்த நாட்டிற்கென தனி பாஸ்போர்ட், கொடி மற்றும் ரூபாய் நோட்டுகளையும் அறிவித்தார்.

    அதோடு கைலாசா நாடு சார்பில் பல்வேறு நாடுகளுக்கான தூதர்கள் என பெண் தூததர்களையும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக அறிவிக்கப்பட்ட விஜய பிரியா நித்யானந்தா சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஐ.நா. அறிவித்தது. இதற்கிடையே விஜய பிரியா நித்யானந்தா மற்றும் கைலாசா பிரதிநிதிகள் சிலர் அமெரிக்காவில் உள்ள நேவார்க் நகரத்துடன் ஒப்பந்தங்கள் செய்வதுபோல புகைப்படங்கள் கைலாசாவில் அதிகாரபூர்வ இணையதள பக்கங்களில் வெளியாகின.

    இதை வைத்து கைலாசா நாட்டுக்கு ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா அங்கீகாரம் அளித்துவிட்டது என கைலாசா பிரதிநிதிகள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர். ஆனால் ஐ.நா. சபையில் கைலாசாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து நித்யானந்தாவின் கைலாசா, அமெரிக்காவில் சில நகரங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நேவார்க் நகரம்-கைலாசா இடையே இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நித்யானந்தா சீடர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் உள்ள சமூகங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள சமூகங்களுக்கும் இடையே உள்ள பல்வேறு கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள 'சிஸ்டர் சிட்டிஸ்' என்ற அமைப்பின் படி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதுபோன்ற ஒப்பந்தங்களை பயன்படுத்தி கைலாசாவை தனி நாடாக கட்டமைக்கும் முயற்சிகளை அறிந்த நேவார்க் நகர மேயர் கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார்.

    கைலாசாவால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறிய நேவார்க் நகர மேயர் ரஸ் பராக்கா நேர்வார்க் நகரம் மோசடிக்கு பலியாகிவிட்டது என்றும் கூறி இருந்தார்.

    இந்நிலையில் நேவார்க் போலவே விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் நகரம், ஒஹையோ மாகாணத்தில் உள்ள டேட்டன் நகரம், புளோரிடாவில் உள்ள பியூனா பார்க் நகரம் உள்பட அமெரிக்காவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நகரங்களுடன் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக பாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    கைலாசா தொடர்பான தகவல்களை சரிபார்க்காமல் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாகாணங்களில் மேயர், நகராட்சி கவுன்சில் உள்பட தன்னாட்சி அரசும் போலியான கைலாசா நாட்டிடம் ஏமாந்துள்ளதாகவும் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    இது ஒருபுறம் இருக்க நித்யானந்தாவின் பெண் தூதர்கள் மேலும் பல நகரங்களை அணுகி ஒப்பந்தம் செய்ய வற்புறுத்தியதும் அம்பலமாகி உளளது.

    இதுகுறித்து வடக்கு கரோலினாவை சேர்ந்த ஜாக்சன்வில் என்பவர் கூறும் போது, கைலாசாவுடனான எங்கள் பிரகடனங்கள் ஒரு அங்கீகாரம் அல்ல. அவை கோரிக்கைக்கான பதில் மட்டுமே. அவர்கள் கொடுத்த தகவல்களை நாங்கள் சரிபார்க்கவில்லை என்றார்.

    மேலும் கலிபோர்னியாவே சேர்ந்த நார்மாடோரஸ், ஒகியோவை சேர்ந்த டிராய்ட் பால்டர்சன் ஆகிய 2 எம்.பி.க்கள் கைலாசா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதன் பேரிலேயே இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    தற்போது கைலாசாவு டனான ஒப்பந்தத்தை நேவார்க் நகரம் ரத்து செய்ததை தொடர்ந்து மற்ற நகரங்களும் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

    • கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
    • கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது அதன் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி என கேள்விகள் எழுந்தது.

    புதுடெல்லி:

    கடத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடப்பட்ட சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடியதோடு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்த அவர் வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாக கூறி அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

    இதற்கிடையே சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் அவர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் நேரலையில் தோன்றி சொற்பொழிவு ஆற்றி வருகிறார். மேலும் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    கைலாசா என்ற ஒரு நாடே இல்லாத போது அதன் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி என கேள்விகள் எழுந்தது. இதற்கு ஐ.நா.செய்தி தொடர்பாளர்கள் அளித்த விளக்கத்தில், அவர்களின் பேச்சு எடுத்துக்கொள்ளப்படாது என அறிவித்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் இணையதள செயலியான லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் இருந்தது.

    அதற்கு கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கைலாசாவுக்கு வரமுடிய வில்லை என்ற ஏக்கமா கவலையை விடுங்கள்.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியதில் இருந்தே அந்த நாடு எங்கு இருக்கிறது என்ற கேள்விகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

    பசுபிக் பெருங்கடலில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயர் சூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கைலாசா நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக நித்யானந்தாவின் சிஷ்யைகள் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    மேலும் கைலாசாவை இறையாண்மை மிக்க தேசமாக உருவாக்கும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை முதல் சிறிய நாடுகள் வரை ஒப்பந்தங்கள் செய்துள்ளதாக கூறி அது தொடர்பான புகைப் படங்கள், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவின் சிஷ்யைகள் பதிவிட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் பராகுவே நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கைலாசா நாட்டுடன் செய்த ஒப்பந்தம் தொடர்பாக அவரது பதவி பறிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த புகாரை நித்யானந்தா தரப்பினர் மறுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அவரது தரப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கைலாசாவுக்கு வரமுடிய வில்லை என்ற ஏக்கமா? கவலையை விடுங்கள். கைலாசா உங்களை தேடி வரப்போகிறது என கூறியுள்ளனர். மேலும் நித்யானந்தா பேசும் ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    அதில், கைலாசாத்திற்கு வர முடியவில்லையா? கவலைப்படாதே, கைலாசா உங்களிடம் வருகிறது. நீங்கள் எங்கு இருந்தாலும் பட்டங்கள் மற்றும் முனைவர் பட்ட வாய்ப்புகளுடன் கைலாசா உங்களை தேடி வரும்.

    ஆன்மீகமும், அறிவியலும் கலந்த பி.எச்.டி. படிப்பை மேற்கொள்ள கைலாசா உங்களை தேடி வரும். இன்றே பி.எச்.டி. பயில நித்யானந்தா இந்து பல்கலைக்கழகத்தில் சேர பதிவு செய்யுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் அருளாசி மற்றும் ஆன்மீக பயிற்சிகளை வழங்கி வரும் நித்யானந்தாவின் இந்த புதிய அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கைலாசா தீவில் நிதியானந்தா இருப்பதாக தகவல். இது எங்கிருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
    • ஈக்வடாரில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தலைமறைவானார். பின்னர் "கைலாசா" தீவுக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது.

    தான் கைலாசா தீவில் இருப்பதாகவும், கைலாசாவை இந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார். தங்களுக்கென தனி அரசு, தனிக்கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும் அறிவித்தார்.

    தலைமறையாக இருந்த போதிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சொற்பொழிவு வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். எனினும், கைலாசா நாடு எங்கு இருக்கிறது, நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில், நித்தியானந்தா தொடர்பாக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அரசு சார்பில் நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, "நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்கா கண்டத்தின் ஈக்வடாரில் இருக்கிறார்" என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம் இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தலைமறைவானார். பின்னர் "கைலாசா" தீவுக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது.

    தான் கைலாசா தீவில் இருப்பதாகவும், கைலாசாவை இந்துக்களுக்கான தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார். தங்களுக்கென தனி அரசு, தனிக்கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும் அறிவித்தார்.

    தலைமறையாக இருந்த போதிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சொற்பொழிவு வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். எனினும், கைலாசா நாடு எங்கு இருக்கிறது, நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது.

    இந்த நிலையில், நித்தியானந்தா தொடர்பாக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அரசு சார்பில் நித்தியானந்தா ஈக்வடாரில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்யானந்தா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, "நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்கா கண்டத்தின் ஈக்வடாரில் இருக்கிறார்" என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வாதத்தை கேட்ட நீதிமன்றம் இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.

    ×