search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 சதவீதம்"

    • பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையத்தின் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்டத் தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பள்ளிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டு 20 சதவீத போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.


    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மே ளன தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவு தொழில் என்பது நூற்றாண்டு பாரம்பரிய மிக்க அரிய குடிசை தொழில். சிறு தொழிலாகும். தற்சமயம் கைத்தறி நெசவு கூட்டுறவு அமைப்பின் கீழ் அரசை நம்பி மட்டுமே நடந்து வருகிறது.

    தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நவீன விசைத்தறிகளின் வருகை யால் கைத்தறி நெசவை மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

    தொழில் துறை மாற்ற ங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றளவும் கிடைக்க பெறாததும் கைத்தறி நெசவின் அழி விற்கு முக்கிய காரணமாகும்.

    எனவே நெசவாளர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்று தர வேண்டியது நம் எல்லோ ருடைய முக்கிய கடமை யாகும். நெசவாளர்களுக்கு கூலியை அரசுதான் வழங்கி வருகிறது.

    நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    நெசவாளர் சங்கங்களில் நிதி ஆயிரத்திலிருந்து தான் கூலி வழங்கபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். நெசவாளர் ஊதியத்திற்கும், அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் எதற்காக ஊதிய உயர்வு வழங்கும் நிலையை அரசு தன்கட்டுப் பாட்டில் வைத்து கொண்டு உள்ளது.

    ஊதிய உயர்வை வழங்கும் நிலையை அரசு தன் கட்பாட்டிலிருந்து மாற்றி கூட்டுறவு சங்கங் களின் மண்டல அல்லது சரக அளவில் முடிவு செய்து கொள்ள உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட தங்களை அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் கைத்தறி நெசவா ளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்க அரசானை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.

    தற்சமயம் தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்வித மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.

    கடந்த காலங்களில் மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் மூலம் ஆண்டு ஒன்றிக்கு ரூ.30 ஆயிரம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.

    தற்சமயம் கைத்தறி நெசவில் ஈடுபட்டு உள்ளவர்கள் 60 வயதை நெருங்கியவர்களும் அதனை தாண்டியவர்களும் உள்ளனர்.

    மருத்துவ செலவினங்களுக்காக மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    இதை அறிந்து தான் தமிழக அரசே நெசவாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடைமுறை படுத்த கடந்த ஆண்டே அறிவிப்பு வழங்கி இருந்தது.

    எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி அரசைமட்டும் நம்பி வாழும் தமிழக கைத்தறி நெசவா ளர்கள் குடும்பங் களை காப்பாற்ற வேண்டுகி–றோம்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • இதுவரை 20 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது.
    • இன்னும் 3 நாட்களுக்குள் பூத் சிலிப் வழங்கி முடிப்பார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகளில் வரும் 27-ந் தேதி இடைதேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,11,025 பேர், பெண் வாக்காளர்கள் 1,16,497 பேர், மற்றவர்கள் 25 பேர் என 2 லட்சத்து 27,547 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர்கள் தகவல் சீட்டு எனப்படும் பூத் சிலிப் ஓட்டுச்சாவடி நிலை அலுவ லர்கள் நேற்று முன்தினம் முதல் வீடு, வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.

    இச்சீட்டில், வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண், வரிசை எண், ஓட்டுச்சாவடியின் பெயர், தேர்தல் நாள், ஓட்டுப்பதிவு நேரம் ஆகியவை இருக்கும்.

    இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறுகையில், இதுவரை 20 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 3 நாட்களுக்குள் பூத் சிலிப் வழங்கி முடிப்பார்கள்.

    வாக்காளர்கள் வீட்டில் இல்லை உள்ளிட்ட காரணத்துக்காக பூத் சிலிப்பை வழங்க இயலா விட்டால் ஓட்டுச்சாவடியில் மீதமுள்ள பூத் சிலிப் வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுப்பதிவின்போது வாக்காளர்கள் வந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

    • நெற்பயிரில் உற்பத்தியை அதிகரிக்க செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை மூலம் கூடுதல் மகசூல் பெறலாம்.
    • இவை தொழில் நுட்ப ரீதியாக நிருபித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி – அரக்கன் கோட்டை மற்றும் மேட்டூர் மேற்கு கரை பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முழு அளவில் சாகுபடி பணிகள் நடக்கிறது. குறிப்பாக அதிக அளவில் நெல் பயிர் நடவுப்பணி நடக்கிறது.

    மாவட்டத்தில் கடந்தாண்டு உணவு தானிய சாகுபடி பரப்பு இலக்காக 63,800 ஹெக்டேர் உணவு தானிய உற்பத்தி இலக்கு 3.1 லட்சம் டன் என நிர்ணயித்தனர். இந்த இலக்கை எட்டிய நிலையில் செம்பை நெல் சாகுபடி எனும் ஒற்றை நெல் சாகுபடி மூலம் கூடுதல் மகசூலை பெற்றனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:

    நெற்பயிரில் உற்பத்தியை அதிகரிக்க செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று நெல் நடவு முறை மூலம் கூடுதல் மகசூல் பெறலாம். இவை தொழில் நுட்ப ரீதியாக நிருபித்துள்ளனர்.

    இந்நுட்பம் மூலம் 3 கிலோ விதை பயன்படுத்தி ஒரு சென்ட் நாற்றங்காலில் நாற்று உற்பத்தி செய்து 15 நாள் வயதுடைய செழிப்பான ஒற்றை நாற்றை போதிய இடை வெளி விட்டு நடலாம்.

    இதன் மூலம் விவசாயிகள் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். எனவே விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைபிடிக்க வலியுறுத்துகிறோம்.

    அதனையே வேளாண் துறையும் வலியுறுத்துகிறது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒற்றை நெல் சாகுபடி தொடர்பான விழிப்புணர்வு ஏற்கனவே உள்ளதால் கூடுதல் மகசூல் பெறும் நோக்கில் இம்முறையை கையாள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×