search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women’s Day"

    • தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடந்தது.
    • பெண்கள் தலைமையிலான புராதான பொதுவுடைமை சமுதாயம் தான் முதலில் தோன்றியது.

    தஞ்சாவூர்:

    இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

    கருத்தரங்கத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மாவதி சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தஞ்சை மாநகர செயலாளர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி பேசும்போது,

    மனித குலத்தில் முதன் முதலாக சமூகம் உருவானபோது பெண்கள் தலைமையிலான புராதான பொதுவுடைமை சமுதாயம் தான் முதலில் தோன்றியது.

    மனித குல வரலாற்றில் மனித கூட்டத்தை தலைமை யேற்று வழி நடத்தியவர்கள் பெண்கள் தான்.

    இத்தகைய பொதுவுடமை அரசை வழி நடத்தியவர்கள் பெண்கள் தான் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பெண்கள் தன்னிறைவு பெறுவது என்பது கல்வி பயில்வதனால் மட்டுமே முடியும்.

    ஆகவே பெண்கள் கல்வி மிக, மிக முக்கியமானது. ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வியறிவு பெறுவதற்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் . உயர் படிப்பு வரை படிப்பதற்கு உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகர செயலாளர் ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர் சிவகாசி , மல்லிகா, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ஜெனிதா, பட்டுக்கோட்டை செயலாளர்கள் ஜானகி, சகுந்தலா, சேதுபாவாசத்திரம் செயலாளர் கனகம், ஒரத்தநாடு செயலாளர் எலிசபெத், திருவோணம் செயலாளர் தவமணி, பேராவூரணி செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட தலைவர் தனசீலி அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.

    • வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் மகளிர் தின விழா நடந்தது.
    • விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. மகளிர் திட்ட மாவட்ட இயக்குநர் காளிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் கார்த்திக், உதவி திட்ட அலுவலர்கள் வெள்ளைபாண்டிமரியாள் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் ரம்யா வரவேற்றார். மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி,சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன்,மீனா, சூர்யா, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், வெங்கடேசுவரி, குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமுதாய ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சமூகவள பயிற்றுநர் குமாரி, செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பொறுப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் சந்தானலட்சுமி, சாந்தி, பாரதி, சசிகலா, விமலா ரேகா, தனம் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் சந்தானலட்சுமி, சாந்தி, பாரதி, சசிகலா, விமலா ரேகா, தனம் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இணை அமைப்பாளர் ஹேமலதா வரவேற்றார். மாநில செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மாநில செயலாளர் ஹேமலதா கலந்து கொண்டு சிங்க மங்கைகளே சீறி எழுக, சங்க உரிமைகளை மீட்டு பெறவே என்ற தலைப்பில் பேசினார்.

    இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மகளிர் துணைக்குழு உறுப்பினர் லதா நன்றி கூறினார்.

    • பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, பன்னாள் அரசு உயர்நிலைப்–பள்ளியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரத்திடம் படித்த முன்னாள் மாணவிகளான கருப்பம்புலம் அரசு மருத்துவமனை மருத்துவர் நிலவழகி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா, வேதாரண்யம் இந்தியன் வங்கி அலுவலர் ஜெயந்தி, ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரம், ஆசிரியர்கள் யூடஸ்சுகிலா, தேன்மொழி ராதிகா, வைதேகி சுப்ரமணியன், தர்மதுரை மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முடிவில் இளநிலை உதவியாளர் பிரதீபா நன்றி கூறினார்.

    • மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள் கொண்டாடினர்.
    • இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.

    மதுரை

    தென் தமிழகத்தில் மிகப்பெரிய ஜெயில்களில் ஒன்று மதுரை மத்திய ஜெயில் ஆகும். இங்கு 1,850 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பெண் கைதிகள் தனி சிறையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிறையில் இருக்கும் போது பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

    அதில் உணவு தயாரிப்பது, தையல், தறி நெய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். பெண் கைதிகள் தயாரிப்பில் நெய்யப்படும் சுங்கடி சேலைகள் ஜெயில் பஜார் அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மதுரை ஜெயிலில் மகளிர் தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பெண் கைதிகள் ரசித்து பார்த்தனர்.

    இந்த விழாவில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன், ஜெயிலர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரி பழனிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    ×