என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏடிஎம் பணம்"

    • ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு 100 ரூபாய் நோட்டு, இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் என ரூ.3,500-க்கு பதில் ரூ.3,140 மட்டுமே வந்துள்ளது.
    • ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார்.

    அப்போது ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு 100 ரூபாய் நோட்டு, இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் என ரூ.3,500-க்கு பதில் ரூ.3,140 மட்டுமே வந்துள்ளது.

    ரூ.200 நோட்டுகளுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டுகள் வந்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அய்யப்பன் இது தொடர்பாக புகார் செய்ய முயன்ற போது, அந்த மையத்தில் எவ்வித தொடர்பு எண்ணும் இல்லை என்பதால், அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யப்பனிடம், 20 ரூபாய் நோட்டு ஏ.டி.எம்.டில் வர வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும், இது குறித்து மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு நடந்திருந்தால் இன்னும் 3 நாட்களுக்குள் உங்களது வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

    • சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன.
    • உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

    புதுடெல்லி:

    கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி, ஒருவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்தது. பத்திரிகையில் அச்செய்தியை பார்த்த அசாம் ஐகோர்ட்டு, தானாக முன்வந்து அதை வழக்காக எடுத்துக் கொண்டது. ரிசர்வ் வங்கி, சம்பந்தப்பட்ட வங்கி, மத்திய அரசு, அசாம் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    போலீஸ் டி.ஜி.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், அனைத்து வங்கி ஏ.டி.எம்.களின் பாதுகாப்புக்கு ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, அதை அமல்படுத்துமாறு மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஏ.டி.எம்.களில் வரிசையை ஒழுங்குபடுத்தவும், ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவும் ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன. அசாம் ஐகோர்ட்டு உத்தரவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வங்கிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

    அசாம் மாநிலத்தில் சுமார் 4 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்.களிலும் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிப்பது நடைமுறை சாத்தியமற்றது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசாம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தனர். ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று கூறினர்.

    • கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோபாலன் (வயது70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி தன்னுடைய சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்தை தேன்கனிக்கோட்டை ஒசூர் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கியுள்ளார்.

    ஆனால் பணம் வர வில்லை என கூறி வேறு ஒரு கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் சென்ற பின் கோபாலன் கார்டை பயன்படுத்தி ரூ.18,300 பணம் எடுத்து உள்ளார். தன்னுடைய செல்போனுக்கு தகவல் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கண்ணன், தனிபரிவு தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் ஏ.டி.எம். மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தை வைத்து தேடி வந்தனர்.

    தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பகுதியில் இதே போல் புகார்கள் வந்து உள்ளது. இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தேன்கனிக்கோட்டை-ஒசூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

    அப்போது அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பதும், 10-ம் வகுப்பு படித்து விட்டு, ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 20 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இது குறித்து தேனிகனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் ஸ்ரீதர் கடந்த 1 வருடங்களாக பணம் எடுக்க வரும் வயதான நபர்களை குறி வைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து தன்னிடம் உள்ள போலி ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் நுழைத்து அவர்கள் கூறும் பாஸ் வேர்டை அடித்து பணம் வரவில்லை என கூறி அனுப்பி விட்டு, பின்னர் அவர்கள் கொடுத்த அசல் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து திருடியதாகவும், மேலும் திருடிய பணத்தை சூதாடியும், ஒரு மோட்டர் சைக்கிளையும் வாங்கியதாக ஸ்ரீதர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் ஸ்ரீதர் இது போன்று பலரிடம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளாரா?

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×