search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வபெருந்தகை"

    • நடப்பாண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும்.
    • தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒன்றிய அரசு மாநிலங்களிடையே திணித்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுத்து வருகிறது.

    நடப்பாண்டிற்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் விடுவித்திருக்க வேண்டும். அப்படி விடுவிக்காத நிலையில் ஒன்றிய அரசுக்கு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு பலமுறை கடிதங்கள் மாநில அரசால் எழுதப்பட்டது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    கல்வி முறையை சீரழிக்கிற வகையில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு பாராளுமன்ற பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்ட தொகையை மாநில அரசுக்கு ஒதுக்காமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். நீட் திணிப்பால் தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இதையொட்டி புதிய கல்விக் கொள்கை திணிப்பினால் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கிற ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக உடனடியாக நிதியை விடுவிக்குமாறு ஒன்றிய பா.ஜ.க. அரசை கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

    மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதன்பிறகு பல்வேறு தரப்பினரும் கனிமொழி எம்.பி., தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    நேற்று காலையில் சுமார் 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகம் அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து சுமார் 4 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

    இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத்தலைவர் ராஜேஸ்குமார், தமிழக எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் மீனவ பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.


    • ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
    • மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆத்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் பஸ் நிலையம் மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டு அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    மேலும் ஆட்டுக்குட்டியுடன் திடீரென அவர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத்.
    • 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத். ஆனால் அந்த ரெயிலில் பல பகுதிகளில் இயங்கும் 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது. இது போன்ற தேவையில்லாத செலவுகளுக்கு பதிலாக சாதாரண மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரெயிலில் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

    1924-ம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரெயில்வே பட்ஜெட் 2016-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்து பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரெயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்தனர்.

    இந்திய ரெயில்வே தனி பட்ஜெட் இருந்திருந்தால் ரெயில்வேக்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து வெளியே தெரிந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் பா.ஜ.க. அரசால் மூடி மறைத்ததும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரெயில் விபத்துகள் ஏராளமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

    பா.ஜ.க. அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரெயில்வேக்கான தனி பட்ஜெட் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்பி ரெயில்வேக்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அதை முறையாக பராமரித்து சாதாரண மக்கள் வசதியாக பயணம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி.
    • நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வபெருந்தகை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 40 சதவீதம் வாக்கு வங்கி நாம் வைத்திருந்தோம். தற்போது எந்த அளவிற்கு உள்ளது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். குறை நம்மிடம் தான் உள்ளது. நாம் மற்றவர்களை குறை சொல்லக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை காங்கிரஸ் கட்சியில் சேருங்கள்.

    நம்மிடம் கட்டமைப்பு உள்ளது. இனிமேல் கட்சியில் வேலை செய்தால்தான் பதவி, பதவி வாங்கி வைத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருப்பவர்களின் பதவி பறிக்கப்படும். நாம் கட்சி பணி செய்யவில்லை என்றால் பெருந்தலைவர்கள், தியாகிகளின் ஆன்மாக்கள் நம்மை மன்னிக்காது.

    ராகுல்காந்தி என் ரத்தம் இந்த மண்ணில் உள்ளது என்று கூறியுள்ளார். அது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அவரைப்போல் அனைவரும் பாடுபட வேண்டும். நம்மிடம் செல்வாக்கு இல்லாத காரணத்தினால் தான் அண்ணாமலை இறுமாப்புடன் நம் கட்சியை பற்றி பேசி வருகிறார்.

    ஒற்றுமை இருந்தால், செல்வாக்கு இருந்தால் நம் மீது கை வைக்கும் பொழுது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் பஸ், வேன், லாரி ஏன் விமானத்தை கூட மறித்தால் நம் பலம் அவர்களுக்கு புரியும்.

    நமக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் நம்மை மிரட்டுகிறார்கள். சமயங்களில் கூட்டணி கட்சிகளுடன் சிறு மனக்கசப்புகள் ஏற்படுகிறது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு சரியாக 23 மாதங்கள் இருந்தாலும் 18 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் காய்ச்சல் வந்துவிடும். ஆகவே நமக்கு இன்னும் 18 மாதங்கள் தான் உள்ளது. அதற்குள் நாம் கட்சியை வளர்த்தாக வேண்டும்.

    பெரம்பலூர் சிறிய மாவட்டம் என்பதால் முதலில் இங்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். அண்ணாமலை, இந்திரா காந்தியை பற்றியும், நேருவை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் நாட்டை விட்டு ஓட பார்த்தார்களாம். இவரா பிடித்து அழைத்து வந்தார்.

    என்ன அப்பட்டமான பொய் சொல்கிறார், 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு என்று ஓர் இடத்தை நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வெறுப்பு அரசியலை விதைப்பவர்கள் நாங்கள் இல்லை.
    • அவரது கருத்து சுதந்திரம் அவர் பேசலாம் அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

    அண்ணாமலை ஜோபைடன் ஆக போகிறார், கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம் என்று ஊரில் ஒரு பழமொழி உள்ளது. அது போல அண்ணாமலை செயல் உள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியவில்லை, வெளிநாடு சென்று என்ன செய்ய போகிறார்.

    இவரது வருகையை நினைத்து ஜோ பைடன் என்னடா ஒரு ஆர்எஸ்எஸ் கும்பல் இங்கு வருகிறேதே என்று அதிர்ந்து போய் உள்ளார். இவரை எப்படி எதிர் கொள்ள போகிறோம் என்று ஜோ பைடனும், டிரம்பும் ஆலோசனையில் இறங்கி உள்ளனர்.

    நான் தமிழனாக இருந்தாலும் காவிரி பிரச்சனையில் கன்னட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நாங்க எங்காவது ஒரு இடத்தில் பேசியிருக்கிறோமா? இல்லை. ஷோபா காராத் தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைத்து சென்றார் என்றார்கள் அதையும் கண்டிக்கவில்லை. வெறுப்பு அரசியலை விதைப்பவர்கள் நாங்கள் இல்லை. ஆனால் அவர் எல்லா இடங்களிலும் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறார்.

    காங்கிரஸ் திமுகவின் அடிமை என்றார். இவர் மூன்று கட்சிகளில் இருந்து வந்தவர் காங்கிரஸ் வரலாறு தெரியாது என்றார் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உள்ளது. அதனால் நாங்கள் மிகவும் பணிவுடன் தான் அவருக்கு கூறியிருக்கிறோம் இதெல்லாம் அரசியலில் வேண்டாம் என்று.

    நல்ல தலைவர்கள் இருப்பதால் தான் தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அவரது கருத்து சுதந்திரம் அவர் பேசலாம் அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.

    இந்தியர்கள் என்றால் அன்பு செலுத்துபவர்கள், எல்லா மதம், ஜாதியையும் அரவணைப்பவர்கள், வெறுப்புக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உலகம் முழுவதும் இந்தியர்கள் மேல் ஒரு பெருமை இருக்கிறது. அந்த பெருமையை சீர்குலைப்பதற்காக குறுகிற கண்ணோட்டத்தில் மத அரசியலை கையில் எடுத்து செய்திருந்தார்கள் இப்போது அந்த மத அரசியல் தோல்வி அடைந்திருக்கிறது.

    காலை முதல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது அண்ணாமலையுடன் சேர்ந்த சகா அவருக்கு நெருங்கியவர் 267 கிலோ தங்கத்தை கடத்தி சிக்கி இருக்கிறார். என்னிடம் ஆதாரம் உள்ளது இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்ல போகிறார்.

    எங்களை மிரட்டுவது, வழக்கு போடுவது என்று அண்ணாமலை உள்ளார். நாங்கள் எதற்கு தயாராக இருக்கிறோம். எங்கள் வீடுகள் எப்போதும் திறந்தே இருக்கும், எப்போது வேண்டுமென்றாலும் வாங்க தவறு செய்திருந்தால் எடுத்து கொண்டு போங்க, கொள்ளை அடித்த பணம், ஊழல் பணம், எல்லா மாநிலங்களில் ஆளுங்கட்சியில் இருக்கிற பணம் என்று எல்லாத்தையும் எடுத்து கொண்டு போங்க.

    எங்களிடம் ஒன்றும் இல்லை. காங்கிரஸ் தொண்டர்கள் கொடுத்த 130 கோடி பணத்தை முடக்கினீர்கள். அரசியலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தலுக்கு எப்போதும் பணம் கொடுப்பார்கள் அதை கூட நிறுத்திவிட்டார்கள். எங்கள் தோழர்கள், எங்கள் தொண்டர்கள் அனைவரும் கையேந்தி வசூல் செய்து இந்த தேர்தலை நடத்தி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

    • நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
    • வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

    நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததின் மூலம் ஜனநாயகத்தை உலகத்திற்கு நிரூபித்தார். நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
    • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய சாவுகள் தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவகைகள் தாராளமாக கிடைக்கும் போது விஷச் சாராயம் எப்படி கிடைக்கிறது? எனவே இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் வேதனையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.

    அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார். பொறுப்புள்ள மந்திரி இதை அரசியல் ஆக்காமல் இனிவரும் காலங்களில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆலோசனை வழங்கலாம்.

    ஒட்டுமொத்த தமிழ்நாடும் புறக்கணித்துவிட்ட நிலை யில், ஏதாவது காரணங்களை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அது எடுபடாது.

    நடிகர் கமல் மிதமாக குடித்து கொள்ளலாம் என்று தனது கருத்தை வெளியிட்டு உள்ளார். நாங்கள் காந்திய வாதிகள். முழு மதுவிலக்கைத்தான் விரும்புகிறோம்.

    ஆபத்தில்லாமல் குடிக்கலாம் என்பது சமூகத்தில் மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். ஆரோக்கியமான வாழ்வுக்குத்தான் வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
    • சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 12.6.2024 தலைமைச் செயலகத்தில், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.


    உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன்


    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    • எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை.
    • அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை தமிழகத்தில், காங்கிரசின் தற்போதைய நிலை பற்றிய தனது வேதனையை தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

    தமிழகத்தில் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை. எனவே வரும் காலங்களில் எந்த திசையில் பயணிக்கப் போகிறோம் என்பதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கும் தொண்டர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்திற்கு தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட சுமார் 1500 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    காங்கிரஸ் கட்சிக்கென்று தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதை விரிவுபடுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலையிலும் செயல்படுகிற அமைப்பாக முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். செயல்படாத கட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி 1989-ல் தனித்து போட்டியிட்ட போது பெற்ற 20 சதவிகித வாக்குகளை இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத எந்த கட்சியும் பெற்றதி ல்லை, பெறவும் முடியாது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி உறுதிபடுத்த வேண்டும்.

    ராகுல்காந்தியின் தமிழக கனவு மெய்ப்படுகிற வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலிமை படுத்துவதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கிறாரோ, அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு அவரது முயற்சிகள் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்வது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதற்கிடையே முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தார். பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை மீண்டும் கேட்டார்.

    ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் வேறு தொகுதிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்ப டவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வரும் திருநாவுக்கரசர் இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்து.

    • செல்வ பெருந்தகையை சந்தித்து வாழ்த்து.
    • காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    கன்னியாகுமரி:

    விஜய்வசந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

    இந்த தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற மாநில தலைவர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    நேற்று வெற்றி கண்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது.
    • கல்வி பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு எந்தவித தகுதியும் இல்லை.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதி, மதம், மொழி அரசியல் செய்யகூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், மோடி அரசு கல வர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதனை தடுக்கா மல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

    ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது. அரசியலுக்காக அயோத்தியில் ராமர் கோவிலை மோடி கட்டினார். எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம். நானும் ராமர் பக்தர் தான். நாங்கள் எப்படி ராமர் கோயிலை இடிக்க விடுவோம். இடிப்பது காங்கிரஸ் வழக்கம் அல்ல, கட்டுவது தான் காங்கிரஸ் வழக்கம்.

    மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் சத்திய ராஜ் நடித்தால் உண்மையாக நடிக்க வேண்டும்.

    கல்வி என்றால் பெருந்தலைவர் காமராஜர் தான் முன்னுதாரணம். கல்வி பற்றி பேசுவதற்கு பா.ஜ.க. விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அறிவியல் ரீதியாக விசாரணை நடக்கிறது. அவசர கதியில் எதையும் செய்யவேண்டாம், நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு வலியுறுத்தி உள்ளோம். சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கை மாற்றுவதற்கு தேவை இருக்காது என்று நெல்லை மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்தார்.

    ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று தான் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி தரம் குறையாக பேசி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×