search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபலென்கா"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் சபலென்கா வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குய்ன்வென் ஷெங் உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா இங்கிலாந்து வீரர் எம்மா நவாரோவை எதிர்கொள்கிறார்.

    • சபலென்கா 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் பெல்ஜியம் வீராங்கனையை வீழ்த்தினார்.
    • ஸ்வெரவ் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தினார்.

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) 33-வது வரிசையில் உள்ள மெர்டன்சை (பெல்ஜியம்) எதிர்கொண்டார்.

    இதில் சபலென்கா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் தொடர்ந்து 4-வது முறையாக கால் இறுதியில் ஆடுகிறார்.

    26-வது வரிசையில் இருக்கும் பவ்லொ படோசா (ஸ்பெயின்) 4-வது சுற்றில் 6-1, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சீன வீராங்கனை யபான் வாக்கை வீழ்த்தினார்.

    3-வது வரிசையில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப் 4-வது சுற்றில் சக நாட்டவரான எம்மா நவரோவிடம் 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    4-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) 3-6, 6-1, 6-2, 6-2 என்ற கணக்கில் நகாஷிமாவை (ஜப்பான்) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    6-ம் நிலை வீரரான ரூப்லெவ் (ரஷியா), 8-வது வரிசையில் இருக்கும் கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்கள்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் 3-வது சுற்றில் கோகோ காப் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், சபலென்கா 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் அரினா சபலென்கா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் உடன் மோத உள்ளார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4வது சுற்றில் கோகோ காப், சக வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.

    • ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை சந்தித்தார்.
    • டிஜெரே காயத்தால் விலகியதால் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) லூசியா புரோன்ட்டியை (இத்தாலி) சந்தித்தார். இதில் ஷபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் அவர் ரஷிய வீராங்கனை அலெக் சாண்ட்ரோவுடன் மோதுகிறார்.

    3-வது வரிசையில் இருக்கும் கோகோ கவூப் (அமெரிக்கா) தட்ஜனா மரியாவை (ஜெர்மனி) எதிர் கொண்டார். இதில் கவூப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் 14-வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெ ரிக்கா) செங் (சீனா) படோசா (ஸ்பெயின்), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை சந்தித்தார்.

    முதல் 2 செட்டை ஜோகோவிச் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார். 3-வது செட்டில் அவர் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது டிஜெரே காயத்தால் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றிபெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), பிரிட்ஸ்டி, யாபோ, ஷெல்டன் (அமெரிக்கா), ரூப்லெவ் (ரஷியா), கேஸ்பர்ரூட் (நார்வே) முசெட்டி (இத் தாலி) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை மிரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை சாம்சனோவாவை 6-3, 6-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக். சபலென்காவை எதிர்கொள்கிறார்.

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைனின் மார்ட்டா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, உக்ரைனின் எலினா ஸ்விட்னிலோவாவை 7-5, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிஸ்மோவா உடன் மோதினார்.

    இதில் அனிஸ்மோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அனிஸ்மோவா, சக நாட்டு வீராங்கனை எம்மா நவாரோவை சந்திக்கிறார்.

    நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீராங்கனை டயானா ஸ்னெய்டர், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொள்கிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீராங்கனைகள் காயத்தால் முதல் சுற்றில் வெளியேறினர்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா மற்றும் பெலாரசின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினர்.

    பெலாரசின் விக்டோரியா அசரென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோத இருந்தார். தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதேபோல், பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எமினா பேக்தாசுடன் மோத இருந்தார். காயம் காரணமாக சபலென்காவும் போட்டியில் இருந்து விலகினார்.

    முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா, விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் தொடரிலும் சபலென்கா காயம் காரணமாக காலிறுதியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா காயத்தால் வெளியேறினார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா உடன் மோதினார்.

    முதல் செட்டில் சபலென்கா 1-5 என இருந்தபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சபலென்கா போட்டியில் இருந்து விலகினார்.

    இதனால் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றுள்ளார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்திய சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை டேரியா கசட்கினா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதியில் சபலென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை சந்திக்கிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அசரென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினாவின் பொடோ ரோஸ்காவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை எரிகா ஆன்ட்ரிவா மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் 3-வது முறையாக ஸ்வியாடெக் இத்தாலி ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×