search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 நாட்களாக"

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குழித்துறை பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    சுமார் 2 மணி நேரத்திற் கும் மேலாக கொட்டி தீர்த்த மழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, புத்தன் அணை, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, குலசேகரம், களியல், சுருளோடு பகுதியிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் வாழை, தென்னை, அன்னாசி, ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்கலை, சரல்விளை, வண்ணான்விளை பகுதியை சேர்ந்த சுஜுன் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்கள்.

    தொடர் மழையின் கார ணமாக திற்பரப்பு அருவி யில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.47 அடி யாக உள்ளது. அணைக்கு 206 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.55 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.8, பூதப்பாண்டி 3.2, களியல் 4.6, கன்னிமார் 6.8, குழித் துறை 62.2, புத்தன்அணை 15, சுருளோடு 7, தக்கலை 20, பாலமோர் 4.2, திற்பரப்பு 5.8, ஆரல்வாய்மொழி 16, கோழிபோர்விளை 38.5, அடையாமடை 24, முள் ளங்கினாவிளை 22.4.

    • ஏராளமான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினமும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள்.

    மேலும் மைசூர், சாம்ராஜ் நகர் உள்பட கர்நாடகா மாநில பக்தர்களும் பலர் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    இதேபோல் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள் கார், வேன், பஸ்களில் வந்து செல்கிறார்கள்.

    இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் விழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    இதைதொடர்ந்து பண்ணாரியம்மன் சப்பரம் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சென்றது.

    இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    இதையடுத்து கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து தினமும் இரவு கம்ப நடனம் ஆடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குண்டத்துக்கு தேவையான எரி கரும்புகளை (விறகுகள்) காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடக்கிறது. முன்னதாக நாளை (திங்கட்கிழமை) இரவு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எரிகரும்புகள் பற்ற வைத்து குண்டம் வளர்க்கப்படுகிறது.

    விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள்.

    மேலும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கோவிலுக்கு வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

    இதே போல் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்காக நிழற்குடைகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் குண்டம் இறங்குவதற்காக சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள், வனப்பகுதி பொதுமக்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக வேன், லாரிகளில் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அவர்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள தடுப்புகளில் தங்கி இடம் பிடித்து காத்திருக்கிறார்கள்.

    மேலும் தடுப்புகளில் வேட்டி, துண்டுகளை போட்டு தங்கள் கும்பத்துடன் வரிசையில் குண்டம் இறங்குவதற்காக காத்து கொண்டு இருக்கிறார்கள்.

    தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் வளாகத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டு வருகிறது.

    விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர்.
    • கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம், நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேருந்து நிலையம், மற்றும் பரமத்தியில் நாமக்கல் மோட்டார் வாகன அலுவலர் முருகன் மற்றும் பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களாக திடீர் ஆய்வு செய்தனர். கரூரில் இருந்து நாமக்கல் மற்றும் சேலம் நோக்கி செல்லும் பேருந்துகளும், சேலம்,நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் பரமத்தி நகருக்குள் வந்து செல்வதில்லை என புகார் எழுந்தது.

    மேலும் இரவு நேரத்தில் பரமத்தி நகருக்குள் பேருந்துகள் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது பரமத்தி தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு செல்வதால் பொதுமக்களும், பெண்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வேலூர் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்த நாமக்கல் போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பரமத்தி நகருக்குள் சென்று நாமக்கல் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

    மேலும் அந்தந்த பேருந்துகளுக்கென வாங்கிய உரிமம் அடிப்படையில் அந்தந்த வழித்தடங்களில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினர். பரமத்தி நகருக்குள் செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    ×