என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சக்கர நாற்காலி"

    • பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை பாண்டியன் வரவேற்றார்.
    • அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் வடக்கு மாவட்டசெயலாளர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார்.அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் உடுமலை சண்முகவேலு முன்னிலை வகித்தார்.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கட்சி கொடி ஏற்றி வைத்தும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

    • விசாலாட்சியம்மன் சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வரும் ஜனவரி 6ந் தேதி ஆருத்ரா தரிசனமும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
    • கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் உள்ள கோவில்களில் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய வசதியாக சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று திருக்கோயில் தொண்டா் அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அறக்கட்டளையின் அமைப்பாளா் கொங்கு ராமகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவிலில் வரும் 2023 ஜனவரி 2ந் தேதி பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும், விசாலாட்சியம்மன் சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வரும் ஜனவரி 6ந் தேதி ஆருத்ரா தரிசனமும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்த இரு நிகழ்வுகளுக்கும் வழக்கம்போல பக்தா்களின் வருகை கடந்த ஆண்டைவிட அதிகமாக வரக்கூடும் என்பதால், மாற்றுத்திறனாளா் பக்தா்கள் சுவாமியை தரிசிப்பதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, நிகழாண்டு முதல் கோவில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மாற்றுத் திறனாளி பக்தா்கள் செல்வதற்கும், தரிசிப்பதற்கும் என சிறப்பு விரைவு தரிசன பாதை மற்றும் அவா்களுக்குத் தேவையான சக்கர நாற்காலி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேலும் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள், 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மின்கலத்தினால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் (Battery Operated Wheel Chair) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள் மற்றும் 2 கால்களும் செயலிழந்த

    60 வயதிற்குட்டபட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதிற்குட்டபட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட குறைபாடுகள் உடைய மாற்றுத் திறனா ளிகள் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்,

    மேலும் கல்வி பயிலும், பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட சான்றுகளுடன் வருகிற

    16-ந் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பித்தும் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாட்டியை விமானக் கதவு வரை அழைத்துச்செல்ல ஏற்கனவே சக்கர நாற்காலி கோரியிருந்தனர்.
    • அங்கு அவரது மூக்கு மற்றும் உதடுகளில் இரண்டு தையல்கள் போடப்பட்டன.

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 82 வயது மூதாட்டி ஒருவருக்கு ஏர் இந்தியா நிறுவனம் சக்கர நாற்காளி கொடுக்க தாமதித்ததால் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

    மறைந்த லெப்டினென்ட் ஜெனெரல் ஒருவரின் மனைவியான ராஜ் பாஸ்ரிச்சா (82 வயது), கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) தனது பேத்தி பருல் கன்வருடன் டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தார்.

    பேத்தி, பாட்டியை விமானக் கதவு வரை அழைத்துச்செல்ல ஏற்கனவே சக்கர நாற்காலி கோரியிருந்தனர். அது டிக்கெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் அவர்கள் டெர்மினல்-3 ஐ அடைந்தபோது, அங்கு சக்கர நாற்காலி இல்லை. ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் விமான நிலைய உதவி மையத்திடம் பேத்தி முறையிட்டார். இருப்பினும் ஒரு மணி நேரம் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், யாரும் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.

    சக்கர நாற்காலி கிடைக்காததால் மூதாட்டி தனது பேத்தியின் உதவியுடன் மெதுவாக நடக்கத் தொடங்கினார். ஆனால் நீண்ட தூரம் நடந்ததால் மூதாட்டியின் கால்கள் தளர்ந்து, இறுதியில் ஏர் இந்தியா பிரீமியம் எகானமி கவுண்டருக்கு முன்னால் அவர் சரிந்து விழுந்தார்.

    விழுந்த பிறகு, அவரது தலை, மூக்கு மற்றும் உதடுகளிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. ஆனால் விமான ஊழியர்களில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. பின் தாமதாக சக்கர நாற்காலியை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.

    ஆனால் எந்த மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படவில்லை. அவருக்கு பலத்த காயங்கள் இருந்தபோதிலும் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டார். விமானப் பயணத்தின் போது, விமானக் ஊழியர்கள் ஒரு ஐஸ் கட்டியைக் கொடுத்து முதலுதவி அளித்தனர்.

    விமானம் தரையிறங்கியதும் பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மருத்துவர் அழைக்கப்பட்டார். அங்கு அவரது மூக்கு மற்றும் உதடுகளில் இரண்டு தையல்கள் போடப்பட்டன. ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது, இப்போது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் பேத்தி பருல் கன்வர் சமூக ஊடகங்களில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மூதாட்டியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

    இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள பதிவில், "இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நாங்கள் இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து வருகிறோம். விரைவில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.  

    ×