search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமோ அன்பரசன்"

    • அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது.
    • அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    மனிதர் புனிதர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கப்பட்ட இந்த புனித இயக்கத்தை 3-ம் பெரிய இயக்கமாக உருவாக்கி, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர் அன்பரசன் நாகூசாமல் பேசியது ஒவ்வொரு தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் உள்ளது.

    அம்மாவைப் பற்றி தா.மோ.அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது. அமைச்சர் அன்பரசன், ஜெயலலிதாவை அவமரியாதையாக பேசியதற்கு அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தா.மோ.அன்பரசனை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அம்மா பேரவை வலியுறுத்துகிறது.

    2 கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக திகழும் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து இது போன்று பேசினால் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணையை பெற்று, அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ் நாட்டில் அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன்.
    • மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையை அன்பரசன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் நாட்டில் அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன். அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும்.

    அண்ணாவின் பெயரால் புரட்சித் தலைவர் இயக்கம் கண்டபோதும் சரி, அவருக்குப் பின்னால் இந்த இயக்கத்தை அம்மா வழிநடத்திய போதும் சரி, கருணாநிதி எத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாரோ, அதையே இப்போது ஸ்டாலினின் தொண்டரடிப் பொடி யாழ்வார்கள் கையில் எடுத்திருப்பது, அவர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையை அன்பரசன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நா கூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார்.
    • பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றார் ஜெயக்குமார்.

    சென்னை:

    காஞ்சீபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், "தி.மு.க. ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் தி.மு.க.வினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நடிகர்களை ரசிக்கலாம், அதோடு வந்துவிட வேண்டும். முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது" என்றார்.

    இந்நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருத்துக்கு பதிலடி கொடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தகுதி இல்லை.

    மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

    உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நா கூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார்.

    நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
    • காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று நாளை (7-ந் தேதி) காலை தாயகம் திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.

    குறிப்பாக சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹைபக் லாய்டு நிறுவனத்துடன் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதுபோன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வரும் படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம் முன்பு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மாபெரும் தொழில் புரட்சியை செய்து வரும் தொழில் புரட்சி நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது "நமது கடமை, நமது உரிமை" என்ற அந்த உணர்வோடு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கழகத் தோழர்கள் அனைவரும் தமது கரங்களில் கழகத்தின் இருவண்ண கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் ஏந்தி, மேள-தாளம், பேண்ட் வாத்தியம் முழங்க மிகவும் கோலாகலமான முறையில் எழுச்சியான வரவேற்பு அளித்திடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.
    • பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46-வது பிறந்த நாள் விழாவை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 1 மாதம் விளையாட்டு போட்டிகள் நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து உள்ளார்.

    இதையொட்டி நேற்று ஆலந்தூரில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை பரிசாக வழங்கினார்.

    இதன் பிறகு தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை வரவேற்று வழியனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்பாடும் 'மாமன்னா' பிரசார பாடலையும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.

    பம்மல் நகர இளைஞரணி நிர்வாகி ராஜசேகர் உருவாக்கிய இந்த பாடல் இப்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் இந்த பாடலை வெளியிட்டதும் வாட்ஸ்-அப், யூ டியூப்பில் மாமன்னா பாடல் வைரலானது.

    • திருத்தணியில் புதிய வெள்ளித்தேர் கடந்த வாரம் வீதிவுலா தொடங்கி வைக்கப்பட்டது.
    • பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை ஓட வைத்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை, நங்கநல்லூர், ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்திட ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் திருப்பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையானது திருக்குளங்களை சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல், நந்தவனங்களை உருவாக்குதல், ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த கோவில்களுக்கு குடமுழுக்கு மேற்கொள்ளுதல், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு நன்னீராட்டு பெருவிழா நடத்துதல், கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான முடிகாணிக்கை மண்டபம், விருந்து மண்டபம், திருமண மண்டபம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கோவில்களுக்கு புதிய தேர்கள் செய்தல், பழுதடைந்த தேர்களை மராமத்து பணி செய்தல், பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தேர்களை உலாவர செய்தல் குறிப்பாக சமயபுரம், மாரியம்மன் கோவில், ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில்களில் பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர்களை ஓட வைத்த ஆட்சி இந்த ஆட்சியாகும்.

    மேலும், திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் பங்களிப்புடன் புதிய வெள்ளித்தேர் ரூ.4 கோடி செலவில் செய்யப்பட்டு கடந்த வாரம் உலா வர செய்யப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.31.24 கோடி மதிப்பீட்டில் 51 புதிய மரத்தேர்கள் செய்வதற்கும், ரூ.4.12 கோடி மதிப்பீட்டில் 13 மரத்தேர்களை மராமத்து செய்வதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பெரியபாளையம், பவானியம்மன் கோவில், புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில், நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்வதற்கும், இருக்கண்குடி, மாரியம்மன் கோவில், சென்னை, காளிகாம்பாள் கோவில், கருக்காவூர், கர்ப்பகரட் சாம்பிகை கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், திருத்தணி, சுப்ரமணிய சுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய வெள்ளித்தேர்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருத்தணியில் புதிய வெள்ளித்தேர் கடந்த வாரம் வீதிவுலா தொடங்கி வைக்கப்பட்டது.

    இன்றைய தினம் நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு புதிய தங்கத்தேர் செய்திட ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தேர் உருவாக்கும் பணி உபயதாரர் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்கு ஏதுவாக புதிய தங்கத் தேர் உலா வர துரித நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்ஆர்.எஸ். பாரதி, கூடுதல் ஆணையர் ந.திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, அலுவலர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
    • எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பல்லாவரம் கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ. 76.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கூட்டமைப்பு கட்டிடம், மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.69 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள கட்டிடங்கள் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

    வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் துணைத்தலைவர் ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்ணிவாக்கம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமி சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு அரசு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பல்லாவரம் கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை கொச்சைபடுத்தி சீமான் ஆவேசமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
    • கலைஞரின் பேச்சை பாருங்கள், அவரின் வரலாற்றை படியுங்கள்.

    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூர் தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை கொச்சைபடுத்தி சீமான் ஆவேசமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ஆவேசமாக ஒருவர் பேசுவதால் தலைவர் ஆகிவிட முடியாது. இந்த ஆவேசமான நாடக அரசியல் பேச்சையும், மூளைச்சலவை வீடியோக்களையும் தற்போது இளைஞர்கள் அதிகளவில் பொபைல் போன்களில் பார்த்து வருகிறார்கள். இது ஆபத்தானது இதற்கு இளைஞர்கள் அடிமையாக கூடாது.

    கலைஞரின் பேச்சை பாருங்கள், அவரின் வரலாற்றை படியுங்கள். அப்போதுதான் அவர் இளைஞர்களுக்கு செய்த நலத்திட்டங்கள் உங்களுக்கு தெரியவரும் என்று பேசினார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், ஒன்றிய கழக செயலாளர் தமிழ்மணி, ஆர்.டி.அரசு, இளங்கோ, மாமல்லபுரம் வெ.விசுவநாதன், அரவிந்த் சம்பத்குமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
    • 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா வழங்கி பேசியதாவது:-

    தொழில் முனைவோர்கள் நிலத்தினை வைத்து கடன் பெறுவதும், தொழிலை விரிவுபடுத்தவும் முடியாமல் பல சிக்கல்களை சந்தித்து வந்தனர். கழக அரசு பொறுப்பேற்றவுடன், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அரசிடம் தொழில் முனைவோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    முதல்கட்டமாக 32 தொழிற் பேட்டைகளில் 1,569 ஏக்கர் நிலங்களுக்கான வகைப்பாட்டினை மாற்றி, பட்டா வழங்க பரிந்துரைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், 1,245 ஏக்கர் நிலம் பட்டா வழங்குவதற்காக தமிழ்நாடு சிட்கோ பெயரில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து, 28.3.2023 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கிண்டி, அம்பத்தூர் தொழிற் பேட்டையை சேர்ந்த 5 தொழில் முனைவோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக, இன்று 9 தொழிற்பேட்டைகளில் உள்ள 280 தொழில் முனைவோர்க ளுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஏனையோர்க்கு படிப்படியாக பட்டா வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்".

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான இரு பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், சிட்கோ தொழிற் பேட்டையில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் 25 தூய்மை பணியாளர்களுக்கு சீருடையும் அமைச்சரால் வழங்கப்பட்டது.

    • பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநக ராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு மற்றும் காரைப்பேட்டை ஆகிய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

    காரைப்பேட்டை மற்றும் சித்தேரிமேடு ஆகிய பகுதிகளில் உத்தேச பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர் மலர்கொடி குமார் உடன் இருந்தனர்.

    • கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
    • மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் பிற துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப் பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி, பொது சேவை மையங்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை நீர்வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள், மாவட்ட தொழில் மையம், செயல்படுத்தும் திட்டங்கள், மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மழைநீர் வடிவதற்காக செயல்படுத்தும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்த டி.ஆர்.பாலு எம்.பி. மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தி.மு.க. ஆட்சியில் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
    • எந்த சாலையும் பளிச் என்று காணப்படாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    நகராட்சியாக இருந்த தாம்பரம் 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 70 வார்டுகளை உள்ளடக்கிய இந்த மாநகராட்சியில் 55க்கும் மேற்பட்ட வார்டுகளில் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் வெற்றி பெற்று உள்ளனர். மேயராக வசந்த குமாரி, துணை மேயராக காமராஜ் உள்ளனர். இருவரும் தி.மு.க. தான்.

    இந்நிலையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்று ஓராண்டு கடந்தும் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் இன்னும் அடிப்படை பிரச்சினையான சாலை வசதி கூட சரி செய்ய முடியாத நிலையில் மாநகராட்சி உள்ளதாக தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒவ்வொரு சாலையும் பள்ளம்-மேடாக காட்சி அளிக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட சாலைகள் தி.மு.க. ஆட்சியில் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    ஒவ்வொரு சாலையும் நடுநடுவே பாதாள சாக்கடைக்காக வெட்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் மூடப்படாமல் உள்ளதுடன் சாலை ஓரம் மணல் மற்றும் கட்டிட இடிபாடுகளும் காணப்படுகிறது.

    எந்த சாலையும் பளிச் என்று காணப்படாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது போல கழிவு நீர் பிரச்சினை, குப்பை பிரச்சினையும் தீர்க்கப்படாமல் உள்ளது.

    இது தொடர்பாக புகார்கள் தொகுதி அமைச்சரான தா.மோ. அன்பரசன் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து அவர் வருகிற 20-ந் தேதி தாம்பரம் மாநகராட்சியின் தி.மு.க. கவுன்சிலர்களின் கலந்தாய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். குரோம்பேட்டையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ.க்களான இ.கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு புகார் தெரிவிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×