என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் தாக்குதல்"

    • கான் யூனிஸ், ரஃபாவில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
    • மத்திய காசாவில் 10 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

    நுசெய்ரத் மற்றும் ஜவைடா ஆகிய இரண்டு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

    கடந்த வாரம் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணுவ தலைவர் முகமது தெய்ஃப்-ஐ குறிவைத்து தாக்குதல் நடத்தியில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பின்னரும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பரிந்துரையை வழங்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. காசா மீதான கொடூர தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவும், ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ள 120 பிணைக்கைதிகளை விடுவிக்கவும் சர்வதேச மத்தஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த தாக்குதல் மக்கள் வசித்து வந்த நான்கு வீடுகள் மீது நடத்தப்பட்டதாக அவசர பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய காசாவில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு விரிவாக இந்த தாக்குதல் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    தெற்கு காசாவில் திங்கட்கிழமை (நேற்று) இரவு இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

    • ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்தது.
    • இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் கூறியுள்ளது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு லெபானானில் ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. தெற்கு லெபனானில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது

    இதையடுத்து லெபனானில் 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்தது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மூடப்படுகின்றன.

    இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதிக்கு மேலும் படைகளை அனுப்ப உள்ளோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பென்டகன் அதிகாரி பாட் ரைடர் கூறுகையில், மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தாலும், மிகுந்த எச்சரிக்கை காரணமாகவும், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் நமது படைகளை அதிகரிக்க சிறிய எண்ணிக்கையிலான கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அதுதொடர்பான விவரங்களை வெளியிடவில்லை என தெரிவித்தார்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள்.
    • இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர்.

    பெய்ரூட்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு-இஸ்ரேல் இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இதற்கிடையே இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இடையே பெரிய அளவில் மோதல் வெடித்துள்ளது.

    சமீபத்தில் லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய பேஜர்கள், வாக்கி-டாக்கிகள் வெடித்து சிதறியதில் 39 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக கூறிய ஹிஸ்புல்லா, அந்நாடு மீது ஏவுகணைகளை வீசியது. இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய தளபதி உள்பட 40 பலியானார்கள். இதனால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியது.

    இந்த தாக்குதலை ஒடுக்கும் விதமாக நேற்று லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி கடுமையான தாக்குதலை நடத்தியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் உள்ள பகுதிகளில் தீவிர வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.

    தலைநகர் பெய்ரூட், தெற்கு லெபனான் உள் ளிட்ட பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 274 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

    ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் செயல்பாட்டை முற்றிலும் ஒடுக்கும் விதமாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இந்த நிலையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. 35 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,645 பேர் காயமடைந்து உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறும்போது, லெபனான் மக்களுக்கு நான் செய்தி ஒன்றை சொல்கிறேன். இஸ்ரேலின் போர் உங்களுடன் இல்லை, அது ஹிஸ்புல்லாவுடனான போர். நீண்ட காலமாக, ஹிஸ்புல்லா உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது.

    உங்கள் வீட்டு அறைகளில் ராக்கெட்டுகளையும் ஏவுகணைகளையும் பதுக்கி வைத்துள்ளது. அந்த ஏவுகணைகள் எங்களது நகரங்களை குறிவைக்கின்றன. எங்களது மக்களை ஹிஸ்புல்லா தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்க அந்த ஆயுதங்களை நாங்கள் அழிக்க வேண்டும்.

    லெபனானியர்கள் ஹிஸ்புல்லாவின் நோக்கத்திற்காக தங்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது. தயவு செய்து, இப்போது ஆபத்து வழியிலிருந்து வெளியேறுங்கள். எங்கள் செயல்பாடு முடிந்ததும், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம். நாங்கள் போர்களைத் தேடவில்லை. அச்சுறுத்தல்களை களையப் பார்க்கிறோம் என்றார்.

    இதற்கிடையே இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 200 ஏவுகணைகளை வீசினர். இதை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.

    • ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
    • இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.

    ஜெருசலேம்:

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் படுகாயம் அடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர்.

    தொடர்ந்து, லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரே வாரத்தில் லெபனானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். போர் பதற்றம் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

    இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

    இந்நிலையில், லெபனான் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மற்றொரு உயர்மட்ட தலைவரான நபில் கவுக் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் முக்கிய தலைவர்களை இழந்து வருவது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது.
    • அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்

    'தற்காலிக' போர் நிறுத்தம்

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் இடிபாடுகளால் சூழப்பட்ட காசாவுக்கு திரும்பிய லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடத்தையும் வாழ்க்கையும் மீண்டும் கட்டமைக்க போராடி வருகின்றனர்.

     

    இடிபாடுகளுக்கிடையில் வடக்கு காசா

    ஐநா கூற்றுப்படி, காசாவில் ஒரு மாதமாக நீடிக்கும் போர் நிறுத்தத்தின் கீழ் கிட்டத்தட்ட 600,000 பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிற்குள் மீண்டும் வந்தனர்.

    அவர்களின் ஒரு குடும்பம் ராவ்யா தம்பூராவினுடையது. தனது இளம் மகன்களுடன் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் குவிந்த இடிபாடுகளுக்கிடையில் வாழ்ந்து வருகிறார்.

    16 மாத காலப் போருக்கு பிறகு தம்பூரா தனது இடிபாடுடைய வீட்டுக்கு திரும்பி வந்தார். குழாய் நீர், மின்சாரம் என அத்தியாவசிய வசதிகள் இல்லாமல், சுற்றியுள்ள இடிபாடுகளை அகற்ற எந்த கருவிகளும் இல்லாமல் அவர்கள் திகைத்து நிற்கின்றனர்.

    இதுவே அங்கு திரும்பி வந்த 600,000 சொச்சம் மக்களின் சிரமமும் ஆகும். மறுகட்டமைப்பு வேலையைத் தொடங்க வழி இல்லை. இடிபாடுகளுக்கிடையில் என்றென்றும் வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    "சிலர் போர் ஒருபோதும் முடிவடையாமல் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கொல்லப்படுவது நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்கள்," என்று தம்பூரா கூறுகிறார். "நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. என் மூளை எதிர்காலத்திற்கான திட்டமிடலை நிறுத்தியது" என்று அவர் கூறுகிறார்.

     

    எதிர்காலம் என்ன?

    ஆறு வார போர்நிறுத்தம் வரும் சனிக்கிழமை முடிவடைய உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடையும் போது அமைதி நீடிக்க உத்தரவாதம் இல்லை. மீண்டும் சண்டை வெடித்தால், வடக்கு காசாவுக்கு திரும்பியவர்கள் நிலை மீண்டும் முன்போலவே நரகமாக மாறும்.

    உலக வங்கி, ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல்களால் முழு இடமும் அழிந்த பின்னர், காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  

     ஐ.நா.வின் கூற்றுப்படி, போர் நிறுத்தத்துக்குப் பின், மனிதாபிமான உதவி அமைப்புகள் பணிகளை முடுக்கிவிட்டன. இலவச சமையலறைகள் மற்றும் நீர் விநியோக நிலையங்களை அமைத்தல் மற்றும் காசா முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள் விநியோகித்தல் ஆகியவை முழு வீச்சில் நடந்தன.

    காசா நகராட்சி நீர் குழாய்களை சரிசெய்யவும், தெருக்களில் இருந்து இடிபாடுகளை அகற்றவும் தொடங்கியது. ஆனால் அதை முழு வீச்சில் செய்ய கனரக உபகரணங்கள் இல்லை. நகராட்சியின் 40 புல்டோசர்கள் மற்றும் ஐந்து டம்ப் லாரிகளில் சில மட்டுமே இன்னும் வேலை செய்கின்றன என்று செய்தித் தொடர்பாளர் அசெம் அல்னாபிஹ் கூறுகிறார்.

    காசா 50 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கட்டட இடிபாடுகளால் நிரம்பியுள்ளது. 100 லாரிகள் 15 ஆண்டுகள் முழு திறனில் இயங்கினால் மட்டுமே அதை அகற்ற சாத்தியப்படும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது.

    அழிக்கப்படும் அடையாளம்

    காசா குடும்பங்கள் ஒவ்வொரு நாளாக வாழ்க்கையை கடந்த முயற்சிக்கின்றன. 25 வயதான பல் மருத்துவர் அஸ்மா த்வைமாவும் அவரது குடும்பத்தினரும் காசா நகரத்திற்குத் திரும்பிய மற்றொரு குடும்பம். டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள அவர்களின் வீடு அழிக்கப்பட்டது .

    திரும்பி வந்த சில வாரங்களுக்குப் பிறகு, இப்போது தட்டையான மற்றும் எரிந்த இடிபாடுகளின் குவியல் போல இருக்கும் அவர்களின் நான்கு மாடி வீட்டைப் பார்த்து அவர் பெருமூச்செறிகிறார்.

    இஸ்ரேல் மக்களை மட்டும் கொள்ளவில்லை. வீடு, நகரம் என்ற அவர்களுக்கு நெருக்கமானவற்றை அளிப்பதன் மூலம் அந்நகருடனான அவர்களது அடையாளத்தை அளிக்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.

    "நான் பயந்ததால் இங்கு வர முடியவில்லை. என் மனதில் என் வீட்டில் அழகு மற்றும் அரவணைப்பு இருந்தது. ஆனால் இப்போது அது இல்லை என்ற இந்த உண்மையை எதிர்கொள்ள நான் பயந்தேன். அவர்கள் கட்டடங்களை மட்டும் அழிப்பதில்லை, அவர்கள் எங்களையும் எங்கள் அடையாளத்தையும் அழிக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். 

     

    ×