என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில இளைஞர்"

    • ஐந்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி சட்டையை கிழித்ததோடு அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டனர்.
    • ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்ட வடமாநில இளைஞர்கள் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    கரூர்:

    தமிழகத்தின் தொழில் நகரமாக திகழும் கரூர் மாவட்டத்தில் பஸ் பாடி கட்டுதல், கொசுவலை தயாரித்தல், ஆயத்த ஆடைகள் உற்பத்தி என அனைத்து தொழில் நிறுவனங்களிலும் வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் நகரின் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

    இதற்கிடையே கரூர் அருகேயுள்ள புலியூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கரூர் மாநகர பேருந்து நிலையத்தில் பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகள் குறித்த தகவல் தெரிவிக்கும் டைம் கேன்வாசராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவில் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தின் இருக்கையில் இடம் பிடித்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த வட மாநில இளைஞர்கள் நீங்கள் இடம் பிடித்த இடத்தில் நாங்கள்தான் அமருவோம் என்று கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றியதால் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய செல்வராஜ் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளார்.

    அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் அவரை சரமாரியாக கைகளால் தாக்கி சட்டையை கிழித்ததோடு அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டனர். இதைப்பார்த்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை துரத்தி பிடித்தனர்.

    அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வடமாநில இளைஞர்களை அடித்துள்ளனர். அப்போது ரோந்து போலீசார் அங்கு வருவதைக் கண்ட வடமாநில இளைஞர்கள் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    தாக்குதலில் காயம் அடைந்த செல்வராஜ் கூறுகையில், தனது பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்ற வட மாநிலத்தவர்கள், தனது கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் கழட்ட முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    கரூர் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நடந்த அந்த நிகழ்வு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.
    • 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள பூவைத்தேடி பேருந்துநிலையம் வடக்கு புறம் அருகே உள்ள ஆறுமுகம் என்பவர் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த கோழிக்கடையில் சிசிடிவி காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத போது கடையின் பூட்டை உடைத்து கொண்டு மர்மநபர் ஒருவர் உள்ளே சென்று அங்குள்ள கல்லாப்பெட்டியை எடுக்க முயன்றுள்ளார்.

    இதை வீட்டில் இருந்த படி கோழிக்கடையின் உரிமையாளர் ஆறுமுகம் சி.சி.டிவி கேமராவில் பார்த்துள்ளார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்களை கடையில் போய் பார்க்க கூறியுள்ளார்.

    அவர்கள் வந்து பார்த்தபோது வடமாநில இளைஞர் ஒருவர் கோழிக்கடையில் உள்ளே நின்றது தெரிய வந்தது.

    உடனே பொதுமக்கள் அவரை பிடித்து அருகில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்து, கீழையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் காவல்துறையினர் அவரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்பவன் என்பதும் சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் இவருடன் 5 பேர் வந்ததாகவும், அதில் 4 பேர் தப்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.
    • வடமாநில வாலிபர்களிடம் போலீசார் சோதனை

    கோவை:

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர கேரள மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயில்களும் கோவை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் இன்று மதியம் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று, பீகாரில் இருந்த வந்த ரெயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அந்த ரெயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டி மற்றும் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 வடமாநில வாலிபர்களையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் போதை பொருட்களை கடத்தி வந்தனரா? அல்லது வேறு யாராவது கடத்தி இதில் வைத்தனரா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×