என் மலர்
நீங்கள் தேடியது "பார்டர் கவாஸ்கர் தொடர்"
- பார்டர் கவாஸ்கர் தொடரில் 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.
- இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம்.
ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.
2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.
அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012-க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் வீரர் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம். அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது
என்று அவர் கூறினார்.
- ஆஸ்திரேலிய அணி 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது.
- இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.
கடைசியாக 2004-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் 19 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதற்கிடையே, இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இந்திய ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதாகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகச்சவாலான காரியம்.
இந்நிலையில் இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறியதாவது:-
இந்தியாவில் சுழல் பந்தை ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். இந்திய வீரர்கள் கிராஸ் பேட் ஷாட் ஆடவே மாட்டார்கள். ஸ்டிரைட் பேட்டில் மட்டுமே ஆடுவார்கள். எனக்கும் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடலாமா அல்லது பேக் ஃபூட்டில் ஆடலாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஸ்டிரைட் பேட்டில் ஆடுவது தான் சரியான உத்தி.
என்று அவர் தெரிவித்துள்ளார்.
- மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும்.
- 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் சிறப்பாக பந்து வீசி ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவருடைய திறனை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியா தன்னுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக அவரை பிரட் லீ, டேல் ஸ்டெயின் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுக்காக எதிரான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 2024 - 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும். அவரை எதிர்கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன். 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
நான் இதுவரை பார்த்ததில் மயங்க் யாதவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஏனெனில் அவர் நல்ல ஏரியாக்களில் பந்தை வீசுகிறார். அவரைப் போன்ற இளம் வீரர்கள் ஷார்ட் லைனில் நல்ல வேகத்தில் வீசுகின்றனர். எனவே அவர்கள் இன்னும் கொஞ்சம் தெளிந்தால் நீண்ட தூரம் பயணம் செல்ல முடியும்.
மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளுக்கு எதிராக நீங்கள் உண்மையில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய அறிமுகப் போட்டியில் அசத்திய பின் அப்படியே பின்தங்கி விடுவார்கள். ஆனால் இவர் அங்கிருந்து மீண்டும் வந்து கிளன் மேக்ஸ்வெல் போன்ற சிறந்த டி20 பேட்ஸ்மேனை அவுட்டாக்கினார்.
மேலும் கேமரூன் கிரீன், ரஜத் படிதார் போன்ற வேகத்தை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களையும் அவர் அவுட்டாக்கினார்.
இவ்வாறு ஸ்மித் கூறினார்.
- நான் விராட் கோலியை ஒன்று அல்லது இரண்டு முறை வீழ்த்தியிருப்பேன்.
- அவரும் என்னுடைய பந்தில் ரன்கள் அடித்திருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின்போது ஸ்லெட்ஜிங்கிற்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய வீரர்கள், தங்கள் நாட்டிற்கு விளையாட வரும் வீரர்களுடன் கடுமையான வகையில் வார்த்தைப்போரில் ஈடுபடுவது உண்டு.
இந்திய அணி அவர்களுக்கு ஈடுகொடுத்து பதிலடி கொடுப்பார்கள். இதனால் இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். விராட் கோலி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் களத்தில் நேருக்கு நேர் மோதும்போது அனல் பறக்கும்.
இந்த நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி உடனான சண்டையை ரசிப்பேன் என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார்க் கூறுகையில் "விராட் கோலியுடனான சண்டையை நான் ரசிக்கிறேன். ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் எதிராக ஏராளமான கிரிக்கெட்டுகள் விளையாடியுள்ளோம். நான் எப்போதும் நல்ல வார்த்தைப்போர் ஈடுபடுவது உண்டு. நான் உண்மையிலேயே அவரை ஒன்று அல்லது இருமுறை வீழ்த்தியிருப்பேன். எனக்கு எதிராக அவரும் ரன்கள் அடித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமம் இல்லை. ஆகவே, இது சிறந்த போட்டியாக இருக்கும். இருவரும் ரசிக்கிறோம்" என்றார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா மண்ணில் வென்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முறை எப்படியாவது தொடரை கைப்பற்ற வேண்டும் என ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.
- இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
- பார்டர் கவாஸ்கர் தொடரில் நிச்சயம் முகமது சமி இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹர்சித் ரானா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் டெஸ்ட்டில் அறிமுகமாகி உள்ளனர். இந்த தொடரில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடம் பெறுவாரா என்பது சந்தேகத்தில் இருந்தது.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது சமி, குணமடைந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு பந்து வீசி வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால் பார்டர் கவாஸ்கர் தொடரில் நிச்சயம் முகமது சமி இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம் பெறாறது குறித்து பிசிசிஐ மற்றும் ரசிகர்களிடம் முகமது சமி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது முயற்சிகளை மேற்கொண்டு, எனது பந்துவீச்சு உடற்தகுதியை நாளுக்கு நாள் மேம்படுத்துகிறேன். போட்டிக்கு தயாராகவும், உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடவும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ மன்னிக்கவும். ஆனால் மிக விரைவில் நான் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.
- தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது.
- அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்சித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது. இந்தியா வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்தையும் நீங்கள் பார்த்தால், அதில் ஏதேனும் ஒரு அறிமுக வீரர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.
இதனைத் தற்போது எல்லா அணிகளும் செய்து வருகின்றன. அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், ஹர்சித் ரானா ஆஸ்திரேலிய தொடருக்கு ஒரு நல்ல தேர்வு என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி இரு குழுவாக ஆஸ்திரேலியா செல்கிறது. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில் அவர் இன்று புறப்படும் முதல் குழுவினருடன் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-வது குழு நாளை செல்கிறது.
இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட்டில் அறிமுக வீரர்களாக மெக்ஸ்வீனி, ஜோஷ் இங்கிலிஸ் இடம் பிடித்துள்ளனர்.
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.
- அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது.
- செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு அதிரடி தொனியில் வெளிப்படையாக பதில்கள் அளித்தார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பகிரங்கமாக சாடினார்.
இந்த நிலையில் கம்பீருக்கு பொதுவெளியில் வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. அதனால் அவரை செய்தியாளர்கள் சந்திப்புக்கு அனுப்பாதீர் என இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் தள பதிவில், 'கம்பீரின் செய்தியாளர் சந்திப்பை இப்போது தான் பார்த்தேன். அவரை இது போன்ற பணியில் இருந்து விலக்கி வைப்பது தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லது. அவர் அணிக்கு பின்னணியில் இருந்து மட்டும் வேலை பார்க்கட்டும்.
செய்தியாளர்களுடன் உரையாடும் போது, அவரது நடத்தை, வார்த்தைகள் மெச்சும்படி இல்லை. இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழு தலைவர் அகர்கர் ஊடகத்தினரை எதிர்கொள்வதில் திறமையானர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
- விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள்.
- கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை குறைந்தது 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் தவிக்கிறது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பார்ம் பெரிய அளவில் இல்லை. அவர்களது பார்ம் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள். கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி இருக்க இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
- அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம்.
- போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆடுகளத்தன்மை முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்று பிட்ச் தலைமை பராமரிப்பாளர் இசாக் மெக்டொனால்டு இப்போதே எச்சரித்துள்ளார். சுழலுக்கு ஏற்ற ஆடுகளத்தில் விளையாடிவிட்டு வந்துள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முதல் போட்டியே பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது.
இசாக் மெக்டொனால்டு கூறுகையில், 'இது ஆஸ்திரேலியா....அதிலும் பெர்த்... இங்கு தொடர்ச்சியாக அதிவேகமும், நல்ல பவுன்சுக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம். சரியாக சொல்வது என்றால் கடந்த ஆண்டு எப்படி இருந்ததோ அதையே பின்பற்ற விரும்புகிறேன். சென்ற ஆண்டு இங்கு டெஸ்டின் போது (ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்) ஆடுகளத்தில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடப்பட்டு இருந்தது. இது நல்ல தொடக்க புள்ளியாக அமைந்தது.
ஏனெனில் புற்கள் காரணமாக முதல் 3 நாட்கள் மிகுதியான வேகம் காணப்பட்டது. ஆனால் இரு அணியிலும் புயல்வேக பவுலர்கள் இருந்ததால் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஆண்டும் அது போலவே இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் சில பேட்ஸ்மேன்கள் இத்தகைய சூழலை சிறப்பாக எதிர்கொண்டு துரிதமாக ரன் எடுக்க முடிந்தது போல் இந்த முறையும் எடுக்க முடியும். இந்த டெஸ்ட் 5-வது நாளுக்கோ அல்லது கடந்த ஆண்டை போல 4-வது நாளின் கடைசி பகுதிக்கோ செல்லும் என்று நம்புகிறேன். போக போக ஆடுகளத்தில் விரிசல் ஏற்பட்டால், ஆட்டத்தின் போக்கை மாற்றும்' என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வெறும் 89 ரன்னில் சுருண்டது. அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் 'பவுன்ஸ்' பந்துகளில் உடலில் அடிவாங்கினர். குறிப்பாக லபுஸ்சேன் எனது வாழ்க்கையில் விளையாடிய கடினமான பிட்ச் இது தான் என்று அப்போது குறிப்பிட்டார்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கே ஆடுகளம் ஒத்துழைக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் தெளிவுப்படுத்திய நிலையில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலன்ட் ஆகியோரும் யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்.
- கோலி அமைதியுடனும், கவனத்துடனும் விளையாடுவது மிகவும் முக்கியம்.
- ஆஸ்திரேலிய தொடரில் கோலி தனது பார்மை மீண்டும் பெறுவார் என்று நம்புகிறேன்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சொந்த மண்ணில் இழந்தது. இதனால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. இத்தொடரில் விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை.
இந்த நிலையில் கோலிக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கோலி தனது கோட்டையான ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கிங் எனும் பட்டத்தை நீங்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி எதிரணியிடம் பெற்றுள்ளீர்கள். எனவே கோலி பேட்டிங் செய்ய செல்லும் போது அது எதிரணியின் மனதில் இருக்கும்.
இந்த தொடரின் முதல் 3 இன்னிங்சில் முதல் ஒரு மணி நேரம் கோலி அமைதியுடனும், கவனத்துடனும் விளையாடுவது மிகவும் முக்கியம். அந்த நேரங்களில் நீங்கள் வேகமாக இல்லாமல் பொறுமையுடன் நிதானமாக உங்களுடைய சொந்த வேகத்தில் விளையாடினால் அனைத்தும் சரியாகி விடும். ஆஸ்திரேலிய தொடரில் கோலி தனது பார்மை மீண்டும் பெறுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும் போது, ரோகித் சர்மாவின் இயல்பான தாக்குதல் பாணி, சக்திவாய்ந்ததாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
போட்டியின் முதல் சில ஓவர்களில் ரோகித் சர்மாவின் கால் அசைவதில்லை. அதனால் அவர் சிக்கலில் சிக்குகிறார். அவர் ஷாட் தேர்வை சரியாக எடுக்க வேண்டும். இது ரோகித் சர்மாவுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பேட்ஸ்மேன்களுக்கும் பொருந்தும்.
ரோகித் சர்மா தனது இன்னிங்சின் தொடக்கத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் அவரால் இந்தியாவுக்குத் தேவையான ரன்களை எடுக்க முடியும் என்றார்.
- பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
- இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெர்த்:
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயத்தை சந்தித்து வருவதை அடுத்து இளம் வீரர்களான சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.