search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறனாய்வு தேர்வு"

    • திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறும் 500 மாணவிகள், 500 மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2697 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

    திண்டுக்கல்:

    தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு வசதியாக உதவி தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதற்காக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் 500 மாணவிகள், 500 மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

    பிளஸ்-1 முதல் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2697 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

    திண்டுக்கல்லில் 6 தேர்வு மையங்களும், பழனியில் 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 மணிமுதல் மதியம் 12 மணிவரை முதல் தாளுக்கான தேர்வும், மதியம் 2 மணிமுதல் 4 மணிவரை 2-ம் தாளுக்கான தேர்வும் நடத்தப்பட்டது. இந்த தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஆசிரியர்கள் கண்காணிப்பு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    • 9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
    • கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

    திருப்பூர்:

    அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த நடப்பு (2023 - 24) கல்வியாண்டு முதல் தமிழக முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும்.

    ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம் பெறும், முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும்.முதல் தாள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கும். நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடை பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவிகள் வீதம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் வீதம், கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

    நடப்பாண்டுக்கான தேர்வு செப்டம்பர் 23-ந் தேதி தேர்வு நடக்கும். பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 18-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகையாக 50 ரூபாய் சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • ஸ்ரீகுமரன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    • 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வை மிக ஆர்வத்துடன் எழுதினர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீ குமரன் கல்விக் குழுமத்தின் தலைவர் மணி தலைமை தாங்கினார். ஸ்ரீகுமரன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஸ்ரீகுமரன் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார். இத்தேர்வில் ஊட்டி, கோத்தகிரி மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரப் பள்ளிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வை மிக ஆர்வத்துடன் எழுதினர்.

    இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் 2 மாணவர்களுக்கும், 2-ம் பரிசாக தலா ரூ.7 ஆயிரத்து 500 மூன்று மாணவர்களுக்கும், 3-ம்பரிசாக தலா ரூ.5 ஆயிரம் 5 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை ஸ்ரீ குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ குமரன் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளியும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முடிவில் தமிழாசிரியை தமிழரசி நன்றி கூறினார்.

    • திறனாய்வு தேர்வு வட்டாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட அளவில் சூளகிரி வட்டாரம் முதன்மை இடத்தை வகிக்கிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சூளகிரி வட்டாரக் கிளையின் சார்பில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை துளிர் மாணவர் திறனாய்வு தேர்வு வட்டாரம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவில் சூளகிரி வட்டாரம் முதன்மை இடத்தை வகிக்கிறது. இத்தகைய தேர்வினை சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்தே கவுடா கலந்து கொண்டார். மேலும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமன், நிர்வாகிகள் பழனி மற்றும் அப்சர் ,ஜெபஸ்டின் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு இனிதே ஆரம்பமானது.

    இந்த நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சூளகிரி வட்டாரத்தின் வட்டார தலைவர் ஜெபதிலகர் மற்றும் வட்டாரச் செயலர் திருப்பதி மற்றும் பொருளாளர் முனிச்சந்திரன், உறுப்பி னர்கள், பொறுப்பாளர்கள், பள்ளி அசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.   

    • 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை உதவி வழங்கப்பட்டு வருகிறது.
    • சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் 244 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    சாத்தான்குளம்:

    தமிழகத்தில் கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் வரை உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வித்துறை ஏற்பாட்டின் படி தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

    சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இதற்காக 247 மாணவர்கள் விண்ணப்பத்திருந்தனர். இதில் சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் 244 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை உத்தரவின் பேரில் பள்ளி தாளாளர் கிருபாகரன், தலைமைஆசிரியர் ஜெபசிங்இம்மானுவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ஆசிரியரின் உதவியுடன் நன்றாக பயிற்சி செய்ததால் தேர்வில் வெற்றியடைய முடிந்தது
    • இரு ஆண்டுக்கு உதவித்தொகை கிடைப்பதால் உதவியாக இருக்கும் என்றார்.

    திருப்பூர் : 

    பிளஸ் 2 வகுப்புகளில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.அதில் 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவருக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்மொழி திறனாய்வுத் தேர்வின் முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இவர்கள் அனைவருக்கும் தலா 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கருவலூர் அரசு பள்ளி மாணவி தமிழ்ச்செல்வி 89 மதிப்பெண் பெற்றும், இதே பள்ளியை சேர்ந்த செல்வி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இதுதவிர மாவட்ட அரசு பள்ளி அளவில் தமிழ்ச்செல்வி முதலிடம் பிடித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் உடுமலை லூர்து மாதா மெட்ரிக் பள்ளி மாணவி நேத்ரா 96 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடத்தில் உள்ளார்.

    மாநில அளவில் தேர்வான, தமிழ்ச்செல்வியை, கருவலூர் பள்ளி தலைமை ஆசிரியர் சத்யபாமா, உதவி தலைமை ஆசிரியர் பிரபாவதி, தமிழாசிரியர் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாணவி தமிழ்ச்செல்வி கூறுகையில், தமிழ் பாடம் மிகவும் பிடித்த பாடம். ஆசிரியரின் உதவியுடன் நன்றாக பயிற்சி செய்ததால் தேர்வில் வெற்றியடைய முடிந்தது. வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தொடர்ந்து இரு ஆண்டுக்கு உதவித்தொகை கிடைப்பதால் உதவியாக இருக்கும் என்றார்.

    ×