என் மலர்
நீங்கள் தேடியது "webbing"
- சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார்.
- 2 பெண்கள் சூரியகாந்தி பக்கத்தில் அமர்ந்து வந்துள்ளனர்.
விழுப்புரம்:
சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி சூரியகாந்தி (வயது 68). இவர் சம்பவத்தன்று அதிகாலை சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார். அப்போது மேல்மரு வத்தூர் பஸ் நிறுத்தத்தில் 3 பெண்கள் பஸ்சில் ஏறினர். அதில் 2 பெண்கள் சூரியகாந்தி பக்கத்தில் அமர்ந்து வந்துள்ளனர். அவர்கள் செஞ்சி வரும் வரை அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
நாட்டார்மங்கலம் வரும்போது 3 பெண்களும் இறங்கிவிட்டனர். பின்னர் பார்த்தபோது சூரியகாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. இதனை ஓடும் பஸ்சில் 3 பெண்களும் தனது தங்க செயினை அபேஸ் செய்து உள்ளதாக சூரியகாந்தி செஞ்சி போலீசில் கொடுத்தார். அதன் பேரில் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் வழக்கு பதிவு செய்து பெண்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
- திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு சாலையில் தனியார் மெடிக்கல் இயங்கி வருகிறது
- இந்த தனியார் மெடிக்கலை சம்சுதீன் என்பவரின் மகன் சாதிக்பாஷா நடத்தி வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்டு சாலையில் தனியார் மெடிக்கல் இயங்கி வருகிறது. இந்த தனியார் மெடிக்கலை திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் சாதிக்பாஷா நடத்தி வருகிறார் இந்த மெடிக்கல் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், திண்டிவனம் முதன்மை மருத்துவர் சாந்தகுமாரி கொடுத்த புகாரின் பெயரில் திண்டி வனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, ஒலக்கூர் சப்- இன்ஸ்பெக்டர் சசி குமார் மற்றும் போலீசார் தனியார் மெடிக்கலில் விசா ரணை மேற்கொண்டனர்.
மேலும், கடையில் சோதனை செய்ய போலீசார் முயற்சித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் கடையை மூடிவிட்டு சாதிக் பாஷா தப்பிவிட்டார். விசாரணையில் அவர் 10-ம் படித்து விட்டு பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள சாதிக் பாஷாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
- அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- போலீசாரை கண்டதும் இன்னாசி தப்பி ஓடிவிட்டார்
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீசார் அன்னமங்கலம் பகுதியில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த இன்னாசி (வயது 40) என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது அவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் இன்னாசி தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இன்னாசியை வலைவீசி தேடி வருகின்றனர்.
- திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.
- சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவர் திண்டிவனத்திற்கு பஸ்ஸில் வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.பின்பு பஸ்ஸில் வெள்ளிமேடு பேட்டைக்கு வந்தார். அங்குள்ள ஒரு வங்கியில் நெல் விற்ற பணம் 51 ஆயிரத்தை பெற்று பையில் வைத்துக்கொண்டு வெள்ளி மேடை ப்பேட்டையில் உள்ள நிலத்திற்கு மண் பாதையில் நடந்து சென்றார்.
அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் ராதாகிருஷ்ணன் யிடம் தான் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி போலீஸ் தோ ரணையில் ராதாகிருஷ்ணன் வைத்திருந்த பையில் கஞ்சா மது பாட்டல் உள்ளதா என சோதனை செய்தார். சோதனையில் போது அவரின் கவனத்தை திசை திருப்பி பையில் வைத்திருந்த பணத்தை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். மர்ம நபர் சென்ற பின் பையைப் பார்த்தபோது ரூ. 51 ஆயிரம் பணம் காணவில்லை.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் வெளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள்கடந்த சில தினங்களாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சொத்து தகராறில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (வயது 86). விவசாயியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சின்னப்பிள்ளை பெயரில் உள்ள சொத்துகளை பிரித்து தரக்கோரி குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சின்னப்பிள்ளையின் மூத்த மகனான கோவிந்தசாமியின் மகன் இளவரசன்(30), சொத்துகளை பிரித்து தரக்கோரி தாத்தா சின்னப்பிள்ளையிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சின்னப்பிள்ளையிடம் இளவரசன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சின்னப்பிள்ளையை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இளவரசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் அங்கு சென்று சின்னப்பிள்ளையின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளவரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
- திருடர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி திருடர்கள் கையில் சிக்கியது.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மேலப்பழங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது58). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றாா். இந்நிலையில் மர்மநபர்கள் செல்லம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் செல்லத்தின் வீட்டின் எதிரே உள்ள சின்னராஜ்(54) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 2½ பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் சின்னராஜ் வீட்டின் அருகில் உள்ள அன்னபாக்கியம்(70) என்பவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அங்கிருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்தனர். பின்பு அங்கு தூங்கிக்கொண்டிருந்த அன்னபாக்கியம் என்பவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அப்போது எழுந்த அன்னபாக்கியம் நகையை தனது கைகளால் பிடித்து கொண்டு சத்தம் எழுப்பினார், இருப்பினும் திருடர்கள் பிடித்து இழுத்ததில் நகை அறுந்து ஒரு பகுதி திருடர்கள் கையில் சிக்கியது. இதையடுத்து அந்த நகையுடன் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இது குறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியம் போலீசாார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் இருந்த தடயங்கள் சேகரித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை.
- கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். திடீரென்று சிறுமியை காணவில்லை. அதிர்ச்சிடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஒரேநாளில் ஆசிரியை, தபால் ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் பற்றிய விவரம் வருமாறு ;-
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி கே.எம்.ஏ. உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 46). இவர் பொய்யுண்டார் கோட்டையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேப்போல் தஞ்சை விளார்ரோடு நியுபாத்திமா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சுமதி (46). இவர் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பதறியடித்து பார்த்தபோது பீரோவை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் மகேஸ்வரி, கோமதி தனி தனியாக அளித்த புகார்களின் பேரில் தமிழ்பல்கலைக்கழகம் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது வீடுகளிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்தனரா ? அல்லது வேறு வேறு கும்பல் கொள்ளையடித்தனரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. தஞ்சையில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.