search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீ வியாபாரி"

    • தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது.
    • வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த 5 ரூபாய் டீ வியாபாரி ஒருவர் தனது புதுமையான அணுகுமுறையால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தாராஷிவ் பகுதியை சேர்ந்தவர் மகாதேவ் நானாமாலி. 3-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கடந்த 20 ஆண்டுகளாக டீ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமான தள்ளுவண்டியில் டீ வியாபாரம் செய்பவராக அல்லாமல் இவர் தனது கிராமத்தை சுற்றி வசிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் தொலைபேசி மூலம் ஆர்டர்களை எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் வழங்குகிறார்.

    இதனால் தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உதவி செய்கிறார்கள். தினமும் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கு சென்று டீ வியாபாரம் செய்யும் இவர் நாள்தோறும் 2 ஆயிரம் கப் டீ வரை விற்பனை செய்கிறார். இதன் மூலம் தினசரி வருமானமாக ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கிடைப்பதால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். இவரை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
    • மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவுசியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நானும், எனது கணவர் முகமதுஅலி ஜின்னாவும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்து வருகிறோம். எனது கணவர் இருசக்கர வாகனத்தில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இதுவே எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

    தினசரி வியாபாரத்துக்கு காலை 5 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால் கடந்த 8-ந் தேதி வியாபாரத்திற்காக சென்ற எனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    எனது கணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி எனது கணவர் பழனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. உடனே நானும் எனது குடும்பத்தாரும் பழனி போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, அவரை பார்க்கவிடாமல் போலீசார் தடுத்தனர். அடுத்த நாள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அப்பொழுது அவர் உடம்பு முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரிடம் நாங்கள் பேசியபோது, டீ வியாபாரம் செய்தபோது ஒரு பெண்ணை நான் கேலி செய்ததாக கூறி அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கி புகார் அளித்ததால், போலீசார் கைது செய்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்றார். தற்போது எனது கணவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    எனவே எனது கணவரின் நிலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    ×