search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடு"

    • 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷமார் ஜோசப் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.
    • கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்க்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கவெம் ஹாட்ஜ் 120 ரன்களும் அலிக் அத்தானாஸ் மற்றும் ஜோஷ்வா டா சில்வா 82 ரன்களும் அடித்தனர்.

    குறிப்பாக 10-வது விக்கெட்டுக்கு ஷமார் ஜோசப், ஜோஷ்வா டா சில்வா ஜோடி 71 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷமார் ஜோசப் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.

    107வது ஓவரில் கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார். அது ரசிகர்கள் அமரும் மைதானத்தின் மேற்கூரையில் இருந்த சில ஓடுகளை அடித்து நொறுக்கியது. அந்த துண்டுகள் கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் மீதும் விழுந்தது. நல்லவேளையாக ரசிகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • சேலம் விமான நிலையத்தில் ஓடுதள உராய்வு அளவீடு சோதனை 2 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது.
    • அதில் விமானத்தை தரை யிறக்கும்போது, சக்கரம் உராய்ந்து ஓடுதளத்தின் தன்மை எப்படி மாறுகிறது, அவற்றை எவ்வாறு அளவீடு செய்து புதுப்பிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.

    சேலம்:

    இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் சேலம் விமான நிலையத்தில் ஓடுதள உராய்வு அளவீடு சோதனை 2 நாட்கள் பயிற்சி நேற்று தொடங்கியது. அதில் விமானத்தை தரை யிறக்கும்போது, சக்கரம் உராய்ந்து ஓடுதளத்தின் தன்மை எப்படி மாறுகிறது, அவற்றை எவ்வாறு அளவீடு செய்து புதுப்பிக்க வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதற்கென சென்னையில் இருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய ஓடுதள உராய்வு சோதனை கார் சேலம் விமான நிலையத்துக்கு வந்துள்ளது. அதன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. விஜயவாடா, ைஹதராபாத், திருப்பதி, மதுரை, திருச்சி, சென்னை, சேலம் விமான நிலையங்களில் இருந்து 17 ஊழியர்கள் பங்கேற்றனர்.

    நேற்று முன்தினம் விமான நிலையத்தில் ஓமலூர் தாசில்தார் வள்ளி முனியப்பன் தலைமையில் விமான நிலைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம் நடந்தது. அதில், பறவைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குப்பை, இறைச்சி கழிவை விமான நிலையத்தை சுற்றி கொட்டப்படாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.

    ×