search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிடிஎப் வாசன்"

    • வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன்.
    • இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள படத்திற்கு மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

    இப்பட பூஜை விழாவில் இருந்தே இப்படத்தின் சர்ச்சையும், கேளி மற்றும் கிண்டல்கள், ட்ரோல் செய்த வண்ணம்தான் உள்ளது. சில நாடகளுக்கு முன் கூட மதுரையில் கார் ஓட்டிக் கொண்டு செல்ஃபோன் பேசிய படி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்பொழுது ஜாமினில் வந்துள்ளார். இப்படி டிடிஎப் வாசன் என்ன செய்தாலும் அது சர்ச்சையாகவே முடியும் வழக்கமாகிவிட்டது.

    இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை  குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஐபிஎல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார்.

    இப்படத்தில் இரண்டாம் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர் மற்றும் அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது வெளியாகிய போஸ்டரில் டிடிஎப் வாசன் மிகவும் கோபமாகவும் அவருக்கு பின்னாடி ஒரு கார் ரோட்டில் இருக்கிறது.

    தலைப்பில் Indian Penal Law{IPL} என குறிப்பிட்டுள்ளது. இப்படம் கார் ரேசிங் தொடர்பான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட டி.டி.எப். வாசனிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சம்மன் வழங்கினர்.
    • டி.டி.எப் வாசன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட டி.டி.எப். வாசனிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சம்மன் வழங்கினர்.

    இதையடுத்து, செல்போனில் பேசிய படி காரை ஓட்டிய வழக்கில் டி.டி.எப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். நிபந்தனை ஜாமினில் வந்த டி.டி.எப் வாசன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    • 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.
    • 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், செல்போனில் பேசிய படி கார் ஓட்டிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி அண்ணாநகர் காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கையெழுத்திட்ட நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் ஆஜராகுமாறு டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். கையெழுத்திட வந்த வாசனிடம் சம்மன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எப்.வாசன் கையெழுத்திட்டார்.
    • அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எப்.வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    அதன்படி முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எப்.வாசன் கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக டி.டி.எப்.வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நேரில் நோட்டீஸ் வழங்கினர்.

    அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எப்.வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கேட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்துள்ளதால் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என டி.டி.எப்.வாசனும், அவரது வழக்கறிஞர்களும் அறிவுறுத்தினர்.

    • செல்போன் பேசி கொண்டே டி.டி.எப். வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
    • வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும்.

    செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.செல்போன் பேசி கொண்டே டிடிஎப் வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலாக நிலையில் காவல்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இவர் மீது ஏற்கனவே வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற வளாகத்திற்கு டிடிஎப் வாசன் போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டார். அப்போது, "வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா? என்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு நீதி வேண்டும்" என்று டிடிஎப் வாசன் கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கின் விசாரணையில் டிடிஎப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "டிடிஎப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை எனவும் சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும். வரும் 4ஆம் தேதி சினிமா பட சூட்டிங் உள்ளது, எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும்" என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

    கார் ஓட்டுநர் உரிமம் பெற LLR மட்டுமே வைத்துள்ள டிடிஎப் வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என்று அரசுத்தரப்பு வாதம் முன்வைத்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி டிடிஎப் வாசன் வீடியோ வெளியிட வேண்டும் எனவும் அதனை கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

    • டிடிஎப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.
    • அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்து வருகிறார்.

    மதுரை:

    பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் படுத்துக்கிடந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதன்பின், டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு ரத்துசெய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டிச்சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்துவிட்டேன் என ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்தும் வருகிறார்.

    இந்நிலையில், பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவுசெய்து யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் டி.டி.எப். வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.
    • வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

    சென்னை:

    யூடியூபர் டி.டி.எப். வாசன் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து 2-வது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டுமென வாசன் தரப்பில் வாதிடப்பட்டது.

    மேலும் வாசனுக்கு ஜாமின் வழங்க காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.

    இதையடுத்து யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 வாரங்களுக்கு தினமும் காவல் நிலையத்தில் டி.டி.எப். வாசன் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • டிடிஎப் வாசனின் யூடிப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கருத்து தெரிவித்தார் இருந்தார்.
    • அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யூடியூர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து.

    யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த மாதம் 19-ந்தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து டிடிஎப் வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, யூடிப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய யூடியூர் டி.டி.எப்.வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் இன்று முதல் 2033 அக்டோபர் 5-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.

    • புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும் என் தெரிவித்தார்.

    சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூ டியூபர் டி.டி.எப்.வாசன், செப்டம்பர் 19ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.எப்.வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கிஷோர்குமார், யூடியூபில் 45 லட்சம் பேர் மனுதாரரை பின் தொடர்கிறார்கள் என்றும், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில், இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை வாங்கி கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள்... சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும் என் தெரிவித்தார்.

    டிடிஎப் வாசன் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, youtube தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி நீதிபதி கார்த்திகேயன் கருத்து தெரிவித்தார்.

    • டி.டி.எப்.வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார்.
    • நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து டி.டி.எப்.வாசனின் ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

    காஞ்சிபுரம்:

    பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் கடந்த 17-ந்தேதி காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் செய்ய முயன்றார். அப்போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21-ந்தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் யூ-டியூபர் வாசன் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்க மறுத்து அவரது ஜாமின் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தார்.

    • காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்றபோது வீலிங் சாகசத்தில் வாசன் ஈடுட்டார்.
    • யூடியூபர் வாசன் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    சென்னை:

    அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி சிறுவர்களையும், மாணவர்களையும் கவர்ந்து வருபவர் டி.டி.எப்.வாசன். இவர் தனது மோட்டார் சைக்கிள் சாகசங்களை யூடியூப்பில் வெளியிட்டு அதன்மூலம் பிரபலமானவர்.

    காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்றபோது வீலிங் சாகசத்தில் வாசன் ஈடுட்டார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் சாலையில் தேய்ந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவர் மீது பாலுச்செட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் யூடியூபர் வாசன் ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அவரது மனு நீதிபதி செம்மல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி யூ டியூபர் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.

    • டி.டி.எப்.வாசன், தனக்கு கைஎலும்பு முறிவு ஏற்பட்ட இடம் மற்றும் இடுப்பு பகுதியில் அதிகம் வலி எடுப்பதாக கூறியதாக தெரிகிறது.
    • சிகிச்சை முடிந்ததும் டி.டி.எப்.வாசன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    ராயபுரம்:

    பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன். இவர் கடந்த 17-ந்தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்தார்.

    அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது மோட்டார் சைக்கிள் பல அடிதூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து டி.டி.எப். வாசனை நேற்று காலை பாலுசெட்டிசத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், மரணம் விளைவிக்கும் வகையில் குற்றம் செய்தல், மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டி.டி.எப்.வாசனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே டி.டி.எப்.வாசன், தனக்கு கைஎலும்பு முறிவு ஏற்பட்ட இடம் மற்றும் இடுப்பு பகுதியில் அதிகம் வலி எடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு டி.டி.எப்.வாசனை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

    அங்கு அவருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    ×