search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள மீட்பு உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள மீட்பு உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

    • 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த குழுவினர் பருவமழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கி இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம் பின்வருமாறு...

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 1-25) -நவிந்திரன் (ஆணையர்,காஞ்சிபுரம் மாநகராட்சி) 7397372823,

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 26-51)-ஆசிக்அலி(உதவி ஆட்சியர்) 9445000413,

    சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம்-வெற்றிவேல்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்) 9080682288,

    பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி குறுவட்டம்-ஜோதிசங்கர்(மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்) 9443098567,

    வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-தங்கவேலு (உதவி திட்ட அலுவலர்) 7402606009,

    தென்னேரி குறுவட்டம்-பாலமுருகன்(மாவட்ட ஆய்வு குழு அலுவலர்) 9444227190, மாகரல் குறுவட்டம்-தனலட்சுமி(மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அலுவலர்) 7338801259,

    உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-கந்தன்(திட்ட அலுவலர்) 9840989921,

    திருப்புலிவனம், களியாம்பூண்டி குறு வட்டம்-சத்தியதேவி(மண்டல மேலாளர்) 9150057181,

    சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் குறுவட்டம்-பாக்கியலட்சுமி (தனித்துணை ஆட்சியர்) 8220438216,

    ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-ஜெகதிசன்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்)-7402606004,

    மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் குறுவட்டம்-லதா(உதவி இயக்குநர்)-8925809212,

    வல்லம் மற்றும் தண்டலம் குறுவட்டம்-பிச்சாண்டி(திட்ட அலுவலர், மகளிர் திட்டம்) 944094280

    படப்பை குறுவட்டம்-தண்டபாணி(உதவி இயக்குநர்,பஞ்சாயத்து)-7402606005,

    படப்பை குறுவட்டம்-வேதநாயகம் (மாவட்ட ஊராட்சி செயலர்) 7402606007,

    செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம்-சுரேஷ்(நேர்முக உதவியாளர் (கணக்கு))9442745251,

    கொளப்பாக்கம் குறுவட்டம் (மௌலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) -.பாலாஜி (மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்) 9445000168,

    திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து- சக்திகாவியா(மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலர்) 6369131607,


    மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், கொழுமுனிவாக்கம், தரப்பா க்கம், இரண்டாம்கட்டளை, தண்டலம், கோவூர் சிக்கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்)-உமாசங்கர்(உதவிதிட்ட அலுவலர்(வீடுகள்)7402606006,

    மாங்காடு நகராட்சி பகுதிகள் -சரவணகண்ணன் (வருவாய் கோட்டாட்சியர்) 9444964899,

    குன்றத்தூர்நகராட்சி- சீனிவாசன் (மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலஅலுவலர்)9445477826 மற்றும் பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 044-27237107, வாட்ஸ் அப்எண் 8056221077 தொடர்பு கொள்ளலாம்.

    இதற்கிடையே பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான காந்தி கலந்துகொண்டு அனைத்து துறை சார்ந்த ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அமைச்சர் காந்தி கூறும்போது,வரதராஜபுரம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

    மாவட்டத்தில் 276 ஜே.சி.பி.எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படும் என்றார்.

    அப்போது செல்வம் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்,எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×