என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் இணைப்பு துண்டிப்பு"
- குடிசைப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
- தானேயில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
தானே:
தானே மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக மும்ரா, திவா குடிசைப்பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தநிலையில் தானே மாநகராட்சியினர் மும்ரா, திவா பகுதியில் 4 நாட்கள் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த 212 குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல தானேயில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
- நிலுவை இன்றி வரி செலுத்த வேண்டும்
- நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் சிலர் குடிநீர் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நகராட்சி ஆணையாளர் பழனி, பொது மக்கள் நிலுவை இன்றி வரி செலுத்த வேண்டும் என ஆட்டோ மூலம் அறிவிப்பு செய்தார். ஆனாலும் சிலர் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தவில்லை.
அதைத்தொடர்ந்து ஆணையாளர் பழனி உத்தரவின்பேரில், பொறியாளர் கோபு, மேலாளர் தங்கராஜ், வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) முரளி உள்ளிட்ட நகராட்சி ஊழி யர்கள் 10-வது வார்டு பகுதிகளான சொரங்கன் வட்டம் மற்றும் ஊசி நாட்டான் வட்டம் பகுதிக்கு சென்று குடிநீர் கட்டணம் செலுத்தாத வீட்டின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
இதன் எதிரொலியாக நேற்று ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் ஒரு நாளில் குடிநீர் கட்டணம், சொத்து வரி ரூ.2 ½ லட்சம் வசூலானது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பழனி கூறுகையில்:-
பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகள் உடனடியாக நிலுவை இன்றி செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜோலார்பேட்டை நகராட்சி வளர்ச்சிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
- வரி பாக்கி செலுத்தாததால் நடவடிக்கை
- நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா பேரூராட்சியில் சொத்து வரி, குழாய் குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை நீண்ட காலமாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள வர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. வீட்டு வரி, குழாய் குடிநீர் கட்டணம், சொத்து வரி, கடை உரிமம் புதுப்பித்தல், பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி செலுத்தாமல் நீண்ட காலம் பாக்கி வைதிருப்பவர்களின் விவரங்கள் சேகரித்து அவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது.
இதனை பொருட்ப டுத்தாமல் இருந்த நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி அறிவுறுத்தலின் பேரில், கணக்காளர் அரவிந்தன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் வரி செலுத்த கால அவகாசம் முடிந்த நபர்களின் வீடுகளில் குழாய் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- நான் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவள். வேறு சமூகத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்து கொண்டு வீரபாண்டியில் வசித்து வருகிறேன்.
- இந்த நிலையில், வீரபாண்டி அருகே உள்ள அரசம்பாளையம் ஊர் தர்மகத்தாக்கள் எங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர்.
சேலம்:
சேலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் - ஜானகி தம்பதியினர் மற்றும் அவரது குடும்பத்தினர், இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட ஜானகி இதுகுறித்து கூறும்போது, நான் மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்தவள். வேறு சமூகத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு கலப்புத் திருமணம் செய்து கொண்டு வீரபாண்டியில் வசித்து வருகிறேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில், வீரபாண்டி அருகே உள்ள அரசம்பாளையம் ஊர் தர்மகத்தாக்கள் எங்கள் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். இது சம்பந்தமாக வீரபாண்டி பஞ்சாயத்து தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், ஊர் தர்மகத்தா, எந்த கோவிலுக்கும் செல்லக்கூடாது, எந்த வீட்டுக்கும் செல்லக்கூடாது, யாரையும் சந்திக்க கூடாது எனக் கூறி எங்களை ஒதுக்கி வைத்து விட்டனர். எங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டின் உரிமையாளரையும் ஒதுக்கி வைத்து விட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் எந்த பொருளும் வாங்க முடியாமலும், வாழவும் முடியாத சூழ்நிலை உள்ளது.
இது குறித்து தர்மகத்தாவிடம் கேட்டதற்கு, எங்கள் ஜாதி பெயரை சொல்லி பேசி மிரட்டினார். இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் ஊருடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும். எங்களை இழிவாக பேசிய தர்மகத்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.