search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா வேன் விபத்து"

    • சுற்றுலா வேன் அல்க்நந்தா ஆற்றுப்பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.

    அலக்நந்தா ஆற்றுப்பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    • ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    இதனிடையே, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ருத்ரபிரயாக் சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த பயணிகள் விமானம் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர்.

    கொடைக்கானல்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மதுரை-ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு கொடைக்கானல் வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி பழனி மலைச்சாலை வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. 5-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி 21 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஏற்காட்டில் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள், இரவு 7 மணி அளவில் ஊர் திரும்பினர்.
    • வேனில் பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடி மலைப்பாதையில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

    ஏற்காடு:

    தர்மபுரி மாவட்டம் அரூர் மருதிப்பட்டி பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் ஆதிதிராவிட அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ்-2 படிக்கும் 75 மாணவ, மாணவிகள், 9 ஆசிரியர்கள் நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டை சுற்றிப் பார்க்க 3 வேன்களில் வந்துள்ளனர்.

    ஏற்காட்டில் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள், இரவு 7 மணி அளவில் ஊர் திரும்பினர். இந்த நிலையில் ஏற்காடு, கொட்டச்சேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு வேனில் பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்து ஓடி மலைப்பாதையில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆசிரியர் தண்டபாணி (வயது45) கால், தோள்பட்டை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன், நாகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

    விபத்துக்குள்ளான வேனில் மாணவிகள் மட்டுமே பயணித்தனர். இதில் பிளஸ்-2 மாணவி சவுபுராணி (வயது 17) மற்றும் ஓட்டுனர் சசிகுமார் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மாணவிகள் யாழினி, பரிமளா, ஸ்ரீநிதி, உத்ரா, தர்ஷினி ஆகியோர் லேசான காயங்களுடன் முதலுதவி செய்யப்பட்ட வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடம் விசாரித்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    ×