என் மலர்
நீங்கள் தேடியது "திருமணம் ஏற்பாடு"
- வீட்டில்ஆர்த்தி சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெற்றது.
- நேற்று மாலை வீட்டில் இருந்த ஆர்த்தி பக்கத்து வீட்டில் உள்ள வாலிபருடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி செட்டி பட்டறை பகுதியைச் சேர்ந்த கதிர் காமன் மகள் ஆர்த்தி (வயது 23) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு வீட்டில் இவரது சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெற்றது.
நேற்று மாலை வீட்டில் இருந்த ஆர்த்தி பக்கத்து வீட்டில் உள்ள வாலிபருடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆர்த்தியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆர்த்தியின் வீட்டின் அருகில் இருந்த வாலிபரான வினோத்குமார் (25) கூலித்தொழிலாளி. இவருக்கும் ஆர்த்திக்கும் இடையில் முன்னதாகவே காதல் இருந்து வந்ததும். அதனால் அவர்கள் காதலித்து வந்ததும் தெரியும் வந்தது.
தற்போது வீட்டில் ஆர்த்திக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதை கண்டு ஆர்த்தி வினோத் குமார் உடன் வீட்டை விட்டு சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதீப் (26) என்று இளைஞருக்கு திருமணம் ஊர்வலம் நடைபெற்றது.
- குதிரையில் வந்த மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார்.
மத்திய பிரதேசத்தில் திருமணத்தை ஒட்டி குதிரையில் ஊர்வலமாக வந்த மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சியோபூர் மாவட்டத்தில் பிரதீப் (26) என்று இளைஞருக்கு திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குதிரையில் வந்த மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- இவரது மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- புதுமணத் தமபதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது.
தெலுங்கானாவில் மகளின் திருமணம் முடிந்ததும் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தின் பிகானர் பகுதியில் உள்ள ராமேஷ்வர்பள்ளி கிராமத்தில் வசித்தவர் பாலசந்திரம்(56). இவரது மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்று திருமணச் சடங்குகளின் ஒரு பகுதியாக, கன்னியாதானம் சடங்கின்போது அவர் தனது மகளின் கால்களைக் கழுவினார். அதன்பின் சில நிமிடங்களில் அவர் திடீரென மாரடைப்பால் சரிந்தார்.
திருமண மண்டபத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் உடனடியாக பாலசந்திரத்தை கம்மாரெட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சென்றடைந்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த துயர சம்பவம் உறவினர்களையும் திருமணத்தில் கலந்துகொண்டவர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் புதுமணத் தமபதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது.
- மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.
- குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் தோழிக்கு மாலை சூடுய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பரேலியில் நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. மணமேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் (26) தள்ளாடியபடி மேடைக்கு வந்தார். குடிபோதையில் இருந்த ரவீந்தனர்குமார் மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.
இதனால் திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ரவீந்தரகுமாரின் செயலால் கோபமடைந்த ராதா, அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று கத்திக் கூச்சலிட்டார். சமதானப்படுத்த முயன்றும் குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
இதன் பின்னர் தகராறு அதிகரித்து இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை தொடங்கியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவரை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தனர். அதன் பிறகு போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
மணமகன் மீது ராதா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் மணமகளின் தந்தை திருமணத்திற்கு முன்பு ரூ.2.5 லட்சமும், திருமண நாளில் ரூ.2 லட்சமும் வரதட்சணை கொடுத்துள்ளார். எனவே மணமகன் ரவீந்திரகுமார் உட்படகுடிபோதையில் மணப் பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது
குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சணை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.