search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாராவி"

    • மும்பையில் குடிசைகள் அதிகமாக அமைந்துள்ள பகுதியாக தாராவி உள்ளது.
    • சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அதானி குழுமத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தாராவி ஏராளமான குடிசைகள் அமைந்த பகுதியாகும். இந்த குடிசை பகுதிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது. இதற்கு தாராவி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் மகாராஷ்டிரா அரசு தாராவி குடிசை மறுமேம்பாடு திட்டத்திற்கான டெண்டரை அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் தற்போது அதானி குழுமத்திற்கு சென்றுள்ளது.

    இந்த நிலையில் சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தாராவி குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகங்கள் முற்றிலும் அப்புறப்படுத்தப்படாது. அங்குள்ள மக்களுக்கு 500 சதுர அடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தாராவி குடிசை மறுமேம்பாடு திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்வோம். அதை ஏன் இப்போது ரத்து செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். மும்பையை அதானி நகரமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்.

    இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத சலுகைகள் அதானி குழுமத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சலுகைகளை வழங்க மாட்டோம். தாராவியில் வசிப்பவர்களுக்கு எது நல்லது என்பதை நாங்கள் பார்ப்போம், தேவைப்பட்டால் புதிதாக டெண்டர் விடுவோம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

    தாராவி பகுதியை மறுமேம்பாடு செய்வதற்கு ரூ. 5069 கோடி மதிப்பிலான திட்டத்தை அதானி குழும நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மும்பையின் முக்கியமான பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்த இருக்கிறது.

    இந்த திட்டம் முதலில் வேறோடு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
    • தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம்

    இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களிடம் அதானி உரையாடியுள்ளார்.

     

    அப்போது பேசிய அவர், இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், நிச்சயத்தன்மையற்ற சூழலிலும்கூட இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

    ஸ்திரத்தன்மை , கூட்டுறவு மற்றும் வளர்ச்சியில் இந்தியா தொடந்து முன்னேறி வருகிறது. இது இந்தியாவிற்கான தருணம். நாட்டின் உள்கட்டமைப்பில் மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. ரூ.11 லட்சம் கோடி வரை மத்திய அரசு இந்த நிதியாண்டில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தையதை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.

    அரசாங்கத்திற்காக நாம் கடந்த 2023 ஆம் ஆண்டு பல வெற்றிகரமான பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறோம். அதானி பசுமை சக்தி நிறுவனத்தின்மூலம்  குஜராத்தில் உலகிலேயே பெரிய சுத்தீகரிப்பு சக்தி கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பலநூறு கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் இந்த கட்டமைப்பு மூலம் 30,000 மெகாவாட் மின்சார தயாரியப்பு செய்யும் திட்டம் வருங்காலங்களில் இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் மும்பையில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இதற்கிடையில் தாராவியை ஆக்கிரமிக்கவே அதானி குழுமத்திடம் இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்களும் எதிர்க்கதிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் மலிஷா கார்வா.
    • இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலேயர்கள் உள்ளனர்.

    மும்பையின் தாராவியை சேர்ந்ச 14 வயது சிறுமி "ஃபார்ஸ்ட் எசென்ஷியல்ஸ்" (Forest Essentials) எனும் அழகுசாதன பிராண்டின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி "தி யுவி கலெக்ஷன்" எனும் பெயரில் விளம்பரங்களில் நடிக்க உள்ளார்.

    ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் தான் மலிஷா கார்வா. பின் மலிஷா கார்வா-வை ராபர்ட் ஹாஃப்மேன் தனது வளர்ப்பு மகளாகவும் அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலோயர்கள் (Followers) உள்ளனர். தனது இன்ஸ்டா பதிவுகளில் #princessfromtheslum (குடிசை பகுதி இளவரசி) எனும் ஹாஷ்டேக்கை பயன்படுத்துவதை இவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வளர்ந்து வந்த மலிஷா கார்வா ஏராளமான விளம்பரங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் "லிவ் யுவர் ஃபேரிடேல்" எனும் குறும்படத்திலும் நடித்துள்ளார்.

    இந்த நிலையில், மலிஷா கார்வா அழகு சாதன பிராண்டின் விளம்பர முகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவரை விளம்பர தூதராக அறிவிக்கும் பதிவில் ஃபாரஸ்ட் எசன்ஷியல்ஸ், "அவளின் முகம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அவளின் கனவுகள் அவள் கண் முன்னே நிறைவேறியது. மலிஷாவின் வாழ்க்கை, கனவுகள் உண்மையாகும் என்பதற்கு அழகான நினைவூட்டி என்றே கூறலாம் #BecauseYourDreamsMatter," என்று குறிப்பிட்டுள்ளது.

    இத்துடன் மலிஷா கார்வாவின் வீடியோவும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மலிஷா கார்வாவுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

    • சீரமைப்பு திட்டப்பணி அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
    • தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

    மும்பை :

    ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மும்பை தாராவி விளங்குகிறது. தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குடிசைப்பகுதியில் உள்ள வீடுகள் புறாக்கூண்டுகளை போல சிறிது சிறிதாக இருக்கும். குடிசை வீடுகள் என்றாலும் மாடிகள் இருக்கும். ஒரு வீட்டில் பல அறைகளை உருவாக்கி மக்கள் வசித்து வருகின்றனர்.

    மும்பைக்கு பிழைப்பு தேடி வருபவர்களுக்கு தாராவி தான் சொர்க்கப்பூமி என்று சொல்லலாம்.

    இந்தநிலையில் அடுக்குமாடிகளை உருவாக்கும் தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. கடந்த பா.ஜனதா ஆட்சியில் தாராவி சீரமைப்பு திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் துபாய் நிறுவனத்துக்கு வழங்கிய சீரமைப்பு திட்டப்பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தாராவி சீரமைப்பு திட்டப்பணிகள் முடங்கியது.

    பின்னர் ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரே அரசு, தாராவி சீரமைப்பு திட்டத்துக்காக ரெயில்வே நிர்வாகம் நிலத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டியது. கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. அடுத்த சில நாட்களில் தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு ரெயில்வே நிலத்தை ஒப்படைத்தது.

    இந்தநிலையில் ரூ.20 ஆயிரம் கோடியில் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் ஒருபகுதியாக சீரமைப்பு திட்டத்திற்கான டெண்டர் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதில் ரூ.5 ஆயிரத்து 69 கோடிக்கு அதானி குழுமம் டெண்டரை எடுத்துள்ளது. இதன் மூலம் தாராவி சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாராவி அடுக்குமாடிகளாக எழப்போகிறது.

    இருப்பினும் சீரமைப்பு திட்டத்துக்கு தாராவி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இங்குள்ள ஏராளமான சிறுதொழில்கள் அழிய வாய்ப்பு இருப்பதாகவும், தற்போது ஒரு வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் கூட வசிப்பதால், அவர்கள் அனைவருக்கும் சீரமைப்பு திட்டத்தில் வீடு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை வசிப்பவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்காவிட்டால் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் நிலைமை ஏற்படும் என்று மக்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

    மேலும் தாராவி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடம் என்பதால், இது சர்வதேச அடையாளத்தை இழக்கும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×