என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் உற்பத்தி"

    • இந்தியாவில் 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
    • இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அவர் பேசியதாவது:-

    மோடி அரசு கடந்த 2014-ம் ஆண்டு ராஷ்டிரீய கோகுல் மிஷன் என்ற திட்டத்தை தொடங்கியது. அப்போது இருந்து நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில், பால் உற்பத்தி மேலும் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

    தற்போது, உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியாதான். 23 கோடியே 90 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில், பால் உற்பத்தியை 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இந்தியாவில், 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம் ஆகும்.

    ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களை பராமரித்து, மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியை உயர்த்துவது ஆகும். இதன்மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் சேவை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆவின் நிறுவனம் 50 சதவிகித மானியத்தில் உலர்தீவனம் வழங்குகிறது.
    • அந்த தீவனத்தை கால்நடைகள் உட்கொள்வதில்லை. அப்படியே தின்றாலும் உற்பத்தியாகும் பாலின் தரமும் குறைவாக உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கால் நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஆவின் நிறுவனத்தில் பால் சப்ளை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை பெற்று வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கால்நடைகள் வளர்ப்போருக்கு ஆவின் நிறுவனம் 50 சதவிகித மானியத்தில் உலர்தீவனம் வழங்குகிறது.

    இந்நிலையில் ஆவின் வழங்கும் தீவனம் தரமாக இல்லை என்றும், போதுமான அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    ஆவின் வழங்கும் தீவனம் தரம் குறைவாக இருப்பதால் அவற்றை தண்ணீரில் கரைக்கும்போது முழுமையாக கரைவதில்லை. இதனால் அந்த தீவனத்தை கால்நடைகள் உட்கொள்வதில்லை. அப்படியே தின்றாலும் உற்பத்தியாகும் பாலின் தரமும் குறைவாக உள்ளது.

    அத்துடன் ஆவின் வழங்கும் தீவனம் போதுமானதாக இல்லாததால் தனியாரிடம் சில விவசாயிகள் தீவனத்தை வாங்குகின்றனர். அந்த தீவனம் மூட்டை ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை விற்கப்படுகிறது.

    மேலும் தனியார் விற்கும் தீவனங்களை சாப்பிடும் கால்நடைகளுக்கு உடல்நல பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே ஆவின் வழங்கும் தீவனத்தின் அளவை உயர்த்தி வழங்குவதுடன் தரத்தையும் உறுதி செய்யவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    இது தொடர்பாக ஆவின் தரப்பில் கூறுகையில் தீவன தேவை மாதத்திற்கு 320 டன் என்ற நிலையில் தற்போது 200 டன் அளவுக்கே கொள்முதல் செய்யப்படுகிறது.இந்த அளவு உயர்த்தி வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    தற்போது ஈரோடு மாவட்டத்திலிருந்து தீவனம் கொள்முதல் செய்யப்படுகிறது.அதன் தரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • உரிமம் பெறாத நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
    • தரமான பால் உற்பத்தியை அதிகப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பால்வளத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது:-

    மாவட்ட அளவிலான ஆலோசனை குழு மூலமாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் இடங்களில், உரிமம் பெறாத நிறுவ னங்கள் பால் கொள்முதல் செய்வதை கட்டுப்படுத்தி டவும் மற்றும் உரிமை பெறாத தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை யாளர்களை தடை செய்திட வும், தரமான பால் உற்பத்தி யினை அதிகப்படுத்திடவும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    இக்குழுக்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட சில முக்கிய துறைகள் சார்ந்த அலுவலர்களை குழு உறுப்பினர்களாக உள்ளடக்கி மாவட்ட அளவி லான ஆலோசனை குழுக்கள் உருவாக்கி பணி களை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த குழுவின் மூலம் இப்பணி களை மேற்கொள்ளப்படு வதை மாத ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அதிக அளவிலான கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து பாலில் கலப்படம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தனி யார் நிறுவனங்கள் தங்களது பால்கோவா தயாரிப்பில் அரசு தயாரிப்பு என குறிப்பிடுவது தனியா ருக்கு உரிமை இல்லை. ஆவின் நிறுவனம் மட்டுமே அரசு தயாரிப்பு என குறிப்பிட உரிமை உண்டு.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பின்னர் சூலக்கரையில் அமைந்துள்ள பால் குளி ரூட்டும் நிலையம் மற்றும் ரூ.36 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை தீவன உற்பத்தி நிலையத்தையும் அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வம், ஆவின் பொது மேலாளர் ஷேக் முகம்மது ரபி, துணை பதிவாளர்(பால்வளம்) நவராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பால் உற்பத்தியை பெருக்குவது கிராமங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பி னர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    பால் உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லிட்டருக்கு ரூ.33 என்று உச்சகட்ட விலையை நிர்ணயம் செய்யப்பட்டு, கூடுதல் லாபம் கிடைப்ப தற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்தி யாளர்கள், பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் சமமான அரசாக தமிழக அரசு இருந்து வருகிறது.

    பால் உற்பத்தியை பெருக்குவது கிராமப் புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யத்தின் சார்பில் ஆண்டு வருமான லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.0.50 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் கடந்த 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்க ளை எல்லையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் இரு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 547 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 11,832 உறுப்பினர்களுக்கு ரூ.1,35,35, 653.80 மதிப் பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று இந்த ஆண்டிலும் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 411 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த 8,936 உறுப்பினர்களுக்கு ரூ.1,06,07,911 மதிப்பீட்டில் ஊக்கத்தொகை வழங்கப்பட வுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மானாமதுரை துணை பதிவாளர் (பால்வளம்) செல்வம், பொது மேலாளர் ஆவின் (காரைக்குடி) ராஜசேகர் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் செந்தில்குமார், ஆரோக்கிய சாந்தாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
    • பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்து மாதத்துக்கு பெறப்படும் சந்தா தொகை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் இதர நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவிகள் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இந்த விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அரசு முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

    பால் உற்பத்தியாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடுத் தொகை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், விபத்தில் ஊனமுற்ற பால் உற்பத்தியாளர் ஓர் உறுப்பை இழந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், 2 உறுப்பை இழந்தால் ரூ.1.75 லட்சத்தில் இருந்து ரூ.2.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதை செயல்படுத்த பால் ஊற்றும் உறுப்பினர்களிடம் இருந்து மாதத்துக்கு பெறப்படும் சந்தா தொகை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் இருந்து மாதத்திற்கு பெறப்படும் சந்தா தொகை 50 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×