search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10-ம் வகுப்பு தேர்வு"

    • 10-ம் வகுப்பு தேர்வில் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.
    • 10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20ந் தேதி வரை நடந்தது. இத்தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 312 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 152 மாணவ, மாணவிகளில் 13 ஆயிரத்து 785 மாணவர்கள், 14 ஆயிரத்து 538 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.93 ஆகும். இது கடந்த ஆண்டை விட 5.47 சதவீதம் அதிகம். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.49 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 29வது இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது 18 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் 47 அரசு பள்ளிகள்,1 அரசு உதவி பெறும் பள்ளி, 104 தனியார் பள்ளிகள்,10 சுயநிதி பள்ளி என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    • பறகுக்ம் படை கண்காணிப்பு
    • கலெக்டர் ஆய்வு

    வேலூர்:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 20 முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

    வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் 8 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அறைக்கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9,540 மாணவர்கள், 9,123 மாணவிகள் என்று மொத்தம் 18 ஆயிரத்து 663 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது தடுக்கவும் ஆள் மாறாட்டத்தை கண்டுபிடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 104 தேர்வு மையங்களை கண்காணிக்க 104 முதன்மை கண்காணிப்பாளர்கள், 104 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    அதைத்தவிர கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    வினாத்தாள்கள் 21 வழித்தடங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    தேர்வு தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சரியாக காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது.

    முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கும் 5 நிமிடம் அனுமதி வழங்கப்பட்டன. தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடந்து.

    தேர்வு மையங்களில் இருந்து முன்கூட்டியே மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் இருந்தனர். தேர்வு நடைபெறுவதையொட்டி தேர்வு மையங்களுக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 219 பள்ளிகளை சேர்ந்த 80200 மாணவர்களும் 8,149 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 499 பேரும், தனித் தேர்வர்கள் 844 பேர் என மொத்தம் 17 ஆயிரத்து 253 பேர் தேர்வு எழுதினார். தேர்வு எழுதுவதற்காக 70 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 15,302 மாணவர்களும் 14 ஆயிரத்து 621 மாணவிகளும் என மொத்தமாக 29,923 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.

    இதற்காக மாவட்டத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகள் தேர்வில் வெற்றி பெற வழிபாடு செய்தனர்.

    மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியைகள் வெற்றி திலகமிட்டு வாழ்த்தி தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 219 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 260 மாணவர்களும், 8 ஆயிரத்து 149 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 409 பேரும், தனித்தேர்வர்கள் 844 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 253 பேர் தேர்வு எழுத உள்ளனர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் பள்ளி மாணவர்களுக்கு 67 தேர்வு மையங்களும், தனிதேர்வர்களுக்காக 3 தேர்வு மையங்களும் என மொத்தம் 70 தேர்வு மையங்கள் என மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 133 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79 மையங்களில்8,257 மாணவர்களும், 7,830 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 87 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.

    சேலம்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.

    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.

    மாற்று திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் பங்கேற்க உள்ளனர். அரசு விதிகளின் படி தேர்வு எழுத உரிய சலுகை கள் வழங்கப்பட்டிருந்தன. பொது தேர்வு பணியில் 70 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 71 வழித்தட அலுவலர்கள் , 344 முதன்தமை கண்காணிப்பா ளர்கள், 344 துறை அலுவலர்கள் 5 ஆயிரத்து 859 அறை கண்காணிப்பா ளர்கள் சொல்வதை எழுதுபவர்கள் 844 பேர், 490 நிலையான படையினர், 579 ஆசிரியரல்லா பணி யாளர்கள் நியமனம் செய்ய பட்டு கண்காணித்த னர்.

    சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்கள் பொதுத்தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மனதை இயல்பான நிலையில் வைத்து, வினாக்களுக்கு ஏற்ற விடைகளை தெளிவாகவும், பொறுமையாகவும் எழுத வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவியர்கள் சிறப்பான முறையில் தேர்வுகளை எழுதி வெற்றிபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவ்அர் கூறினார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.

    சேலம் மாவட்டம்

    சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.

    மாற்று திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் பங்கேற்க உள்ளனர். அரசு விதிகளின் படி தேர்வு எழுத உரிய சலுகை கள் வழங்கப்பட்டிருந்தன. பொது தேர்வு பணியில் 70 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 71 வழித்தட அலுவலர்கள் , 344 முதன்தமை கண்காணிப்பா ளர்கள், 344 துறை அலுவலர்கள் 5 ஆயிரத்து 859 அறை கண்காணிப்பா ளர்கள் சொல்வதை எழுதுபவர்கள் 844 பேர், 490 நிலையான படையினர், 579 ஆசிரியரல்லா பணி யாளர்கள் நியமனம் செய்யபட்டு கண்காணித்த னர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வை 20 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் எழுதினர். 300 அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதற்காக மாவட்டம் முழுவதும் 94 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. 94 முதன்ைம கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள் மறறும் கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×