search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல் வழக்கு"

    • ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வா லின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் ரேவண்ணாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் மேலும் 7 நாட்கள் காவலை நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி ரேவண்ணாவை வருகிற 14-ந் தேதி வரை விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் ரேவண்ணாவை சிறையிலிருந்து அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி முதல் வெளியே வரத் தொடங்கியது. இதையடுத்து ஹாசன் தொகுதியில் கடந்த 26-ந் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த சில மணி நேரங்களில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. அவர்கள் ஆபாச படத்தில் இருந்த பெண்களை அடையாளம் கண்டு வாக்குமூலம் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த பிரஜ்வாலுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

    மேலும் கர்நாடக சிறப்புக் குழுவினர் புளூ கார்னர் நோட்டீஸ் கொடுக்கவும் பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வாலை அங்குள்ள போலீசார் மூலம் கைது செய்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் பெண் கடத்தல் வழக்கில் பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டதால் பிரஜ்வால் கர்நாடகா திரும்புகிறார் என்ற தகவல் வெளியானது.

    ஜெர்மனியில் இருப்பதாக கூறப்பட்ட பிரஜ்வால் துபாயில் இருந்து கர்நாடகம் திரும்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    துபாயில் இருந்து வரும் பிரஜ்வாலை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    போலீசார் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதால் பிரஜ்வால் ரேவண்ணா துபாயில் இருந்து வேறு மாநிலத்திற்கு வந்து அங்கிருந்து ரெயில் மூலம் கர்நாடகா வரலாம் என்ற தகவலும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

    இதையடுத்து அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் பிரஜ்வாலை கைது செய்ய தயாராக உள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் கூறும்போது, பிரஜ்வால் வெளிநாட்டில் இருந்தபடி கர்நாடகாவைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அவர்களை கண்காணித்து வருகிறோம். மேலும் பிரஜ்வாலை கண்டுபிடித்து கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது என்று கூறினர்.

    இதற்கிடையே எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஹாசன் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரிக்க எஸ்.ஐ.டி. குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே ஆபாச வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதுபற்றிய தகவல் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இதுதொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 6360938947 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பு மற்றும் பிற உதவிகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் வழக்கு விசாரணை.
    • நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

    ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த 9ம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

    டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.

    டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • விமானத்தில் பயணித்த 156 பேரில், 149 பேர் கடத்தல் காரர்கள் என்ற எதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
    • சிக்கிய கடத்தல் கும்பல் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள்.

    சென்னை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கடத்தல் காரர்கள் வந்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

    இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை ஓமனில் இருந்து வந்த விமானத்தை சோதனை செய்தனர். மேலும், பயணிகள் ஒவ்வொருவரையும் சோதனை செய்தனர்.

    அப்போது, விமானத்தில் பயணித்த 156 பேரில், 149 பேர் கடத்தல் காரர்கள் என்ற எதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

    மொத்தம் 156 பேரில் 7 பேர் மட்டுமே ஒரே குடும்பத்தை சேர்ந்த பயணிகள். மற்ற அனைவரும் கடத்தல் கும்பல் என தெரியவந்துள்ளது.

    சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 149 பேரிடம் இருந்து ரூ.14 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக, ஒரு விமானத்தையே கடத்தல் கும்பல் புக் செய்துள்ளது.

    மேலும், சோதனையில் 13 கிலோ தங்கம், 2500க்கும் மேற்பட்ட செல்போன்கள், குங்குமப்பூ உள்ளிட்டவற்றை கும்பல் கடத்தி வந்துள்ளன. சிக்கிய கடத்தல் கும்பல் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள். கடத்தலின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை, கடத்தல் உள்ளிட்ட சுமார் 100 குற்றவழக்குகளில் தொடர்புடையவர் அதிக் அகமது
    • அதிக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் என்ற அஷ்ரப் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    பிரயாக்ராஜ்:

    உத்தர பிரதேச மாநிலத்தில் 2006ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆட்கடத்தல் வழக்கில் பிரபல தாதா அதிக் அகமது மற்றும் இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிக் அகமதுவின் சகோதரர் காலித் அசீம் என்ற அஷ்ரப் உள்ளிட்ட 7 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    உமேஷ் பால் என்பவரை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கொலை வழக்கில் உமேஷ் பால் முக்கிய சாட்சி ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கொலை கடத்தல் உள்ளிட்ட சுமார் 100 குற்றவழக்குகளில் தொடர்புடைய அதிக் அகமது, அரசியலுக்கு வந்து எம்.பி. மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். குற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற இவர் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் குஜராத் சிறையில் இருந்து அதிக் அகமதுவை பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

    • கவுன்சிலர் ரோஜாவின் கணவரான ரமேசுக்கும், சுரேந்தருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
    • கடத்தல் கும்பலிடம் இருந்து கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ளார்.

    இவரது மனைவி ரோஜா. இவர் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜேக்கப். கல்லூரி மாணவர்.

    கடந்த 24-ந்தேதி காலை வீட்டில் இருந்த கவுன்சிலர் ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே மர்ம கும்பல் ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே ராள்ளகுப்பம் பகுதியில் விட்டுவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறி அன்று இரவே கவுன்சிலர் ரோஜாவும், அவரது மகன் ஜேக்கப்பும் திரும்பி வந்தனர்.

    இது தொடர்பாக பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் அதே கிராமத்தை சேர்ந்த சுரேந்தர், தனது கூட்டாளிகளான கும்ப்ளியை சார்ந்த சந்தோஷ் (26), ஆந்திர மாநிலம் சுதிர் பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (30), நாகலாபுரத்தை சேர்ந்த நவீன் (28), ராச பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் (30) ஆகியோருடன் சேர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து சுரேந்தர், சந்தோஷ், பாஸ்கர், நவீன் ஆகிய 4பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. கவுன்சிலர் ரோஜாவின் கணவரான ரமேசுக்கும், சுரேந்தருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. நிலத்தை குறைந்த விலைக்கு விற்குமாறு ரமேஷ் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும் விவசாயம் செய்ய மின் இணைப்பு பெறுவதற்காக சென்றபோது மின் இணைப்பு வாங்க விடாமல் ரமேஷ் தடுத்ததாகவும் தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து ரமேசை மிரட்டுவதற்காக அவரது மனைவி மற்றும் மகனை சுரேந்தர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி உள்ளார். பின்னர் போலீசார் தேடுவதை அறிந்ததும் விட்டுச்சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக பீகார் சென்று கள்ள கைத்துப்பாக்கி ஒன்றையும் வாங்கி உள்ளனர்.

    இந்த கடத்தல் தொடர்பாக தலைமறைவாக உள்ள சந்திரசேகர் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கடத்தல் கும்பலிடம் இருந்து கார், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

    ×