என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்க்கப்பல்"

    • அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.
    • போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளி துறைமுகத்தில், 'எல் அண்டு டி' கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. கப்பல் பழுது பார்க்கும் மையமும் உள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 'சார்லஸ் ட்ரூ' என்ற ராணுவ தளவாட கப்பல் பழுது மற்றும் பராமரிப்புக்காக, முதன்முறையாக இந்தியாவுக்கு வந்தது. அந்த கப்பலுக்கு காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பழுது நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    அதன் பழுதுகளை சரி செய்யமுதன் முறையாக அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ராணுவ தளவாட கப்பல் இந்தியாவில் பழுது பார்க்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு நேற்று மாலை 5 மணியளவில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மேத்யூபெர்ரி என்ற போர்க் கப்பல் பழுது பார்ப்பதற்காக வந்தது.

    அதில் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும் அந்த போர்க்கப்பல் வருகிற 29-ந் தேதி புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு 2-வது முறையாக அமெரிக்க போர்க்கப்பல் பழுது நீக்க வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி பாராட்டி உள்ளார்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார்.

    புதுடெல்லி:

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இது வரலாற்று மைல்கல் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு அரபிக்கடலில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சவாலான விஷயம், இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மன உறுதி, திறமையை நிரூபித்திருப்பதாக கடற்படை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக்-29கே விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இது தன்னம்பிக்கையை நோக்கிய கடற்படையின் உத்வேகத்தை குறிக்கிறது, என்றார்.

    இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

    விக்ராந்த் கப்பலில் போர் விமானம் தரையிறங்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல்களை தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகளின் உயரடுக்கு குழுவில் இந்தியாவும் இணைந்தது.

    • சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.
    • நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

    தைபே நகரம்:

    சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக அதனை தன்னுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது. இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி சீனா போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக தைவானும் கூறி உள்ளது.

    இந்தநிலையில் தைவானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் விழா அங்குள்ள காஹ்சியுங் நகரில் நடைபெற்றது. இதில் அதிபர் சாய்-இங்-வென் கலந்து கொண்டு பேசுகையில், தைவான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என கூறினார்.

    இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • தண்ணீர் வறண்டதால் ஆற்றின் ஒருசில பகுதிகள் மணல் மேடுகளாக காட்சியளித்து வருகிறது.
    • ஹங்கேரியின் மொன்சாஸ் நகர் அருகே டனுபே ஆற்றிலும் போர்க்கப்பல்களின் சிதைவுகள் தென்பட்டன.

    பெல்கிரேடு:

    ஐரோப்பா கண்டத்தின் 2-வது பெரிய ஆறு டனுபே. ஜெர்மனியில் உற்பத்தியாகி 10 நாடுகளில் 3 ஆயிரம் கி.மீ. தூரத்தை கடந்து ருமேனியா அருகே கருங்கடலில் கலக்கிறது.

    ஆஸ்திரியா, சுலோவோகியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளின் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக டனுபே விளங்குகிறது. இந்த ஆற்றில் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மீன்பிடி தொழில், சுற்றுலா போக்குவரத்து ஆகியவற்றிற்கு ஆதாரமாக விளங்கி பல்வேறு நாட்டு பொதுமக்களுக்கு பயனளிக்கிறது.

    இந்தநிலையில் ஐரோப்பாவில் கோடை காலம் முடிந்து இலையுதிர் காலம் தொடங்கி உள்ளது. இருப்பினும் அங்குள்ள பல்வேறு நாடுகளில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மழை பொழிவு இல்லாத வறண்ட வானிலை நிலவுவதால் செர்பியா நாட்டின் குறுக்கே ஓடும் டனுபே ஆற்றில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. செர்பியாவின் பிரோவோ நகர் அருகே டனுபே ஆற்றையொட்டி வாழும் மக்கள் வாழ்க்கை ஆதாரங்களுக்கும் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே தண்ணீர் வறண்டதால் ஆற்றின் ஒருசில பகுதிகள் மணல் மேடுகளாக காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில் செர்பியாவில் பிரோவோ நகர் அருகே வற்றிய டனுபே ஆற்றின் நடுவே போர்க்கப்பல் ஒன்று தென்பட்டது.

    மேலும் ஹங்கேரியின் மொன்சாஸ் நகர் அருகே டனுபே ஆற்றிலும் போர்க்கப்பல்களின் சிதைவுகள் தென்பட்டன. இவை 2-ம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படையினரால் பயன்படுத்தப்பட்டவை என்றும், ரஷிய படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கப்பல்களை வெடிக்க செய்துவிட்டு அவர்கள் தப்பியதாக வரலாற்று ஆய்வாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

    • மீண்டும் பணி விறுவிறுப்பாக நடந்து போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டது.
    • ஐ.என்.எஸ். துஷில் என்பது கிர்விக் போர்க்கப்பலின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டதாகும்.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை ரஷியாவிடம் இருந்து தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

    அதன்படி கடந்த 2018-ம் ஆண்டில் ரஷியாவின் கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் போர்க்கப்பல்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த போர்க் கப்பல்கள் 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ரஷியா- உக்ரைன் போர் மற்றும் கொரோனா தொற்று காரணமாக போர்க் கப்பல்கள் தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் மீண்டும் பணி விறுவிறுப்பாக நடந்து போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டது. இதில் ஐ.என்.எஸ். துஷில் எனப்படும் போர்க் கப்பல் தயாரிக்கப்பட்டு அதன் வெள்ளோட்டம் நிறைவு செய்யப்பட்ட நிலையில் வருகிற 9-ந்தேதி முதல் ஐ.என்.எஸ். துஷில் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாவலர் என்று அர்த்தம்.

    ரஷியாவில் கலினின் கிராட்டில் வருகிற 9-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் இரு நாட்டு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஐ.என்.எஸ். துஷில் என்பது கிர்விக் போர்க்கப்பலின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டதாகும். இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட தல்வார் மற்றும் தேக் போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் பயன் பாட்டில் உள்ளன.

    இந்த போர்க்கப்பல் 125 மீட்டர் நீளமும், 3,900 டன் எடையும் கொண்டது. இது இந்திய மற்றும் ரஷிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கிறது. எதிரிகளின் ரேடாரில் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. கடலில் நிலவும் எந்த சூழ்நிலையையும் இந்த கப்பல் சமாளிக்கும்.

    இந்த கப்பலில் 26 சதவீதம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திலும், 33 சதவீத அமைப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. இந்திய நிறுவனங்களான பிரமோஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் நோவா இன்டர்கிரேடட் சிஸ்டம்ஸ் ஆகியவை இந்த கப்பலின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன.

    ஐ.என்.எஸ். துஷில் செயல்பாட்டுக்கு வந்ததும் மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் மேற்கு கடற்படையின் ஒரு பகுதியாக மாறும். இது கடற்படையின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதோடு இந்தியாவிற்கும், ரஷியாவுக்கும் இடையிலேயான மூலோபாய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
    • மகாயுதி கூட்டணியை சேர்ந்த 230 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. டிசம்பர் மாதம் நடந்த மகாயுதி கூட்டணி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் இன்று (புதன்கிழமை) மும்பை வருகிறார். அவர் மும்பை கடற்படை டாக்யார்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்ஸ்ரீ போர்கப்பலை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

    இதேபோல மாலை 3.30 மணிக்கு நவிமும்பை, கார்கர் பகுதியில் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.

    இதற்கிடையே அவர் மதியம் 12 மணியளவில் மும்பையில் மகாயுதி கூட்டணியை சேர்ந்த 230 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி தலைமை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மும்பையை விட்டு வெளியே செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. உயர்மட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், "ஜனவரி 15-ந் தேதி மும்பை வரும் பிரதமர் மோடி மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளார். மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை ஒட்டுமொத்தமாக பிரதமர் சந்தித்து பேச உள்ளது இதுவே முதல் முறை." என்றார்.

    பிரதமர் மோடி எம்.பி.க்களை சந்தித்து பேசி உள்ளார். இதேபோல தேசிய தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து பேசி உள்ளார். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பா.ஜ.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ×