search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு தொகுதி"

    • வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார்.
    • நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் அபார வெற்றிபெற்ற ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வடக்கில் காங்கிரசை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

    இதைத்தொடர்ந்து நடக்க உள்ள மறு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார். ராகுல் காந்தி நம்பி வாக்களித்த வயநாடு மக்களை ஏமாற்றி விட்டார் என்ற குற்றச்சாட்ட்டை பாஜக தொடர்ந்து முனைவைத்து வருகிறது.

    இந்நிலையில் தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் உள்ள மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தங்களின் எல்லையற்ற அன்பையும் நிபந்தனைகளற்ற பாசத்தையும் நீங்கள் என்னிடத்தில் காட்டினீர்கள். அரசியல் கட்சி சார்பு, சமுதாயம், மதம், மொழி ஆகிய்வற்றைத் தாண்டி எனக்கு நீங்கள் எனக்கு ஆதரவளித்தீர்கள். நான் பிரச்சனைகளை எதிர்கொண்டபோது உங்களின் அளவற்ற அன்பு ஒன்றே என்னைப் பாதுகாத்தது.

     

    நீங்களே எனக்கான அடைக்கலம், எனது வீடு மற்றும் எனது குடும்பமும் நீங்கள் தான். என்னை ஒரு நொடி கூட நீங்கள் சந்தேகித்தாக நான் கருதவில்லை. இதுபோலவே மறு தேர்தலில் நிற்க உள்ள பிரியங்கா காந்திக்கு நீங்கள் எம்.பி வாய்ப்பு வழங்கினால் உங்களுக்காக சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 



     


    • ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்
    • பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

    சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடர்கிறார்.

    வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதன்மூலம், பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

    இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை ஆதரித்து மம்தா பானர்ஜி பிரசாரம் சீதா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஜூன் 20 ஆம் தேதி மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். இதனையடுத்து மம்தா பேனர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மம்தா இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டு கூட்டணி கைகூடாமல் போனது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடருவார் என அறிவிப்பு.
    • வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.

    கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும்.

    இந்த சூழலில், ராகுல் காந்தி இந்த இரு தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்பியாக தொடருவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.

    சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடருவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.

    இதனால், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுசு் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதன்மூலம், பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

    இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு, அன்பு என்றும் மறக்க முடியாது என வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    • வயநாடு தொகுதி ராகுலின் இதயத்திற்கு நெருக்கமானது.
    • வயநாடு தொகுதி மக்களுடன் ராகுல் காந்தி நெருங்கிய தொடர்பில் உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றினார். தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதே நேரம் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

    எனவே 2-ல் ஒரு தொகுதி எம்.பி. பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். இதில் வயநாடு தொகுதியை தான் ராகுல்காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை வயநாடு மாவட்ட மற்றும் கேரள காங்கிரசார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக வலியுறுத்த ராகுல் காந்தியை சந்திப்பதற்காக 2 பேர் கொண்ட குழு டெல்லி சென்றுள்ளது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக ராகுல்காந்தி இன்று வயநாடு செல்கிறார். இதற்காக காலை 10.30 மணிக்கு மலப்புரம் மாவட்டம் வந்த அவருக்கு எடவண்ணா பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வயநாடு தொகுதியை தக்க வைக்க அவரை வலியுறுத்த உள்ளதாக ராகுல்காந்தியின் தேர்தல் குழு ஓருங்கிணைப்பாளர் அனில் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வயநாடு தொகுதி ராகுலின் இதயத்திற்கு நெருக்கமானது. ரேபரேலி தொகுதி அவரது குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளது. நாங்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் மத்தியில் தவறான எண்ணம் இருக்க கூடாது. எனவே ராகுல் காந்தி, வயநாடு தொகுதியை தக்க வைக்க வலியுறுத்துவோம். இல்லாத பட்சத்தில் அவருக்கு மாற்றாக பிரியங்கா போட்டியிடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    வயநாடு தொகுதி மக்களுடன் ராகுல் காந்தி நெருங்கிய தொடர்பில் உள்ளார். வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்த விவசாயிகளின் வீடுகளுக்கு, மாநில மந்திரிகள் செல்வதற்கு முன்பாகச் சென்று ஆறுதல் கூறினார். தற்போது அவர் ஒருபுறம் மேல்தட்டு பரம்பரைக்கும் மறுபுறம் முழுக்க முழுக்க பாசத்துக்கும் இடையில் சிக்கி இறுக்கமான இடத்தில் உள்ளார். அவர் வயநாடு தொகுதியை தக்க வைக்க தொடர்ந்து முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார்.
    • மலையோர பகுதிகளில் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.

    2-வது கட்டமாக 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

    அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், மந்திரிகள், நடிகர்களும் ஆர்வமுடன் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். முதியவர்களும், முதல் தலைமுறை வாக்காளர்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்ததை காணமுடிந்தது.

    கண்ணூர் பினராயி அரசு ஆரம்ப பள்ளியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வாக்களித்தார். எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் மம்முட்டி ஓட்டு போட்டார்.

    சில வாக்குச்சாவடிகளில் எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மேலும் எந்திரத்தில் சின்னம் மாறியதாலும் பிரச்சனை ஏற்பட்டது. சில இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும் பிரச்சனை எழுந்தது.

    அந்த வகையில் கண்ணூர் சப்பாரபடா வாக்குச்சாவடியில் கதீஜா என்பவரின் ஓட்டு கள்ளஓட்டு போடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு டெண்டர் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. காசர்கோட்டில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சேர்குளா அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கள்ளஓட்டு போட முயற்சிப்பதாக இடதுசாரி முன்னணி தொண்டர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

    கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மலையோர பகுதியில் உள்ள மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் வந்து யாரும் வாக்களிக்கக்கூடாது என மிரட்டி சென்றனர். ஆனாலும் நேற்று பொதுமக்கள் அந்த தொகுதியில் ஆர்வமுடன் வாக்களித்ததை காணமுடிந்தது. மலையோர பகுதிகளிலும் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. இதனால் ராகுல் தொகுதியில் 71.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது கேரளாவின் மொத்த சதவீதத்தை விட அதிகம்.

    இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சை கவுல் கூறுகையில், ''கேரளாவில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு முன்னதாக வந்தவர்கள், வாக்குப்பதிவு நேரத்தை கடந்த பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்'' என்றார்.

    கேரளாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 159 ஆகும். இதில் மாநிலம் முழுவதும் 70.35 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாவோயிஸ்டுகள் வந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கம்பமலை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
    • மாவோயிஸ்டுகள் கம்பமலை கிராமத்திற்கு துப்பாக்கியுடன் சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கண்ணூரில் உள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அவர்கள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிக்குள் அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மானாந்தவாடி பகுதியில் உள்ள வன அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் அதிரடியாக புகுந்த மாவோயிஸ்டு கும்பல், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியது. மேலும் அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடியது.

    இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள வனப்பகுதிகள் மட்டுமின்றி தமிழக வனப்பகுதிகளிலும் மாவோயிஸ்டு வேட்டை நடத்தப்பட்டது. மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட கம்பமலை பகுதிக்குள் இன்று காலை 4 மாவோயிஸ்டுகள் புகுந்தனர். துப்பாக்கியுடன் வந்த அவர்களை பார்த்த கம்பமலை பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களை பார்த்து வருகிற மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் வலியுறுத்தினர்.

    மேலும் அரசுக்கு கோஷங்களும் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களிடம் தங்களது கருத்துக்களை வெகுநேரம் தெரிவித்தப்படி இருந்த மாவோயிஸ்டுகள் பின்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    மாவோயிஸ்டுகள் வந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கம்பமலை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் துப்பாக்கியுடன் வந்த மாவோயிஸ்டுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மாவோயிஸ்டுகள் கம்பமலை கிராமத்திற்கு துப்பாக்கியுடன் சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோ காட்சியில் மாவோயிஸ்டுகள் 4 பேரின் முகமும் தெளிவாக தெரிகிறது.

    அதன் மூலம் மாவோயிஸ்டுகள் 4 பேர் யார்? என்பதை வனத்துறையினர் அடையாளம் கண்டு உள்ளனர். அதன் அடிப்படையில் கிராமத்துக்குள் வந்த மாவோயிஸ்டுகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • புகார் தொடர்பான வீடியோ காட்சியையும் கொடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுரேந்திரன் ஆகியோரும் களமிறங்கி உள்ளனர். அந்த தொகுதியில் அவர்கள் உள்பட 9 பேர் போட்டியிடுகிறார்கள்.

    வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரான ஆனி ராஜாவுக்கு நடத்தப்பட்ட பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 20-ந்தேதி கல்பேட்டை பகுதியில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் தலைமையில் ஆனி ராஜாவுக்காக பேரணி நடத்தப்பட்டது.

    அந்த பேரணியில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டதாகவும், இது தேர்தல் விதிகளை மீறிய செயல் எனவும் ஆனி ராஜா மீது தேர்தல் ஆணையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது புகார் தொடர்பான வீடியோ காட்சியையும் அவர்கள் கொடுத்துள்ளனர். இது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.
    • முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி அளவில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு மற்றும் கிடைத்த தகவல்களின்படி, முதல் கட்ட தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

    முதல் கட்ட வாக்குப்பதிவு, எதிர்க்கட்சிகளின் தோல்வியை காட்டுகிறது. காங்கிரஸ் ஏற்கனவே தனது தோல்வியை ஒப்பு கொண்டு விட்டது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

    தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி சரிந்து விழும். அந்த கூட்டணியே இருக்காது. அக்கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொள்கிறார்கள். ராகுல் காந்திக்கும், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. 25 சதவீத தொகுதிகளில் இந்திய கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகிறார்கள்.

    எதிர்க்கட்சி கூட்டணி என்பது தங்கள் ஊழல் செயல்களை பாதுகாக்க ஒன்றிணைந்த சுயநலவாதிகள் குழு.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் சிலர் மேல்-சபை தேர்தல் மூலம் பாராளுமன்றத்தில் நுழைய பார்க்கிறார்கள்.


    தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் பயந்து ஓடுகிறார்கள். சில தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தைரியம் இல்லாததால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து வெளியேறி மேல்சபை தேர்தலுக்கு சென்றனர்.

    இந்தியா கூட்டணியின் தலைவர் யார்? என்பதை அவர்களால் மக்களுக்கு சொல்ல முடியாது. காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) அமேதி தொகுதியில் இருந்து ஓடினார். தற்போது வயநாடு தொகுதியில் இருந்தும் ஓடிவிடுவார்.

    வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்திக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அவரும், அவரது குழுவினரும் 26-ந்தேதி வயநாட்டு தொகுதியில் நடக்கும் வாக்குப்பதிவுக்காக காத்திருக்கிறார்கள். அமேதியில் இருந்து தப்பி ஓடியது போல அவர்கள் வயநாட்டை விட்டு ஓடுவார்கள்.

    அமேதியில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி வயநாட்டையும் இழக்க நேரிடும். எனவே அவர் ஏப்ரல் 26-ந்தேதிக்கு பிறகு பாதுகாப்பான இடத்தை தேட வேண்டும்.

    காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்வதற்காகவே எங்களின் அதிக நேரம் செலவழிக்கப்பட்டது. அடுத்த 25 ஆண்டுகள் உலகில் இந்தியாவின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஆண்டாக இருக்கும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்தியது. அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    குடியுரிமை திருத்த சட்டம் இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த சீக்கியர்களின் கதி என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார் ராகுல்காந்தி.
    • ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்றார். அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா களம் இறக்கப்பட்டு உள்ளார்.

    பாரதிய ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி பெரும் எதிர்பார்ப்புக்கு உரிய தொகுதியாக விளங்கி வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரியங்காவுடன் ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார் ராகுல்காந்தி.

    நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரசுடன் கை கோர்த்து உள்ள கம்யூனிஸ்டுகள், கேரளாவில் மட்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. இதனை பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இதற்கிடையில் ராகுல் காந்தி வயநாட்டில் களம் இறங்கியதற்கு இடது சாரி கட்சியும், ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்டு வேட்பாளரை நிறுத்தியதற்கு காங்கிரசும் கண்டனம் தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டன.

    இந்நிலையில் ராகுலுக்கு எதிராக வயநாடு பிரசாரத்தில் இடதுசாரி கூட்டணியினர் பெரும் அளவில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடும் நிலையிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வயநாட்டில் பிரசாரத்தை பெரிதுபடுத்தவில்லை. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், தபன் சென், சுபாஷினி அலி ஆகியோர் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், அவர்கள் வயநாடு தொகுதிக்கு செல்லும் வகையில் பிரசார நிகழ்வு இல்லை. மத்தியக் குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணா மட்டுமே, வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் டி.ராஜா, மத்திய செயலக உறுப்பினரும் ஏ.ஐ.டி.யூ.சி அகில இந்திய பொதுச் செயலாளருமான அமர்ஜித் கவுர் ஆகியோரும் வயநாட்டில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    ராகுலுக்கு எதிராக இடது சாரி கூட்டணியினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது வயநாடு தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி.
    • வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
    • கல்பெட்டா பகுதியில் நடந்த ரோடு-ஷோவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் இருந்தபோதிலும் கேரள மாநிலத்தில் அவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துவிட்டது.

    இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஆனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்தது.

    இந்த விவகாரம் இரு கட்சியினரின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் எதிர் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இதனால் இந்தியா கூட்டணியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரனும் பிரசாரத்தில் குதித்தார்.

    காங்கிரஸ் வேட்பாளரான ராகுல் காந்தி எப்போது பிரசாரத்துக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று கேரளாவுக்கு வந்தார்.

    டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து மூப்பைநாட்டில் உள்ள தலக்கால் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்கு அவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். பின்பு ராகுல் காந்தி அங்கிருந்து கல்பெட்டா சென்றார்.

    கல்பெட்டா பகுதியில் நடந்த ரோடு-ஷோவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் ரோடு-ஷோ சென்றார். அவர்களை சாலையின் இருபுறமும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

    ராகுல் காந்தியின் ரோடு-ஷோ கல்பெட்டா பகுதியில் இருந்து வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது. ரோடு-ஷோவை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி, வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார்.

    அங்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரேணுராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கலை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

    அவர் தேர்தல் பிரசாரத்துக்காக சில நாட்களில் மீண்டும் கேரளாவுக்கு வர உள்ளார். ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில 4.37லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






    • மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், தி.மு.க., ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்துள்ளன.
    • வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளம், 38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகளும், மேற்கில் அரபிக்கடலும் உள்ளது.

    இந்த மாநிலத்தின் தென்கிழக்கில் தமிழ்நாடும், வடகிழக்கில் கர்நாடக மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தை, கடவுளின் தேசம் என்றே அழைக்கின்றனர். கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற பெருமையும் இந்த கேரளத்துக்கு உண்டு.

    கடந்த ஜனவரியில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட கணக்குப்படி மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 326 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 கோடியே 39 லட்சத்து 96 ஆயிரத்து 729 பேர் பெண்கள், 1 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 288 பேர் ஆண்கள் மற்றும் திருநங்கைகள் 309 பேரும் உள்ளனர்.

    மொத்த மக்கள்தொகையில் 54.7 சதவீதம் பேர் இந்துக்களும், 26.6 சதவீதம் பேர் முஸ்லிம்கள், 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

    கேரள மாநிலத்தில் மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கமே நீண்டகாலம் இருந்து வருகிறது. இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.

    பெரும்பாலும் சட்டமன்ற தேர்தலில் ஒரு முறை ஆட்சியை கொடுத்த கட்சிக்கு மறுமுறை ஆட்சி மகுடத்தை கொடுப்பதில்லை கேரள மக்கள். ஆனால் தற்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மட்டும் தொடர்ச்சியாக 2 முறை ஆட்சி பீடத்தை கொடுத்துள்ளனர்.

    2016-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பினராயி விஜயன் முதல்-மந்திரியானார்.

    2016-ல் சட்டசபை தேர்தலில் வெற்றியை கொடுத்த கேரள மக்கள், 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 'கை' கொடுத்தனர்.

    மொத்தம் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளை கைப்பற்றியது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் சொந்த தொகுதி உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி ஆகும். அவருடைய தந்தையும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானார். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

    சொந்த தொகுதியான அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் ராகுல் காந்தி. அதே நேரம் வயநாடு தொகுதி அவருக்கு ஆதரவு கரம் நீட்டியது. அங்கு அவர் அமோக வெற்றி பெற்றார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், தி.மு.க., ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்துள்ளன.

    ஆனால் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் முக்கிய எதிரிகளாக உள்ளதால், இங்கு இந்தியா கூட்டணி அமையவில்லை. இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்களாக பிரிந்து போட்டியிடுகின்றன.

    அத்துடன் பா.ஜனதாவும் களத்தில் உள்ளது. இந்த முறை கேரளாவில் தங்கள் கணக்கை எப்படியும் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களும் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் உள்ளது. இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி சைலஜா குறிப்பிடத்தக்கவர்.

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    காங்கிரஸ் கட்சியும் இந்த முறை தனது முக்கிய தளகர்த்தர்களை களம் இறக்கியுள்ளது. குறிப்பாக தற்போதைய எம்.பி.யான சசிதரூர், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால், முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகன் முரளிதரன் உள்ளிட்டோரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

    வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    இந்த இருகட்சிகளுக்கு இணையாக பா.ஜனதாவும் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், நடிகர் சுரேஷ் கோபி, மாநில தலைவர் சுரேந்திரன், முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மஜா, முன்னாள் முதல்-மந்திரி ஏ,கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் ஆகியோர் மோதுகின்றனர். அங்கு பிரசாரம் அனல் பறக்கிறது.

    தேசிய அளவில் ஒரே கூட்டணியில் உள்ளவர்கள், இங்கு எதிர் துருவங்களாக போட்டியிடுவது, கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதுபற்றி டி.ராஜா கூறும்போது, நமது பொது எதிரி பா.ஜனதா. ஆனால் அதை விடுத்து வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது சரியில்லை என்றார்.

    எது எப்படியோ பசுமையும், குளுமையும் நிறைந்த கேரள மாநிலத்தில், தற்போதைய தேர்தல் களம் தகிக்கிறது.

    ×