search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 கடைகளுக்கு சீல்"

    • 33 கடைகள் வரி பாக்கி
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் சொத்து வரி, குடிநீர் வரி, கடை வாடகை பாக்கி உள்ளிட்டவைகளை மாநகராட்சி அதிகாரிகள் வசூல் செய்து வருகின்றனர்.

    தற்போது வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் மாநகராட்சி சார்பாக 1200 கடைகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் வரை வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள 33 கடைகளுக்கு ரூ. 35 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் உள்ளனர்.

    வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உதவி வருவாய் அலுவலர் குமரவேல், வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேதாஜி மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு மட்டும் இன்று சீல் வைத்தனர். 

    • ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
    • 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 2022-2023-ம் ஆண்டு க்கான சொத்து வரி, காலி இட வரி, குடிநீர் வரி, வணிக கடைகளுக்கான வாடகை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்தும், மாநகராட்சி வணிக கடைகளுக்கான வாடகை பாக்கி வைத்திருந்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு சொந்த மான நேதாஜி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகள் வாடகை யாக ரூ.97 ஆயிரத்து 965 ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர்.

    மாநகராட்சி அதிகாரிகள் அந்த மூன்று கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணம் செலுத்தாததால் 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    ×