என் மலர்
நீங்கள் தேடியது "திருச்செந்தூர் கடல்"
- அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம்.
- இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது.
இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்தக் கோவிலில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இன்று கோவில் கடலானது சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் கடலில் அலைகள் இல்லாமல் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பாறை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.
அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம்.
ஆனால் இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விடுமுறை தினத்தால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்.
கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது.
மேலும், கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
- கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. அதேபோல் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியும் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.
மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கமாக கோவில் கடலானது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சுமார் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினம் என்பதால் இன்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப் பதிவரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. மேலும் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது . இதனால் புனித நீராட வந்துள்ள ஏராளமான பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பதை பார்த்து பக்தர்கள் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.
- இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
- பக்தர்கள் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இந்த கோவில் கடலானது அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் உள்வாங்குவதும் சில நேரங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
இதனால் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்து பச்சை நிற பாசிப்படிந்த பாறையில் வெளியே தெரிகிறது. பக்தர்கள் பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
- மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.
- மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயாமொழி, பரமன்குறிச்சி, தளவாய்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மழை பெய்தது.
இதனால் இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோவில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கோவிலில் குவிந்தனர். அவர்கள் மழையை பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். பின்னர் மழையில் நனைந்தபடியே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.