என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவெண்காடு"

    • காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான கோவில்.
    • தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான திருக்கோவிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு இங்கு சிவன் அகோரமூா்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். மேலும், நவ கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா, கடந்த வாரம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், பிரம்ம வித்யாம்பிகை உடனான ஸ்வேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்–செல்வம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு. குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மூன்று தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வருகின்ற மார்ச் 15-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
    • 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரணேஸ்வரர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 11வது தலமாகும்.

    காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.

    21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

    பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.

    குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.

    மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.

    பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

    இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

    மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    • நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
    • பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.

    இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.

    நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.

    51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

    சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

    இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

    இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவியாக பிரம்ம வித்யாம்பிகை திகழ்கிறார்.

    திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள்.

    மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார்.

    பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

    நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம்.

    கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.

    பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

    • ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.
    • சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.

    அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.

    அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    • பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    திருவெண்காடு:

    திருவெண்காடு அருகே நாங்கூர் கீழச்சாலையில் மாதவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான கருட சேவை நடந்தது.

    இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோவில் ஆதீன கர்த்தர் சீனிவாசா பட்டாச்சாரியார், அடியார்கள் திருகூட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவெண்காடு, காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவதாக உள்ளது.
    • இதற்கு ஆதி சிதம்பரம் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

    திருவெண்காடு, காவிரி வடகரைத் தலங்களில் பதினொன்றாவதாக உள்ளது.

    இதற்கு ஆதி சிதம்பரம் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

    இறைவன் திருவெண்காட்டீசர் சுவேதாரண்யேசர். இறைவி வேயன்ன தோளி நாச்சியார் பிரம வித்யா நாயகி.

    இறைவன் மூன்று திருநாமங்களில் இங்கே அருள் வழங்குகிறார்.

    சுவேதாரண்யேசர், நடராஜர், அகோரமூர்த்தி.

    இத்தலத்தில் தீர்த்தங்கள் மூன்று சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்.

    இத்தீர்த்தங்களில் நீராடி வழிபட்டால் பிள்ளைப் பேற்றை அடையலாம். தீவினைகள் தீர்ந்து விடும்.

    பிர்ம வித்யாம்பிகை, மேற்கு நோக்கிய துர்க்கை, சுவேத மாகாளி ஆகிய மூன்று சக்திகள் கொண்டது இத்தலம்.

    இத்தலத்தின் தல விருட்சங்கள் மூன்று வில்வமரம், வடவால மரம், கொன்றை மரம்.

    சிதம்பரத்தில் இருப்பதைப் போலவே இங்கே நடராஜர் பெருமையுடன் விளங்குகிறார்.

    அங்கே நடைபெறுவது போலவே இப்பெருமானுக்கும் ஆறு அபிஷேகங்களும், ஆனித் திருமஞ்சனம்,

    மார்கழித் திருவிழா முதலியவையும் நடைபெறுகின்றன.

    இத்தலத்தின் விநாயகர் பெரிய பிள்ளையார்.

    • இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.
    • இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது.

    உலகத்திலுள்ள உயிர்கள் தம்மை வழிபட்டு உய்யும் பொருட்டு இறைவன் திருமேனி தாங்கித் திருக்கோவில் கொண்டு

    எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன.

    அவற்றுள் திருப்பதிகம் பெற்றவை மிகச் சிறந்தவை.

    அவைகளைப் பாடல் பெற்ற பதிகள் என சொல்வார்கள்.

    சோழ நாடு, ஈழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கொங்கு நாடு, நடு நாடு, தொண்டை நாடு,

    துளுவ நாடு, வடநாடு என நாட்டு வகையாக அத்தலங்களை நம் முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர்.

    அதிலும் சோழ நாட்டை இரு பகுதிகளாக வகுத்துள்ளனர்.

    அவை காவிரியாற்றுக்கு வடகரையில் 63, தென்கரையில் 127 திகழும் தலங்களாகும்.

    இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.

    இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது.

    மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.

    திருவெண்காட்டிற்கு தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் காவிரியாறும், வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் மணிகர்ணிகை என்னும் மண்ணியாறும் ஓடுகின்றன.

    திருச்சாய்காடு (சாயாவனம்), காவிரி பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம், திருவலம்புரம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருக்கலிக்காமூர் முதலிய தலங்கள் திருவெண்காட்டை சூழ்ந்துள்ளன.

    திருநாங்கூர், திருவாலி, திருநகரி என்ற வைணவப் பதிகளும் இதன் அருகே இருக்கின்றன.

    • திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது.
    • வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது.

    திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது.

    வெளியூர்களில் திருவெண்காடுக்கு செல்ல விரும்புபவர்கள் சீர்காழியை சென்றடைய

    தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பஸ், ரெயில் வசதிகள் உள்ளன.

    சீர்காழியில் பக்தர்கள் தங்கி செல்வதற்கு உரிய லாட்ஜ் வசதிகள் உள்ளன.

    அங்கு தங்குவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அருகில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது.

    அங்கு அறைகள் கிடைக்காதபட்சத்தில் மயிலாடுதுறைக்கு செல்லலாம்.

    மயிலாடுதுறையில் நிறைய லாட்ஜ் வசதிகள் இருக்கின்றன.

    உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப அங்கு தங்கும் விடுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

    மயிலாடுதுறையில் தங்குவதில் மற்றொரு பலனும் இருக்கிறது.

    அங்கிருந்து திருவெண்காடு தலத்துக்கு மட்டுமல்ல மற்ற பாடல் பெற்ற தலங்களுக்கும் மிக எளிதாக சென்று வரலாம்.

    சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் நகர்ப்பேருந்து எண்கள் 5, 5பி, 5சி.

    சீர்காழியிலிருந்து பொறையாறு செல்லும் ஒரு பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.

    மயிலாடுதுறையிலிருந்து நாங்கூர் செல்லும் பேருந்து எண். 28, மங்கைமடம் செல்லும் பேருந்து எண்.12, பெருந்தோட்டம் செல்லும் பேருந்து எண்.34 (ஆனந்த்) ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் திருவெண்காட்டின் வழியாகச் செல்கின்றன.

    நாகையிலிருந்து வருவோர் கருவி முக்கூட்டில் இறங்கி திருவெண்காட்டிற்கு வரும் பேருந்தில் வரவேண்டும்.

    பூம்புகார் மேலையூரில் இறங்குவோர் திருவெண்காடு வழியாகச் செல்லும் பேருந்துகளில் வரலாம்.

    சென்னையில் இருந்து செல்ல விரும்புபவர்கள் சீர்காழி சென்றடைய ஏராளமான அரசுப் பேருந்துகள் உள்ளது.

    சீர்காழியில் இறங்கி அங்கிருந்து வாடகை கார் பிடித்து சென்று வரலாம்.

    சென்னையில் இருந்து காரில் செல்லும் வசதி உடையவர்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் கடந்து சீர்காழியை அடையலாம்.

    காரில் செல்பவர்கள் சீர்காழி நகருக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

    நாகை காரைக்கால் பைபாஸ் சாலையில் சென்று திருவெண்காடுக்கு எளிதில் செல்லலாம்.

    பஸ்சில் செல்பவர்கள் திட்டமிட்டு பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

    சென்னையில் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டால் 11 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்து விடலாம்.

    மதியம் 1 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    அதற்குள் வழிபாடுகளை முடித்து விட்டு, மதியம் ஆலயத்தில் சற்று ஓய்வு எடுத்து விட்டு பிற்பகலில் புறப்பட்டால் இரவில் சென்னை வந்து சேர்ந்து விடலாம்.

    ஆனால் பயணத்துக்கான திட்டமிடல் சரியாக இருத்தல் வேண்டும்.

    • இத்தலத்தின் மூன்றாவது சிறந்தமூர்த்தி அகோரமூர்த்தி.
    • அந்தப் பெருங்கோபம் ஒரு வடிவம் பெற்று சிவபெருமான் முன் தோன்றியது.

    இத்தலத்தின் மூன்றாவது சிறந்தமூர்த்தி அகோரமூர்த்தி.

    அப்படிப் பெயர் வந்ததற்குக் காரணம் இதுதான்.

    மருத்துவன் என்னும் அசுரன், தேவர்களை வெறுத்தான்.

    அவர்களைக் கொடுமைப்படுத்தித் துன்புறுத்தினான்.

    தேவர்கள் அவ்வசுரனுக்குப் பயந்து, இறைவன் ஆணைப்படி திருவெண்காட்டில்

    தவசிகள் வேடம் தாங்கி மறைந்து வாழ்ந்து வந்தனர்.

    இதை அறிந்துகொண்ட அசுரன் அவர்களைத் தேடி வந்து போர் தொடுத்தான்.

    அப்போது அவனோடு போர் செய்யும்படி ரிஷபதேவரை ஏவினார் இறைவன் சுவேதாரண்யேசர்.

    போரில் மருத்துவன் தோற்று ஓடி மறைந்தான்.

    பிறகு அவன் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து ஒரு சூலாயுதம் பெற்றான்.

    இந்தத் தலத்திற்கு வந்து அந்தச் சூலாயுதத்தின் உதவியால் ரிஷப தேவரை எதிர்த்துப் போரிட்டு

    அவருடைய கொம்புகளை முறித்தான். அவருடைய காதுகளை அறுத்தான்.

    அவர் ஓடோடிச் சென்று சுவேதாரண்யப் பெருமானிடம் முறையிட்டார்.

    பெருமானுக்குக் கோபம் மூண்டது.

    அந்தப் பெருங்கோபம் ஒரு வடிவம் பெற்று சிவபெருமான் முன் தோன்றியது.

    அவர் மருத்துவாசுரனைச் சம்கரித்து வருமாறு அந்த வடிவத்தை ஏவினார்.

    அந்தக் பெருங்கோபம் தீ நாக்கு போல் சிவந்த கூந்தலுடன் அனல் கக்கும் நெற்றிக் கண்கொண்ட கோர வடிவமாகத் தோன்றியது.

    பிரகாசமான ஆபரணங்களும், கண்ட மாலையும், உடுக்கை, மணி, வாள், சூலம், மண்டையோடு, குறுந்தடி முதலியவற்றைக் கைகளில் தாங்கி அகோர வடிவமாகி, அசுரனை எதிர்க்கச் சென்றது.

    அசுரன் பயந்து நடுங்கி ஒளி உருவாகி அகோரமூர்த்தி வடிவத்துடன் ஐக்கியமாகி விட்டான்.

    அன்று முதல் தேவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அகோரமூர்த்தி, கோவிலின் நடனசபையின் வடமேற்குப் பகுதியில் எழுந்தருளி இருக்கிறார்.

    ஞாயிறு தோறும் இம்மூர்த்திக்கு இரண்டாம் காலத்தில் அபிஷேக ஆராதனை 'அகோரபூஜை'யாக நடைபெறுகிறது.

    இத்தலத்து இறைவனை ஐராவதம் என்னும் வெள்ளையானை பூசித்துப் பேறு பெற்றது.

    இத்தலத்திற்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஆறு பதிகங்கள் உள்ளன.

    • அங்கு யார் சென்றாலும் பெண்ணாக மாறி விடுவார்கள்.
    • அவள்மேல் மையல் கொண்டார் புதன்.

    இளன் என்ற ராஜகுமாரன், காட்டில் வேட்டையாடச் செல்லும்போது, அங்கு சென்றதும் பெண்ணாக மாறி விட்டான்.

    அங்கு யார் சென்றாலும் பெண்ணாக மாறி விடுவார்கள்.

    அதுசமயம் புதன் அங்கு வந்தார். பெண்ணாக மாறிய இளன், 'இளை' என்ற பெயரில் அந்தக் காட்டில் உலவி வந்தான்.

    அவள்மேல் மையல் கொண்டார் புதன்.

    அந்த இளன் என்ற ராஜகுமாரன் பெண்ணாக மாறியது பார்வதி தேவியின் சாபமே.

    புதன், இளையுடன் சேர்ந்து மகிழ்ந்து வாழ்ந்தார்.

    பெண்ணாக மாறிய இளன் வெட்கமுற்று, ஆணாக மாறுவதற்கு அம்பாளை வேண்டித்தவம் இருந்தான்.

    ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் இருக்க அம்பாள் அருள்புரிந்தாள்.

    புதனுக்கும் இளனுக்கும் 'புரூரவா' என்ற குழந்தை பிறந்தது.

    இரட்டை வாழ்வு வாழும் இளையின் நிலை மாற முனிவர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தார் புதன்.

    யாகத் தீயில் சிவபெருமான் தோன்றினார்.

    இளையின் வேண்டுகோளின்படி நிரந்தரமாகவே ஆணாக விளங்கும்படி அருள் புரிந்தார்.

    பிறகு இளனாகவே மாறித் தன் நாட்டுக்குச் சென்றான் அந்த ராஜகுமாரன்.

    சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர் புதன். சகலகலா வல்லவர்.

    மகாஞானி. சுபகிரகர். புலவர்களையும், சிவனடியார்களையும் காத்து அருள்பவர்.

    தன்னை வழிபடுகிறவர்களுக்கு மிகுதியான அறிவைக் கொடுப்பவர்.

    வாக்கு சாதுர்யம் அளிப்பவர். தீய கிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் சக்தி கொண்டவர்.

    புதன் இளம் பச்சை நிறம் உடையவர்.

    சாத்வீக குணம் கொண்டவர்.

    சுகபோஜனம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத் தொழில், வாத நோய், அலி முதலியவற்றிற்கு புதனே காரகன்.

    புதன், வித்யாகாரகர், மாதுலகாரகன், ஸெளம்யன் எனவும் அழைக்கப்படுகிறார்.

    புதன் அத்திரிகோத்திரம், மகதநாட்டினர்.

    கத்தி, கேடயம் வரதக்கரங்கள் கொண்டவர். மஞ்சள் ஆடை, மரகதமணி மாலை பூண்டவர்.

    நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில், மஞ்சள் நிறக் கொடியின் கீழ் அமர்ந்து மேருவை வலம் வருபவர்.

    திருமாலை வழிபட்டால் இவருக்கு விருப்பமாகும்.

    சூரியனுக்கு வடகிழக்கில் பாண வடிவான மண்டலத்தில் தங்கப் பிரதிமையாக வடக்கு முகமாக வீற்றிருப்பவர்.

    சூரியனிடம் பிரகாசத்தை இழுத்து, செடி கொடிகளைப் பச்சை நிறமாக்கும் தன்மை உடையவர்.

    பச்சை பதார்த்தங்களிடம் பிரியம் உள்ளவர். பச்சைப் பயறு தானமாகக் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்.

    • ராசி : மிதுனம், கன்னி
    • வஸ்திரம் : பச்சை நிற ஆடை

    வழிபட உகந்த தினம்:புதன்கிழமை

    ராசி :மிதுனம், கன்னி

    திக்கு :வடகிழக்கு

    அதிதேவதை :விஷ்ணு

    பிரத்யதி தேவதை :நாராயணன்

    நிறம் :வெளிர்பச்சை

    வாகனம்:குதிரை

    புதனுக்குப் விருப்பமானவை

    மானியம்:பச்சைப் பயறு

    மலர்:வெண்காந்தள்

    வஸ்திரம்:பச்சைநிற ஆடை

    ரத்தினம்:மரகதம்

    நிவேதனம்:பாசிப்பருப்புப் பொடி அன்னம்

    சமித்து:நாயுருவி

    உலோகம்:பித்தளை

    • காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களாலும் தலபுராணம் இத்திருக்குளங்களை அழைக்கிறது.
    • பூம்புகாரில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இருதடாகங்கள் இருந்தன

    தீர்த்தச் சிறப்பு மிக்கது திருவெண்காட்டுத் தலம் திருக்கோவிலின் உள்ளேயே அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று பெயர்களில் மூன்று திருக்குளங்கள் உள்ளன.

    காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களாலும் தலபுராணம் இத்திருக்குளங்களை அழைக்கிறது.

    உமையின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவன் இங்கு நடனமாடிய போது அவர் சிந்திய மூன்று துளி

    ஆனந்தக் கண்ணீரும் முக்குளங்களாயினவென்றும், பின்னர் அகோரமூர்த்தியின் மூன்று கண்களும் சிந்திய

    நீர்த்துளிகளும், முக்குளத்திலும் முறையே கலந்தனவென்றும் தலபுராணம் கூறும்.

    பூம்புகாரில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இருதடாகங்கள் இருந்தனவென்றும் அவைகளில்

    மூழ்கிக் காமவேள் கோட்டத்தைக் கைதொழுவார் தம் கணவரைக் கூடுவர் என்றும் தேவந்தி என்பவள் கண்ணகிக்கு கூறுகிறாள்.

    அவள் குறிப்பிடும் சோம, சூரிய குண்டங்கள் திருவெண்காட்டு சோம, சூரிய தீர்த்தங்களாக இருந்திருக்கக் கூடும் என்று சிலர் கூறுவர் என்று டாக்டர் உ.வே.சா. சிலப்பதிகாரத்தில் குறிப்பு வரைந்துள்ளார்.

    ×