என் மலர்
நீங்கள் தேடியது "மீட்புக்குழு"
- இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
- மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்று அதிகாலை நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு குறைந்த வேகத்தில் நகர்ந்துவருவதால், கடல் சீற்றம், தரைகாற்று அதிகம் இருக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்ச ல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், திரு.பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவகிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் நேற்று 3ம் நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்கள் விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடிதுறைமுகத்திலும், பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றங்கரையோரம் மற்றும் மீனவ கிரா மங்களிலும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் தனியார் துறைமுகத்தில், 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் உத்தரவுப்படி, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு க்குழுவினர், பிரதீப்குமார் தலைமையில், முன் எச்சரிக்கை நடவடி க்கையாக, காரைக்கால் கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடற்கரையில் உள்ள மீனவர்களிடம் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்து, மீனவ கிராமங்களில் உள்ள படகுளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தினர். மேலும், பொதுமக்கள் மழை மற்றும் புயல் நேரங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
- 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
- குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் பருவமழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கி இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம் பின்வருமாறு...
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 1-25) -நவிந்திரன் (ஆணையர்,காஞ்சிபுரம் மாநகராட்சி) 7397372823,
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 26-51)-ஆசிக்அலி(உதவி ஆட்சியர்) 9445000413,
சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம்-வெற்றிவேல்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்) 9080682288,
பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி குறுவட்டம்-ஜோதிசங்கர்(மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்) 9443098567,
வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-தங்கவேலு (உதவி திட்ட அலுவலர்) 7402606009,
தென்னேரி குறுவட்டம்-பாலமுருகன்(மாவட்ட ஆய்வு குழு அலுவலர்) 9444227190, மாகரல் குறுவட்டம்-தனலட்சுமி(மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அலுவலர்) 7338801259,
உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-கந்தன்(திட்ட அலுவலர்) 9840989921,
திருப்புலிவனம், களியாம்பூண்டி குறு வட்டம்-சத்தியதேவி(மண்டல மேலாளர்) 9150057181,
சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் குறுவட்டம்-பாக்கியலட்சுமி (தனித்துணை ஆட்சியர்) 8220438216,
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-ஜெகதிசன்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்)-7402606004,
மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் குறுவட்டம்-லதா(உதவி இயக்குநர்)-8925809212,
வல்லம் மற்றும் தண்டலம் குறுவட்டம்-பிச்சாண்டி(திட்ட அலுவலர், மகளிர் திட்டம்) 944094280
படப்பை குறுவட்டம்-தண்டபாணி(உதவி இயக்குநர்,பஞ்சாயத்து)-7402606005,
படப்பை குறுவட்டம்-வேதநாயகம் (மாவட்ட ஊராட்சி செயலர்) 7402606007,
செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம்-சுரேஷ்(நேர்முக உதவியாளர் (கணக்கு))9442745251,
கொளப்பாக்கம் குறுவட்டம் (மௌலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) -.பாலாஜி (மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்) 9445000168,
திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து- சக்திகாவியா(மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலர்) 6369131607,

மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், கொழுமுனிவாக்கம், தரப்பா க்கம், இரண்டாம்கட்டளை, தண்டலம், கோவூர் சிக்கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்)-உமாசங்கர்(உதவிதிட்ட அலுவலர்(வீடுகள்)7402606006,
மாங்காடு நகராட்சி பகுதிகள் -சரவணகண்ணன் (வருவாய் கோட்டாட்சியர்) 9444964899,
குன்றத்தூர்நகராட்சி- சீனிவாசன் (மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலஅலுவலர்)9445477826 மற்றும் பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 044-27237107, வாட்ஸ் அப்எண் 8056221077 தொடர்பு கொள்ளலாம்.
இதற்கிடையே பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான காந்தி கலந்துகொண்டு அனைத்து துறை சார்ந்த ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அமைச்சர் காந்தி கூறும்போது,வரதராஜபுரம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.
மாவட்டத்தில் 276 ஜே.சி.பி.எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படும் என்றார்.
அப்போது செல்வம் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்,எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.