search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழவேற்காடு கடற்கரை"

    • வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது.
    • 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன.

    பொன்னேரி:

    பழவேற்காட்டில் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை கடற்கரையில் வைத்து செல்வது வழக்கம்.

    அரங்ககுப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் படகில் சென்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது மீன்பிடி வலைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கிருந்த மீன்பிடி வலைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மீனவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வலைகள் முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வலைகள் எப்படி தீப்பிடித்தது என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் யாரேனும் வலைகளுக்கு தீவைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்து நாசமான வலைகளின் சேதமதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வலைகள் எரிந்துள்ளன. பழவேற்காடு திருமலை நகர், கோட்டை குப்பம் பகுதியில் கடந்த மாதத்தில் மீன்பிடி வலைகள் எரிந்ததாகவும் இது குறித்து மீன்வளத்துறை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் பழவேற்காடு பகுதியில் மர்ம நபர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் மீன்பிடி வலைகளை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையின் போது எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரிலும், மழை வெள்ளத்திலும் கலந்ததால் எண்ணூர், மணலி திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூரில் இருந்து 26 கி.மீ.தொலைவில் உள்ள பறவைகள் சரணாலயமான பழவேற்காடு ஏரியிலும் பரவியுள்ளன.

    இதனால் பழவேற்காடு ஏரி அருகே உள்ள பல கடற்கரை கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தார் உருண்டைகள் கரை ஒதுங்கி வருகின்றன. கடற்கரை பகுதியில் கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பழவேற்காடு அருகேயுள்ள கோரைக் குப்பம், வைரவன் குப்பம், அரங்கக் குப்பம், கூனங் குப்பம், பழைய சாத்தங்குப்பம் மற்றும் பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதிகளிலும் தார் உருண்டைகள் காணப்படுகின்றன. இந்த தார் உருண்டைகள் அதிக அளவில் உள்ளன. மேலும் பழவேற்காடு ஏரிப்பகுதியிலும் சில இடங்களில் எண்ணெய் கழிவுகள் மிதந்துள்ளன.

    இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் தார் உருண்டைகளையும் சோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் முடிவு இன்று வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படு கிறது. மேலும் அதிகாரிகளும் இந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.

    மேலும் பழவேற்காடு ஏரியில் உள்ள பறவைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சென்றுவிட்டன. மேலும் இந்த பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்துள்ளன.

    இதுகுறித்து மீனவர் சங்கத்தினர் கூறுகையில், 'பழவேற்காடு ஏரிக்கு நீர் வருவதை கண்காணித்து எண்ணெய் பரவாமல் தடுக்க வேண்டும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரி தூர்ந்து வருகிறது. எனவே ஏரியை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    • ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.
    • எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை நேற்று (சனிக்கிழமை) மாலை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

    அதில் தன்னார்வலர்கள் மற்றும் செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    அப்போது ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு 9,300 பனை விதைகளை நடவு செய்தனர். இதனை செயல்படுத்திட எவ்வளவு நேரம் செலவாகிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த ஒத்திகை நடைபெற்றது.

    மேலும் ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரம் இருக்க வேண்டும் பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும் விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் போன்ற அனைத்து செய்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டன.

    இதனை பின்பற்றியே, ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடபட்டுள்ளது.

    ஒத்திகை நிகழ்ச்சியை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணனின் மகனும், பனை ஆர்வலருமான கார்த்திக் நாராயணன் தலைமை தாங்கி விதை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கிரீன்நீடா அமைப்பினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ வேலு, இணை ஒருங்கிணைப்பாளர் ரபிக் முகமது, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் மற்றும் பனை வாரிய அலுவலர்கள் குமரன், ஜெபராஜ் டேவிட், தன்னார்வலர் பொன்னேரி பாலகிருஷ்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், முகப்பேர் ராஜ்குமார், மதுரவாயல் அலெக்ஸ் , ஆர்.கே நகர் ராஜேஷ், பழவேற்காடு சுரேஷ்குமார், மகளிர் ஆர்வலர்கள் ஆனந்தி, விஜயலட்சுமி, முருகேஸ்வரி,சிவசாந்தி, ராஜ புஷ்பம், சாந்தி, கவுசல்யா உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
    • பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பைகளாக காட்சி அளிக்கிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு கடற்கரை சுற்றுலா தளமாக விளங்குகிறது. தினமும் காலை, மாலை நேரத்தில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம். சுற்றுலா வருபவர்கள் தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்கள், பிளாஸ்டிக் கவர்கள் தண்ணீர் பாடல்களை கடற்கரை மணலிலேயே ஆங்காங்கே போட்டு விட்டு செல்கிறார்கள்.

    இதனால் பழவேற்காடு கடற்கரை மணற்பகுதி குப்பைகளாக காட்சி அளிக்கிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து கடலில் விழுவதால் கடல் நீரும் மாசு அடைகிறது.

    பழவேற்காடு கடற்கரை மணற்பகுதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி வருவாய்த்துறையின் சார்பில் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை தாங்கினார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவுரான் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தினர்.

    ×