என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதீனம்"

    • 80-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
    • தருமபுரம் ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உண்டு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    முன்னதாக தருமபுரம் ஆதீனம் சார்பில் முதல்-அமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, தருமை ஆதீன வானொளி, தொலைக்காட்சி ஒளி ஒலி பதிவகத்தை திறந்து வைத்தும், பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டார்.

    பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில்:-

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 80-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது, முதல்-அமைச்சர் ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.2 லட்சம் கொடுத்து திருப்பணிகளை தொடங்கி வைத்தார் என்றார்.

    தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்:-

    தருமபுரம் ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உண்டு.

    நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல கோவிலின் விடியலுக்கும் சாட்சியாக உள்ளது என பல்வேறு மடாதிபதிகள் பாராட்டி வருகிறார்கள்.

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அரசாக தமிழக அரசு உள்ளது.

    தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் பல்வேறு ஆதீனங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது போதுமானது.

    விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் மகாபாரதி, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயன், ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், ஆதீனம் செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், திருக்கடையூர் கோவில் கூடுதல் கண்காணிப்பாளர் மணி உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மாணவ- மாணவிகள், ஆதீனம் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலம் சுந்தர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 108 புனித பொருட்கள் யாகம் சுமங்கலிகள் வழிபாடு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு நடைபெற்றது.

    மயிலம், செப்.17-

    மயிலம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றஸ்சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலையில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 6 மாத காலமாக கோவிலை புரைமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டி கோவில் புதுப்பிக்கப்ட்டு கோவில் அருகில் யாக சாலை அமைத்து கடந்த 15-ம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் பால சித்தர் வள்ளி தேவசேனா உடனுற சுப்பிரமணியர் வழிபாடு கணபதியாகம் நடைபெற்றது.மாலை 3 மணி அளவில் பூமித்தாய் புதல்வன் வழிபாடு புனித மண் சேகரித்தல் முளைப்பாரி எடுதல் காப்பு கட்டுதல் இறைவனை கலசங்களில் எழுந்தருள செய்தல் முதற்கால வேள்வி நெய் முதலான 108 புனித பொருட்களால் முதற்கால யாகம் நடந்தது. 16-ந் தேதி காலை 8.30 மணி அளவில் புனித ஆ வழிபாடு, 108 புனித பொருட்கள் யாகம் சுமங்கலிகள் வழிபாடு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு நடைபெற்றது.

    108 நெய் முதலான புனித பொருட்களால் 3-ம்கால யாக கேள்விகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு யாக வேள்வி தத்துவங்கள் பூ சித்து இறை மூர்த்தத்தில் சேர்த்தல் நெய் மற்றும்108 புனித பொருட்களால் 4-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து காலை அளவில் புனித கலசங்கள் புறப்பாடு 6.45 மணி அளவில் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் விமான கலசம் மீது மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சுவாமிகள் கோபுர கலசம் மீது புனித நீரை ஊற்றியும் மூலவர் சுந்தர விநாயகருக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மை புற ஆதீனம் 20 பட்டம் சிவஞானபாளைய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • நான் கர்நாடக மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார்.
    • சூரியனார்கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

    குத்தாலம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோவில் ஆதீனம் அமைந்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 54) பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை கடந்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்ட சம்பவம் வெளியாகி வைரலாகியது.

    இதுகுறித்து சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் கர்நாடக மாநிலத்தில் மடம் தொடங்குவதற்கு ஹேமாஸ்ரீ என்ற பெண் இடம் கொடுத்தார். அந்த மடத்தை நிர்வாகம் செய்ய அவரை டிரஸ்டியாக நியமனம் செய்ய ஏதுவாக ஹேமாஸ்ரீயை பதிவு திருமணம் செய்து கொண்டேன். நான் எதையும் மறைக்கவில்லை.

    இதற்கு முன்பு சூரியனார்கோவில் ஆதீனமாக இருந்தவர்கள் திருமணமாகிய பின்னரும் ஆதீனமாக செயல்பட்டு வந்துள்ளனர். சூரியனார்கோவில் ஆதீனத்தில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் காவி வாங்கி ஆதீனகர்த்தராக பதவியில் இருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

    மேலும், 54 வயதாகும் சூரியனார் கோவில் ஆதீனம் திடீரென திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் சூரியனார்கோவில் ஆதீனமும் ஒன்றாகும்.
    • சூரியனார்கோவில் ஆதீனன் திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோவில் ஆதீனம் அமைந்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (வயது 54) பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் பெங்களூருவை சேர்ந்த ஹேமாஸ்ரீ (47) என்ற பெண்ணை கடந்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    ஆதீனகர்த்தராக பதவியில் இருக்கும் ஒருவர் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடாது என ஆன்மீகவாதிகள் மத்தியில் இதற்கு கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்நிலையில், திருமணமானவர்கள் ஆதீனமாக இருக்கக்கூடாது எனக்கூறி மகாலிங்க சுவாமியை சூரியனார்கோவில் ஆதீனத்தை விட்டு வெளியேற்றி மடத்திற்கு பக்தர்கள் பூட்டு போட்டனர்.

    இதனையடுத்து, கும்பகோணம் சூரியனார் கோயில் மடம் மற்றும் சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஆதீனம் ஒப்படைத்தார்

    ×