search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்வாதி மாலிவால்"

    • கடந்த 13-ந்தேதி கெஜ்ரிவால் வீட்டில் வைத்து பிபவ் குமார் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு.
    • பிபவ் குமாரை டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.

    டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களை எம்.பி. ஸ்வாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

    இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிபவ் குமாரை கைது செய்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    இந்த விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை பதில் அளிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பிடிஐ நிறுவனத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார்.

    அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-

    இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் நான் இது தொடர்பாக கருத்து தெரிவித்தால், அதன் நடைமுறையை பாதிக்கலாம். ஆனால், நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த விவகாரத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. போலீசார் இரண்டு பகுதிகளையும் நியாயமான வகையில் விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    பிபவ் குமாரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.

    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார்.
    • அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களுடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் சென்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வந்தார். அங்கிருந்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டருடன் பா.ஜ.க. அலுவலகம் நோக்கிச் செல்ல தொடங்கினர்.

    சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கிச் சென்ற ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பா.ஜ.க. அலுவலகம் உள்ள பகுதியில் டெல்லி போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • எங்களை அழிக்க பா.ஜ.க. மூன்று திட்டங்களை வகுத்துள்ளது என்றார் டெல்லி முதல் மந்திரி.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதல் மந்திரியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

    ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியை நசுக்க விரும்புகிறது.

    ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவதாகவும், அவர்களது பணி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவருக்கு தெரிந்த நபர்கள் எனக்கு தெரியும். அவர்கள் என்னிடம் இதை தெரிவித்தனர்.

    ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் ஒழிக்க 'ஆபரேஷன் ஜாது' என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    ஆம் ஆத்மி கட்சியின் வங்கி கணக்கு தேர்தலுக்கு பிறகு முடக்கப்படும். வங்கி கணக்குகள் முடக்கப்படும் என அமலாக்கத்துறை வக்கீல் ஏற்கனவே கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளார். இப்போது எங்கள் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று கூறினார்.

    வங்கி கணக்கு முடக்கம், அலுவலகத்துக்கு சீல், நாங்கள் வீதிக்கு கொண்டு வரப்படுவோம். இவைதான் பாரதிய ஜனதாவின் திட்டமாகும்.

    2015-ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் (பா.ஜ.க.) எழுப்பினார்கள். இப்போது மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்கள். ஊழல் நடந்ததா என்று மக்கள் கேட்கிறார்கள். பணம் எங்கே? மற்ற இடங்களில் சோதனை நடக்கும்போது நோட்டுகள், தங்கம் மீட்கப்படுகிறது. ஆனால் இங்கு எதுவும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதாவினர் பொய் வழக்குகளைப் போட்டு கைதுசெய்தனர் என தெரிவித்தார்.

    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    மும்பை:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். ஜூன் 4-ம் தேதி ஆட்சி மாறப்போகிறது. இன்றும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது டெல்லியில் மட்டுமல்ல, மும்பையிலும் நடக்கிறது என தெரிவித்தார்.

    • கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
    • ஆம் ஆத்மி எம்.பி. தாக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பிபவ் குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியிட்டு இது பா.ஜ.க. சதி என குற்றம்சாட்டியது.
    • ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பிபவ் குமார் புகார் கொடுத்தார்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாக் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று செய்தனர்.

    • டெல்லி முதல் மந்திரியின் தனிச்செயலர் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜ.க.வை குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவால் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    அந்தப் புகாரில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. தவறான அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியில் என்னை சிக்கவைக்க முயன்றார். மே 13 அன்று டெல்லி முதல் மந்திரி இல்லத்திற்குள் பலவந்தமாகவும், அங்கீகரிக்கப்படாமலும் நுழைந்துள்ளார். ஒரு குழப்பத்தை உருவாக்கி என்னை தாக்க முயன்றார் என குறிப்பிட்டுள்ளார்.

    • அரவிந்த் கெஜ்ரிவால் தனிச் செயலாளர் தாக்கியதாக மாநிலங்களவை பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
    • ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜனதாவை குற்றம்சாட்டியுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார்.

    அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது.

    இந்த வீடியோவை பார்க்கும்போது, டெல்லி மாநிலத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜனதாவல் நடத்தப்பட்ட திட்டம் தற்போது வெளியாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜனதா கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ந்தேதி அனுப்பி பா.ஜனதா சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால், அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜனதாவின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என அதிஷி தெரிவித்துள்ளார்.

    மேலும், போலீஸ் புகாரில் அவர் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், வீடியோ காட்சியில் அவர் வசதியாக உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலும், பிபவ் குமாரை மிரட்டுவதையும் பார்க்க முடிகிறது என அதிஷி தெரிவித்துள்ளார்.

    • ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் வாங்கினர்.
    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசில் முறையிட்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் கூறியதாவது:

    முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்தபோது பிபவ் குமார் அறைக்குள் வந்து ஸ்வாதி மாலிவாலை திட்டினார். மேலும், பலமுறை அறைந்துள்ளார். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கியுள்ளார். மாலிவால் தன்னை விடும்படி கெஞ்சியுள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார் ஸ்வாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்தபின் ஸ்வாதி மாலிவால் நேற்று இரவு வீடு திரும்பினார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசுமீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்துவருகின்றன.
    • ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதையடுத்து, டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி காலை 11 மணி அளவில் தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் எழுத்துப்பூர்வமாக போலீசிடம் புகார் அளித்தார்.

    இந்நிலையில், முதல் மந்திரியின் தனிச்செயலர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

    • டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடைபெற உள்ளது
    • ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்றாவது வேட்பாளராக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி நியமித்துள்ளது.

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி இன்றுடன்(ஜன.12) முடிவடைந்த நிலையில், இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி பரிந்துரை
    • ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆதிமியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது.

    டெல்லி கலால் ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராஜ்யசபா நியமனத்திற்கான படிவங்கள் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட அனுமதிக்குமாறு திகார் சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது

    தொடர்ந்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக ஸ்வாதி மாலிவால் நியமிக்கப்பட்டார், ஆசிட் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளில் ஸ்வாதி மாலிவால் முக்கிய பங்கு வகித்தார்

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள 70 இடங்களிலும் ஆம் ஆத்மி 62 இடங்களை கொண்டிருப்பதால், ஸ்வாதி மாலிவால், சஞ்சய் சிங் மற்றும் என் டி குப்தா ஆகிய மூன்று ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    ராகவ் சதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மியை சேர்ந்த 10 பேர் மேலவையில் உள்ளனர். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் அதிகரித்துள்ளது.

    ×