search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுப்பொருட்கள்"

    • மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கினார்.
    • என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது பற்றிய விவரம்.

    சென்னை:

    தொழில்முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கினார். அதில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.

     அந்த வகையில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அளித்த தடம் பரிசுப் பெட்டகத்தில், நெல்லையில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை), நீலகிரி தோடா எம்பிராய்டரி சால், பவானி ஜமுக்காளம், புலிகாடு பனை ஓலை ஸ்டாண்ட், கும்பகோணம் பித்தளை விளக்கு ஆகியவை அதில் உள்ளன.


    பவானி ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர் என்பதை இந்த பரிசுப் பெட்டகம் வெளிப்படுத்துகிறது.

    தடம் திட்டத்தின் கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தன்னை சந்திக்கும் விருந்தினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தடம் பெட்டகத்தை பரிசளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்களை திரட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் படாத பாடுபடுவார்கள்.
    • பரிசு பொருட்கள் என்று எதையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு ஆட்களை திரட்ட ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் படாதபாடுபடுவார்கள்.

    கை செலவுக்கு பணம், பிரியாணி, குவார்ட்டர், புடவைகள், பரிசு பொருட்கள் என்று எதையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டத்தை சேர்ப்பது கஷ்டம்.

    இந்த நிலையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் வேளச்சேரியில் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுப.வீரபாண்டியன், கரு.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது நாற்காலியில் அமர்ந்து இருந்தவர்கள் நாற்காலிகளை தூக்கி குடையாக பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.

    பலர் நாற்காலிகளை தலையில் வைத்தபடியே மெல்ல அங்கிருந்து நகர்ந்தார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த நாற்காலிகளையே தூக்கிச் சென்றதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

    ஆனால் உண்மையிலேயே கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு நாற்காலிகள் இலவசம் தான் என்றார் கவுன்சிலரும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட செயலாளருமான வேளச்சேரி ஆனந்த்.

    தனது 176-வது வார்டுக்கு உட்பட்டவர்களை கூட்டத்துக்கு வருமாறும், கூட்டத்தில் புது பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கடைசியில் அந்த நாற்காலிகளை எடுத்து செல்லலாம் என்றும் கூறி இருந்தாராம். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு எதையாவது கொடுப்பதை விட நாற்காலிகளை கொடுத்தால் வீடுகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதினேன். இதற்காக மொத்தமாக 2 ஆயிரம் நாற்காலிகளை கம்பெனியில் இருந்து ரூ.400 விலைக்கு வாங்கினேன்.

    இப்படி செய்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் இடையில் எழுந்து சென்றால் நாற்காலிகளில் யாராவது அமர்ந்து விடுவார்கள். அப்புறம் நாற்காலி நமக்கு கிடைக்கிறது என்று கூட்டம் முடியும் வரை நாற்காலியை விட மாட்டார்கள். வெளியே செல்ல மாட்டார்கள் என்றார். கூட்டத்தை கவர எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க?

    • 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
    • பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ளது. இந்த 2 எல்லைகளிலும் மொத்தம் 14 சோதனைச்சாவடிகள் உள்ளன. நடுப்புணி, வடக்கு காடு, ஜமீன் காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்ப கவுண்டனூர், வாளையார், செம்மனாம்பதி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் தேஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழகம் - கேரள மாநில எல்லையாக உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது.

    சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    மதுபானங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும், வெளிநாட்டு மதுவகைகள் இரு மாநிலங்களுக்கு இடையே நடமாட்டத்தை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும்.

    மேற்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • இல்லம் தேடி கல்வி 2-ஆம் ஆண்டு தொடக்க விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    இல்லம் தேடி கல்வி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரேவதி வேதகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.

    ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மாநில தலைவர் முனைவர் ரவிச்சந்திரன் மற்றும் அன்பு உள்ளங்கள் சமூக அறக்கட்டளை நிறுவனர் ராஜாமணி இருவரும் முன்னிலை வகித்தனர்.

    இல்லம் தேடி கல்வி மேற்பார்வையாளர் அனு பிரியா, சமூக ஆர்வலர் துரை முருகன் ஆகியார் சிறப்புரையாற்றினர்.

    இந்திகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவி க்கப்பட்டனர்.

    சேவா பாரதி - தமிழ்நாடு அமைப்பு சார்பாகவும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    அனைவருக்கும் கவிதா ரவிச்சந்திரன் மற்றும் தீபக் ரவிச்சந்திரன் இருவரும் சிற்றுண்டி வழங்கினார். சமூக ஆர்வலர் முருகவேல் ரவி நன்றி கூறினார்.

    ×