என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உதிரிபாகங்கள்"
- உதிரிபாகங்கள் அனுப்பாமல் அலைக்கழித்த நிறுவன உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விடுத்துள்ளது.
- ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் தினகரன் (வயது34). இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்திற்கு தேவையான சில உதிரி பாகங்களை 2021-ம் ஆண்டு செப்.22-ந்தேதி பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் ஆர்டர் செய்தார். அதற்கான தொகை ரூ.35 ஆயிரத்தையும் செலுத்தினார். ஆனால் ஆர்டர் பெற்ற நிறுவனம் அனுப்புவதாக சொன்ன தேதியில் பொருட்கள் வந்து சேரவில்லை.
இதுகுறித்து கேட்ட போது முகவரி மாறி சென்று விட்டதாக கூறினர். ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர். அதன் பின் நிறுவனமும், டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் மாறி மாறி அலைக்கழித்தனர். உரிய நேரத்தில் உதிரி பாகங்கள் கிடைக்காததால் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட தினகரன் ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2022-ம் ஆண்டு ஜூலை.15-ந்தேதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பொருளுக்குரிய தொகை ரூ.35 ஆயிரத்துடன், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் குட்வின் சாலமன்ராஜ், நமச்சிவாயம் உத்தரவிட்டனர்.
- கடை உரிமையாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கல்லூரி மாணவர்கள், வாலிபர், இளம்பெண்கள் என ஒரு தனி கூட்டமே உள்ளது.
கோவை,
செல்போனில் பல ரகங்கள் வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்கள், இயர்போன், ஸ்மார்ட் வாட்ச், போன் கவர் போன்றவற்றுக்கு எப்போதும் தனி மவுசு இருந்து வருகிறது.
இதனை வாங்குதற்கு கல்லூரி மாணவர்கள், வாலிபர், இளம்பெண்கள் என ஒரு தனி கூட்டமே உள்ளது. இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சிலர் போலியான ஆப்பிள் முத்திரையை பயன்படுத்தி செல்போன் உதிரிபாகங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த தகவல் சென்னை சூளைமேட்டில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி குமரவேல் என்பவருக்கு தெரியவந்தது. அவர் இது குறித்து கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி முத்திரையை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவன செல்போன் உதிரிபாகங்களை சில கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கடை உரிமையாளர்கள் மதுரை காமராஜ புரத்தை சேர்ந்த முகமத் அப்சர்கனி (வயது 24), ராஜஸ்தானை சேர்ந்த வர்தம் சவுத்ரி (23), மகேந்திரசிங் (28), கேரளா பாலக்காட்டை சேர்ந்த நவுசாத் (39), ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது கடைகளில் இருந்து போலி முத்திரையுடன் கூடிய 1000 செல்போன் கவர்கள், 25 இயர்போன், 25 யூ.எஸ்.பி கேபில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்