search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வுக் கட்டுரைகள்"

    • கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

    இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.7.2024-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 10.7.2024-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 57 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர்
    • அதிகாரி சான்றிதழ், கேடயம் வழங்கினார்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் சீனியர் பிரிவிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு வழிகளிலும் 57 ஆய்வுக் கட்டுரைக ளைச் சமர்ப்பித்தனர்.

    இதில் 7 ஆய்வு கட்டுரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், வழிகாட்டி ஆசி ரியர்களுக்கும் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் பாராட்டு சான்றிதழ்களையும், கேடயத்தையும் வழங்கிவாழ்த் திப் பேசினார்.

    ×